Tuesday 31 August 2021

கசட தபற - இதழ் 1

கசட தபற - இதழ் 1  

முதல் வெளியீடு - அக்டோபர் 1970

ஆசிரியர் : நா. கிருஷ்ணமூர்த்தி 

கிண்டில் பதிப்பு - விமலாதித்த மாமல்லன் 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50


முதலில் இதுபோன்ற பழைய பொக்கிஷங்களை இந்த தலைமுறையினரும் வாசிக்கும் வகையில் மின்னூலாகக் கொண்டுவந்த ஆசிரியர் விமலாதித்த மல்லன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.    

இந்த புத்தகத்தின் நோக்கமே, வளர்ந்து வர நினைக்கும் எண்ணற்ற இளம் எழுத்தாளர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. அதுபோலவே வாணிக நோக்கில் இல்லாமல் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று தனது இலக்கியப் படைப்புகளுடன் எத்தனையோ பதிப்பகங்களின் படிகளில் ஏறி இறங்கி இது நம்மால் முடியாது என்று சலித்துக் கொண்டு வேறேதாவது வழியினை நோக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்த எத்தனையோ பெயர்களின் முகவரியினை மாற்றியமைத்த ஒரு தளமாகவே இந்த கசடதபற இருந்திருக்கிறது என்றால் அது சரியே!!.

புதிய எழுத்தாளர்களின்   சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும்  கொண்டு ஒரு கதம்ப மாலையாக இந்த இதழினை நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.


கசடதபற வின் முதல் இதழின் முதல் பக்கத்திலேயே தனது பார்வையில் தமிழ் எங்கே என்ற  தனது ஆதங்கத்தினை தெரியப்படுத்த வேண்டி "ஞானக்கூத்தன்" அவர்களின் கவிதையான "தமிழை எங்கே நிறுத்தலாம்" என்று ஆரம்பித்திருக்கிறார்.

ந. சுந்தரம் அவர்களின் சிறுகதையான, இப்படியே விட்டுவிடக்கூடாது. - ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இந்த குடும்பத்தின் மூத்த சகோதரரின் வயசுக்கு மற்ற இருவரின் வயசுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது இந்த தலைமுறை இடைவெளியினை மையமாகக் கொண்ட கதை.

சா.கந்தசாமி அவர்களின் , தக்கையின் மேல் நான்கு கண். - இந்த சிறுகதை தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியினை சொல்லுகிறது அதே சமயத்தில் தன் மகள் இந்த பேரனைப் பெற்றுக்கொடுத்துவிட்டு மரணித்துப் போகிறாள். பிறகு அந்த குழியினை தாத்தாவும் பாட்டியும் வளர்க்கின்றனர். பேரனும் தாத்தாவும் மீன் பிடிக்கக் குளத்திற்குத் தூண்டிலுடன் செல்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே  அங்கே நடக்கும் சில நிகழ்வுகள் மற்றும் தன்னை ஏமாற்றிய ஒரு வாளை மீனைப் பிடிக்கமுடியாத கோவத்தை தன் மனைவியிடமும் பேரனிடமும் காட்டுகிறார் அந்த தாத்தா.

ஆர். சுவாமிநாதனின் " ஒரு கம்யூனிஸ்ட்டின் வார்த்தை" என்று கட்டுரையும் மேலும் சில கவிதைகளும் மற்றும் நா. முத்துசாமி அவர்களின் "நாக்கு உரித்த கிளிகள்"  என்ற தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் சக எழுத்தாளர்களைப் பற்றிய ஆவேசமான விமர்சனமும் கூடவே ஆதங்கமும் வெளிப்படுத்தியுள்ளார். 

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

31 ஆகஸ்ட் 2021        

தலித்துகளும் நிலமும் பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு - வாசிப்பனுபவம்

தலித்துகளும் நிலமும்

 பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு 

ஆசிரியர் : ரவிக்குமார் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள்  62 


இந்த புத்தகம், கிட்ட தட்ட மூன்று நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நடக்கும் ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வலியினையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் பற்றிப் பேசுகிறது.

