Thursday 27 January 2022

ஹிட்லர் - ஆசிரியர் பா.ரா



இந்த வருடத்தின் முதல் பதிவாக ஆசிரியர் பா.ரா. அவர்களின் "ஹிட்லர்" புத்தகத்தின் வாசிப்பனுபவத்தினை பகிர்ந்துகொள்கிறேன்.

ஹிட்லர் - உலகமே  அறிந்த ஒரு கொடுங்கோலன் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவரை பற்றிய முழு விவரங்களும் அடங்கிய ஒரு புத்தகம் தான் இது.

ஆசிரியர் இந்த புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் ஹிட்லரின் கடைசி நாட்களை அறிமுகப்படுத்தி நம்மை அதே விறுவிறுப்புடன் ஹிட்லரின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். 

ஹிட்லர் குழந்தைப் பருவம் முதல் அவர் அலைந்து திரிந்த தெருக்கள் மற்றும் அவர் உணவிற்காகப் பட்ட துயரங்கள் என அவரின் இளைமை பருவத்தில் எதிர்கொண்ட பல்வேறு நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாகக் கொடுத்துள்ளார். 

ஹிட்லரின் தந்தை பெயர் "அலாய்ஸ் ஷிக்கெல்கிரபர் " என்பதும் அவரின் வாழ்க்கை முறையினால் தனது இளமைப் பருவத்தில் பட்ட பெரும் துயரமே இவரின் வயதில் ஒரு பெரிய சர்வாதிகாரியாக மாற்றியது என்றால் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஹிட்லர் முதலில் ராணுவத்தில் ஒரு சாதாரண வீரராகத் தான் சேர்ந்தார் அதுவும் அவர் நேரடியாகப் போரிடவில்லை.  பணியில் சேர்ந்து புதிது என்பதால் இவரைத் தகவல் தொடர்பின் பணியினை கொடுத்தார்கள் ஆனால் அந்த பனியின் போது ஒருமுறை காலில் குண்டு பட்டுவிட்டது.

இப்படி எளிமையான ஒரு சிப்பாயாகச் சேர்ந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு தேசத்தின் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரண காரியமாகாது அதுவும் உலகமே பார்த்துப் பயந்து போகும் ஒரு சர்வாதிகாரியாக உருவெடுப்பது என்பது நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு பெரிய காரியம் அதைச் சாதித்தார் பிறகே அதுவே அவருக்குச் சாவு மணியினை கொண்டுவந்தது.

நாஜி என்ற ஒரு கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்சியின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டு தனக்கு எதிராக இருந்தவர்கள் அனைவரையும் முறியடித்து ஒரு புதிய புரட்சியினை மக்களிடம் எடுத்துச் சென்று கொஞ்சமாக ஆட்சி பீடத்தில் அமரும் அளவிற்கு எவ்வாறு வளர்ந்தார் என்பது பற்றிய முழுமையும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

ஒரு இனத்தின் மீது இருக்கும் வெறுப்பானது எந்த அளவிற்கு கொடூரமாக இருக்கும் என்பதற்கு இவர் மட்டும் தான் இதுவரை உலகில் உதாரணமாக இருப்பார் என்றே தோன்றுகிறது. யூதர்களின் வாழ்வில் இவர் நடத்திய இனவெறி தாக்குதல் கொடூரத்தின் உச்சம் ஆனால் எப்படி ஒரு மனிதருக்குள் அத்தனை வன்மம் . ஏன் என்பதற்கு விடையே இல்லை. யூதர்களை வதைமுகாம்களில் இப்படி பல்வேறு பட்ட கொடுமைகளுக்கு இவர் எப்படி நினைத்திருப்பர்.         

ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணமும் அதனால் அவர் புரிந்த போர்களும் என ஒவ்வொரு வரியும் ஹிட்லரின் உண்மையான வாழ்க்கையினை தெரிவிக்கிறது.

ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியன் என பல்வேறு பட்ட பெரிய நாடுகளுடன் தனது எதிர்ப்பை கொண்டு அவர்களை எதிர்த்துப் போரிட முயன்றார் ஆனால் இந்த நாடுகளுடனான போர் தோல்வியில் முடிந்தது இது அவர் ஐரோப்பா கண்டத்தில் செய்த போர்த் தந்திரம் எல்லாம் பலன் கொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.  

எத்தனையோ உயிர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்த ஒரு கொடுங்கோலன், அவர் வளர்ந்துவந்த முழு வாழ்வையும் நமக்கு இந்த புத்தகம் அறிமுகப்படுகிறது என்பது உறுதியாகச் சொல்லலாம்.


ஆனால் உலகில் கொடுங்கோல் தொடர்ந்து  நிலையில்லாமல் போகும் என்பது உண்மையானதுதான்.  அன்று ஏப்ரல் 30, 1945 ஹிட்லர் தனது சாவின் கடைசி தருணத்தில் பகைவரின் நிலையினை எண்ணி அஞ்சி பதுங்கி காதலி ஈவாவுடன் பதுங்குகுழியில்  தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர். 


        

No comments:

Post a Comment