இன்றளவும் பெரும்பாலான கிராமங்களில் சாதியின் அடிப்படையில் தான் நிலம் வாங்கவோ அல்லது விற்கவோ முடியும் என்றால் நாம் அதை நம்பிதான் ஆகவேண்டும் ஏனெனில் கிராமங்களிலிருந்து சாதிகள் அகலவில்லை அதுமட்டுமல்லாமல் ஒரு சாதிக்காரர் மற்றொரு சாதிக்காரருக்கு நிலமோ அல்லது மனையோ விற்பது என்றால் அது என்னமோ பெரிய குற்றச் செயல்கள் போலவே தான் கருதுகின்றனர்.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.  ரவிக்குமார் அவர்கள், இந்த தொகுப்பினை பல்வேறு காலகட்டங்களில் நடந்தேறிய நிகழ்வுகளையும், அரசாங்கம் எடுத்த பல்வேறு அமைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் அவற்றை எவ்வாறு நிலக்கிழார்கள் மாற்றிக்கொண்டார்கள் என்பதையும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

மிராசு முறைகள் இருந்ததும் அவற்றால் மற்ற சாதியினர்கள் அடிமைகளாகவும், அவர்களுடைய நிலங்கள் கைப்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை இழக்கச்  செய்ததும் மட்டுமல்லாமல் அவர்களின் உரிமைகளைப் பறித்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தினார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இதுபோல தரிசு நிலங்களை எடுத்து பல்வேறுபட்ட ஒடுக்கப்பட்ட சாதியினர்களுக்குக் கொடுத்தார்கள் எனவும் அவைகளை மிராசுகள் பிடுங்கிக் கொண்டதும், தரிசு நிலங்களைத் தரிசாகவே வைத்துக்கொண்டு தன்வசம் வைத்துக்கொண்டதும் அதற்காக நடந்தேறிய பல்வேறு போராட்டங்கள்.

திரமென் ஹரீன், அவர்களின்  தரிசு நிலங்கள் பற்றிய அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளையும் பரிசீலனையும் மற்றும் மிராசுதார்கள் வைத்திருந்த தரிசு நிலங்களின் மீதான உரிமையினை மறுபரிசீலனை செய்து நிலம் இல்லாதவர்களுக்குக் கொடுக்க ஆவணம் செய்தார். இதன் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த பல்வேறு சலுகைகளையும் தெளிவாக விளக்கியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசு தாழ்த்த பட்டோருக்கு என ஒதுக்கிய நிலங்கள் எல்லாம் புஞ்சை நிலம் மற்றும் மாவட்டம்வாரியாக எவ்வளவு ஒதுக்கினார்கள் என்றும் அந்த நிலங்கள் எல்லாம் எப்படிப் பிற சாதியினரால் பறிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அப்போது வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் இன்றைய நிலைமையும், மாறி மாறி வரும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எனத் தெளிவான விவரங்களை உள்ளடக்கியிருக்கிறது.  

நீதிபதி கே. சந்துரு, அவர்கள் வழங்கிய ஒரு தீர்ப்பில் "தலித் மக்களுக்கு அரசாங்கத்தால் ஒப்படையைச் செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தினை அதன் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது என்ற நிபந்தனையினை" மேற்கோள்காட்டி மற்றும் இந்த பஞ்சமி நிலங்கள் அவ்வின மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவே தான் கொடுக்கப்பட்டது அதனால் இந்த நிலத்தினை மற்ற மக்களுக்கு விற்கக் கூடாது என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார். பிறகு அந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்தனர் இந்த மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி  "பிரபா  ஸ்ரீதேவன் " மேற்சொன்ன தீர்ப்பையே இறுதியானது என்றும் பஞ்சமி நிலங்களை 10 ஆண்டுகள் அல்ல  விற்கவே கூடாது என்று  தீர்ப்புக் கூறியிருக்கிறார் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் மற்றொரு பஞ்சமி நில வழக்கில், நீதிபதி டி. ஹரிபரந்தாமன் அவர்களும் மேற்கூறிய நீதிபதி சந்துரு மற்றும் நீதிபதி பிரபா தேவன் கொடுத்த தீர்ப்பினையே இந்த வழக்கிற்கும் வழங்கியுள்ளார், இதன் படி பஞ்சமி நிலத்தினை விலைக்கு விற்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனத் தலித் மக்கள் தங்கள் உடைமையிலிருந்த பஞ்சமி நிலம் மற்றவர்களால் பறிக்கப்படுவதை எதிர்த்து நடத்திய பஞ்சமி நில போராட்டங்கள் ஏராளமானவை.

சமூகத்தில் இன்றளவும் இந்த நிலை தீர்ந்தாக தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

தனிமனித உரிமைகளை மற்றொருவர் ஆக்கிரமித்துக் கொள்வதற்கான அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து கலையப்படவேண்டும்.

சுதந்திரம் கிடைப்பது என்னவோ அப்போதுதான்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

31 ஆகஸ்ட் 2021   

   

Saturday 28 August 2021

கிளியோபாட்ரா - வரலாறு

கிளியோபாட்ரா - வரலாறு  

ஆசிரியர் : முகில் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 150

பக்கங்கள் 


இந்த புத்தகம் எகிப்தின் பேரழகி என வர்ணிக்கப்படும் கிளியோபாட்ராவின் வரலாற்றினை பற்றிப் பேசுகிறது ஆனால் இந்த புத்தகத்தில் ரோம் பேரரசின் பெரும் பகுதியும் கிளியோபாட்ராவின் முன்னோர்கள் எனப் பல தலைமுறையின் வரலாற்றினை சிறப்பாகச் சொல்கிறது.

ஆசிரியர் முகிலினுடைய புத்தகங்களில், நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் இந்த கிளியோபாட்ரா.    

கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம், ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம், கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே.

கிளியோபாட்ராவிற்கு முன் என்று அவளின் முன்பான பல தலைமுறைகள் விவரம் காலவரிசையின் அடிப்படையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. இவளின் தந்தை தால்மி மற்றும் அவரின் அரசியல் போக்கு அதற்காக அவர் ரோமில் தஞ்சமடைந்தது பிறகு தனக்கு எகிப்தின் ஆட்சி அதிகாரம் வேண்டித் திரும்பி வந்தது அதற்குத் துணையாக ரோமின் ஜூலியஸ் சீசரின் உதவியுடன் வந்தது என வ வரலாற்றில் நடந்த பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.

அலெக்ஸாண்டரிய வந்த சீசர் முதலில் தால்மிக்குத்தான் உதவ வந்தான் ஆனால் பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு கிளியோபாட்ரா அவனைச் சென்று சந்தித்த தருணத்தில் தனது 52 வயதிலும் அந்த பேரழகியின் மீது கொண்ட கிரக்கத்தால் அவளுக்கு உதவ அவன் அலெக்சாண்டிரியாவிலே தூங்கிவிட்டான்.

இதற்கு இடையே ஏற்பட்ட போர்கள் அவற்றில் வெற்றி பெற்று கிளியோபாட்ராவிற்கே எகிப்தின் ஆட்சி அரியணை கொடுத்துவிட்டு ரோமிற்குத் திரும்பச் செல்கிறான் இதற்கு இடையில் இவர்களுக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்கிறது அதற்கு சிசரியன் என்று பெயர் சூடுகிறாள். அவனை சீசரின் வாரிசாக அறிவிக்க வேண்டி பல்வேறு உத்திகளை கிளியோபாட்ரா செய்கிறாள் ஆனால் இறுதியில் நடக்காமல் போகிறது.

ஒரு கட்டத்தில் சீசர் கிளியோபாட்ராவை ரோமிற்கு அழைக்கிறான் அவளும் அங்கே அரச முறை பயணமாக வரவேண்டும் என்ற உடன்பாட்டின் பெயரில் செல்கிறாள். ஆனால் இந்த பயணம் அவளுக்கு ஏமாற்றத்தினை கொடுக்கிறது ஆம் அந்த பயணத்தின் போது செனட்டில் சீசர்ப்ரூட்டஸ் மற்றும் உறுப்பினர்களால்  கொலை செய்யப்படுகிறான். இந்த செய்தியினை அறிந்த கிளியோபாட்ரா திரும்பவும் எகிப்து விரைகிறாள்.

பிறகு எகிப்து பாதுகாப்பிற்காக சீசரின் நண்பர் ஆண்டனி போர் புரிந்து வெற்றியினை தேடிக் கொடுக்கிறான். இவர்களுக்கு ஆரம்பத்தில் மசியாத காதல் பிறகு இருவருக்கும் இவர்களின் அரவணைப்பும் உதவியும் தேவை இருந்தது இதுவே காதலாக மலர்ந்தது.

சீசரின் அரசியல் வாரிசான ஆக்டேவியஸிடம்  இருந்த வந்த பல்வேறு நெருக்கடிகள் இவர்களை இடையூறு செய்தன. ஆக்டேவியஸ் முன்னேறி முன்னேறி வர வர இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் இறுதியில் இவள் தனது மரணம் எப்படி நடக்கவேண்டும் என்று பல்வேறு விச பரிச்சைகளைச் செய்து பார்த்தாள். ஆனால் ஆண்டனி தற்கொலை செய்துகொள்ள முற்பட்டு அதனைச் செய்தும் இறுதியில் கிளியோபாட்ராவின் மடியில் மரணித்தார் என்கிறது வரலாறு. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவளும் அங்கேயே மரணித்தாள்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

28 ஆகஸ்ட் 2021   

முன்னேற மூன்று சொற்கள்

 முன்னேற மூன்று சொற்கள்  

ஆசிரியர் : டாக்டர் இல. செ. கந்தசாமி   

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 72

பக்கங்கள் 65


டாக்டர் இல. செ. கந்தசாமி அவர்களின் இந்த தன்னம்பிக்கை புத்தகமான "முன்னேற மூன்றே சொற்கள்" ஒரு அருமையான புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் பக்கத்திலே ஆசிரியர் வாசிக்கும் நம்மிடம் அந்த  மூன்று சொற்கள் என்னவாக இருக்கும் என்றும் அவற்றை முதல் பக்கத்திலே எழுதிவைத்துவிட்டுத் தொடங்கச் சொல்கிறார்.  

மொத்தம் 13 கட்டுரைகளாக இந்த புத்தகம் பிரித்து இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு முக்கியமான கருத்தினை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.

ஒருவன் வாழ்வில் முன்னேற விரும்புகிறவனாக இருந்தால் அவன் எப்போது முன்னோக்கிச் செல்வதையே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

நீங்கள் அடைய வேண்டிய இலக்கினை நிர்ணயம் செய்யுங்கள் அந்த இலக்கு ஒன்றாகவே இருக்க வேண்டும் அப்படி ஒரே இலக்கினை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு உங்களுக்கானது மற்றும் நீங்கள் தான் அடையப் போகிறீர்கள் அதனால் நிர்ணயிக்கும் இலக்கானது உங்களுக்கானதாக இருக்கவேண்டும் என்கிறார்.

நமது வாழ்க்கையின் குணநலன்கள் தான் நம் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் அதற்காக நல்ல குணநலன்களைக் கொண்டிருக்கவேண்டும் அதாவது நம்முடைய நிழல் எப்படி இருக்கிறது அதுபோலவே தான் நமது குணங்களைப் பொறுத்து நமது வளர்ச்சியும் நிழலாகவே தொடரும் என்கிறார்.

குறைந்தது நூறு நண்பர்களாவது இருக்கவேண்டும் அதுவும் நமக்குச் சுற்றியுள்ள எல்லாவகையான பிரிவுகளையும் குறைத்து 10 பேரையாவது சம்பாதித்து வையுங்கள் என்கிறார். 

முன்னேற்றம் என்பது ஒருமுறை மரத்தில் ஏறி இறங்குவதேயல்ல அது நிரந்தரமாக உன்னிடம் இருக்க வேண்டும் அதற்காக நீங்கள் செய்யும் முயற்சியும் அந்த நிரந்தர வளர்ச்சியினை அடைவதற்காகவே  இருக்கவேண்டும் என்கிறார்.

வாழ்வில் வெற்றி தோல்வி மாறிமாறி வரும் ஒரு நிகழ்வுதான் ஆனால் அவற்றை எப்படி நிரந்தர வெற்றியாகத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை மிக அழகாகச் சொல்கிறார்.

முக்கியமா மூன்று பண்புகள் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

தீர்மானமான முடிவு 
இடைவிடாத பெரு முயற்சி 
கடினமான உழைப்பு 

தெளிவான முடிவும் அதற்குத் தேவையான திறமையினை வளர்த்துக்கொள்வதும் கூடவே விடாது உழைக்கும் பக்குவமும் ஒருவனுக்குக் கிடைத்து விட்டால் அவன் வளர்ச்சியில் தடையேதுமில்லை என்கிறார்.

எப்படி முன்னேற மூன்று பண்புகள் வேண்டுமோ அதுபோலவே வேண்டாத மூன்று தடையாக இருக்கும் பண்புகளைப் பட்டியலிட்டுச் சொல்கிறார்.

நாவடக்கம் 
வீண் விவாதங்கள் 
வீண் அரட்டை   

எனத் தேவையில்லாத பண்புகளில் நமது நேரத்தினை விரயம் செய்வதைவிட ஆக்கப் பூர்வமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்கிறார்.

நாம் வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் அந்த குறைந்த பட்ச ஆசைதான் ஒவ்வொருவரையும் உந்தி செல்கிறது அந்த ஆசைதான் சுறுசுறுப்பாக இயங்க நம்மை ஊக்கப்படுத்துகிறது.

இறுதியாக அமெரிக்காவிலுள்ள காலப் என்ற நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் கிடைத்த சில விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். 

1. நடைமுறை அறிவு,
2. தனது துறையின் மீதான அறிவு,
3. தன்னம்பிக்கை,
4. புத்திசாலித்தனம்  மற்றும்
5. நீங்கள் எடுத்த செயலினை முடிக்கும் திறன் 

என மேற்சொல்லப்பட்ட ஐந்து விதமான குணங்களும் முக்கியமாக ஒருவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்.

நல்லதொரு தன்னம்பிக்கை தரும் புத்தகம், இந்த புத்தகத்தில் இறுதியில் வெற்றிபெற்றவர்களின் தன்னம்பிக்கையும் அவர்களின் விடாமுயற்சியும் இடம்பெறுகிறது.

ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
28 ஆகஸ்ட் 2021

Friday 27 August 2021

வேடிக்கை பார்ப்பவன் - தன் வரலாறு - கவிஞர் நா. முத்துக்குமார் - வாசிப்பனுபவம்

வேடிக்கை பார்ப்பவன் - தன் வரலாறு 

 கவிஞர் நா. முத்துக்குமார்    

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 147

பக்கங்கள் 285


கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் தன் வரலாறு பற்றிய புத்தகம் தான் இந்த "வேடிக்கை பார்ப்பவன்". ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த தொகுப்பு பிறகு புத்தகமாக வெளிவந்தது.

பொதுவாக எல்லோரும் சுயசரிதைகளில் வாழ்வின் பின்னாட்களில் தான் எழுதுவார்கள் ஆனால் நமது கவிஞர் தனது இளம் வயதிலேயே இந்த வரலாற்றினை எழுதி வைத்துச் சென்றுவிட்டார்.


"காலத்தை வென்று காவியம் படைக்க வந்தவனைக்  
காலன் வென்று காவியத்தை முடித்து வைத்துவிட்டான்"

இந்த புத்தகம் ஒரு மனிதனின் 40 வயதுக்கு முன்னரே தனது  வாழ்க்கையினை  தானே திரும்பிப் பார்த்து தனது வாசகனுக்கும் ரசிகனுக்கும் தான் வேடிக்கை பார்ப்பது போலவே மிக அழகாகவும், உணர்ச்சிகளின் பெருக்காகவும், உறவின் வலிமையுடனும் , நட்பின் உதவிகளும், தந்தையின் தவிப்பும் தானே தந்தையான பிறகு தனக்கேற்பட்ட தவிப்பும் என ஒரு காவியத்தினை தனது மந்திர எழுத்துகளால் வரைந்து வைத்து விட்டுச் சென்றுவிட்டார்.

கவிஞரின் எழுத்துக்கள் போலவே கவிஞரும் நமது உள்ளங்களில் "ஆனந்த யாழினை" மீட்டிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காற்றில் கலந்து வரும் கவிஞரின் வரிகள் எதனையோ உள்ளங்களின் வலியினை போக்கும் வலி நிவாரணியாக இருக்கிறது அந்த காற்றில் தானே நம் கவிஞரின் ஆன்மா கலந்து கிடக்கிறது.

நமது சமகாலத்திலிருந்த ஒரு அற்புத கவிஞனைக் காலன் கடத்தி சென்று விட்டான் நம்மையெல்லாம் காரிருளில் கட்டி போட்டுவிட்டு காலத்துடன் சேர்ந்து காலன் வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான் அதற்காகத்தான் இதற்கு "வேடிக்கை பார்ப்பவன் என்று தலைப்பிட்டானோ நம் கவிஞன்.

காஞ்சிபுரத்தில் உதித்த இன்னொரு சூரியன் இவர். ஒரு தமிழாசிரியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது சிறுவயதிலே தன தாயை இழந்தார்.  தந்தை ஆசிரியர் என்பதால் அதிகளவு புத்தகம் வாசிக்கும் பழக்கும் கொண்டிருந்தார் அதன் விளைவே இந்த கவிஞனின் உதயம் என்று தான் சொல்லவேண்டும். 

இந்த புத்தகம், முழுவதும் இவனாகவே வாழ்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் மிக அழகாகச் செதுக்கிவைத்து இருக்கிறார்.

ஒரு கிராமத்தில் பிறந்த இளைஞன் எவ்வாறு இந்த பரிணாமத்திற்கு வந்தார் என்றால் அது ஒரு சாதாரண காரியமாக இருக்காது ஆம். அப்படியாகத் தன்னை சுற்றி நடந்த ஒவ்வொரு சம்பவத்தினையும் அழகான உரைநடையில் சொல்லிச்சென்றிக்கிறார்.

தனது மகனுடன் நடந்த உரையாடல்கள், மகனிடம் விளையாடிய விளையாட்டுகள், விளையாட்டிற்காகச் சொன்ன பொய்கள் என ஒரு தலைமுறை கதையும் அதே நேரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனது மகனுடன் நேர்ந்த கதைக்குப் பலமாக தனக்கும் தன் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்தையும் ஒப்பிட்டு உணர்ச்சிகளை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

"முன்னுரையில் ஆசிரியர் கூறியிருப்பது 

காற்றில் படபடக்கும் காகிதத்தின் வரிகளைப் போல
மடப்பள்ளியிலிருந்து அரை நிமிடம் பெருமாளுக்குத் திறந்து காட்டும் பிரசாதத்தினைப்  போலக் 
கடந்து செல்லும் ரயிலுக்கு கையாட்டும் சிறுவனைப்போல 

இந்த கட்டுரைகள் என் வாழ்வின் ஒரு சிறு பகுதியினை மட்டுமே சொல்லுகிறது என்கிறார் "       


புத்தகத்தில் மொத்தம் முப்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன, இவற்றில் எதை விட்டு எதைப் பற்றி இங்கே எழுதுவது ஏனெனில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தவிர்க்க இயலாத கதையினை சொல்கிறது.

தனது பள்ளி காலம் தொடங்கி, படிப்பில் இல்லாத ஈடுபாடு எனச் சொல்லி, ஒவ்வொரு கட்டமாகக் கல்வியில் வளர்ந்த வளர்ச்சியும், சிறுவயதில் எழுதிய கவிதைகள் என, அவற்றினை புத்தகமாக வெளியிட ஏறி இறங்கிய எண்ணற்ற பதிப்பகம் எல்லாம் கைவிரித்து விடக் கடைசியில் தன் அப்பாவின் முயற்சியின் கிடைத்த பண உதவியால் "தூசு" என்ற கவிதைத் தொகுப்பு வெளியிட்டனர்.

பிறகு கல்லூரியில் சேர்ந்து "பச்சையப்பன் கல்லூரியின் நாவலர்" என்ற பெருமைக்குரியவராக மாறிய தருணம் அந்த தருணத்திற்காக எழுதிய கவிதை. இதன் தாக்கமாக அணைத்து கல்லூரிகளிலும் நடக்கும் எல்லா வித போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றிபெற்ற தருணங்கள்.

திரைத்துறையில் தடம் பதிக்கப் பட்ட பல்வேறு தடைகள் அவற்றிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்த வாழ்க்கையின் சுவாரசியம். அண்ணன் அறிவுமதியின் அரவணைப்பும் அதன் விளைவாக ஏற்பட்ட பல்வேறு கவிஞர்களின் நேரடி தொடர்பும், முக்கியமாக பாலுமகேந்திராவின் அறிமுகம் அவரின் வழியாக பாரதிராஜா அவர்களின் தொடர்பும் அப்படியே இவனின் கவிதைத் தொகுப்பான "பட்டாம் பூச்சி விற்பவன்" என்ற தொகுப்பினை தனது சொந்த செலவில் வெளியிட்டுக் கொடுத்ததும் மட்டுமில்லாமல் அதே வேளையில் இருநூறு பிரதிகளுக்கு முன்பதிவு செய்து அதை வாங்கி எல்லோருக்கும் தன கையெழுத்திட்டுக் கொடுத்தார் என்ற மிக அருமையான ஒரு நிகழ்வு.

பட்டுக்கோட்டை பிரபராகரிடம் பணிபுரிந்த தருணங்கள்,  தொலைக்காட்சி தொடரில் பணிபுரிந்த அனுபவங்கள், திருவல்லிக்கேணி மேன்ஷன் வாழ்க்கை அங்கே கிடைத்த அனுபவங்களும் பசியும், பாட்டி வீட்டிற்கே சென்றது என தனக்குக் கிடைத்த ஒவ்வொரு தருணத்தினையும் தவறாமல் ஆவணம் செய்திருக்கிறார்.

ஒரு நாளில் தான் தனது சிறுவயது குழந்தை போலவே மாறிப்போன நிகழ்வும் அதற்காக ஏற்பட்ட அணைத்து விதமான உணர்வுகளும் அதற்காகப் படைப்பாளி சி. மோகன் அவர்களிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல், அந்த நேரத்தில் லிங்குசாமி பாடல் மெட்டுக்காக வெளிநாட்டிற்குப் போகவேண்டும் என்று சொன்னதும் அதற்காகச் சங்கடப்பட்டதும் ஆனால் எல்லாம் தூங்கி எழுந்த மறுநாள் மாயமாகப் போனதும் உற்சாக பட்ட தருணம் என எண்ணற்ற தருணங்களைத் தவறாமல் 

பச்சையப்பன் கல்லூரியில் எம் ஏ படித்து முடித்து விட்டு பிறகு அங்கேயே எம் பில் படிப்பினை தொடர ஆரம்பித்தார் அதற்கு உதவித்தொகை  கிடைத்து பிறகு சென்னை பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்ததும் அப்போது எம் ஏ வகுப்பிற்குப் பாடம் நடத்தியதும், ஒரு நாள் தந்து தந்தை வந்து தன் மகன் நடத்திய வகுப்பினை ரகசியமாக சன்னலோரமாக இருந்து வேடிக்கை பார்த்தது என அருமையான தருணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

இறுதியாகத் திரைப்படத்திற்கு முதல் முதலில் பாடல் எழுத இயக்குநர் அண்ணன் சீமானின் வீரநடை என்ற திரைத்துறையில்  கொடுத்த வாய்ப்பு அங்கிருந்து வீரநடை போட தொடங்கியது நம் கவிஞனின் திரைப் பாடல் வரிகள் பல்வேறுபட்ட மனிதர்களின் வலிகளையும் உணர்வுகளையும் பதிய வைத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிக் கொடுத்திருக்கும் ஒவ்வொரு வரிகளும் மிகச் சிறப்பானது. முப்பது விதமான கருத்துக்களை கச்சிதமாகத் தொகுத்துள்ளார்.        

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
27 ஆகஸ்ட் 2021 

Tuesday 24 August 2021

இரும்பு கை மாயாவி - லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு - வாசிப்பனுபவம்

இரும்பு கை மாயாவி - லட்சுமி மிட்டல் 

வாழ்க்கை வரலாறு  

ஆசிரியர் : என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 100

பக்கங்கள் 194



இந்த புத்தகம் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை மிகத் தெளிவாகச் சொல்கிறது. அவர் பிறந்தது முதல் அவர் சூடிய வெற்றிமாலைகள் என ஒரு பிரமிக்க வைக்கும் வாழ்வின் வளர்ச்சியினை நம்மால் உணரமுடிகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இவர்கள் ராஜஸ்தானில் வந்து குடியேறினார்கள் இதற்கு முன்பு பழைய இந்தியாவின் ஒரு பகுதியான தற்போதைய பாகிஸ்தானில் இருக்கிறது. கராச்சியில் லட்சுமி மிட்டலின் தாத்தா மற்றும் அப்பா மோகன்லால் மிட்டல் தரகு வேலை பார்த்து வந்தார்கள்  இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது ராஜஸ்தானில் வந்ததற்குப் பிறகு தான் லட்சுமி மிட்டல் பிறந்தார்.

1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி ராஜஸ்தானில் உள்ள சாரு மாவட்டத்தில் இருக்கும் சடல்பூர் என்ற கிராமத்தில் லட்சுமி நாராயண் மிட்டல் பிறந்தார். சடல்பூரில் இவர்கள் வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரம் ஈட்டமுடியாததால்  இடம்பெயர நேரிட்டது.       

பிழைப்பிற்காக இவர்கள் கிராமத்தினை விட்டு பெருநகரமான கல்கத்தாவிற்கு  வந்து சேர்ந்தனர். இங்கு இவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் கிடையாது அதுமட்டுமல்ல மேலும் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமலே இங்கு வந்து சேர்ந்தார்கள்.  

முதலில் 1951 ல் மோகன்லால் மிட்டல் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வாங்கிய இரும்பு ஆலை "பிரிட்டிஷ் இந்தியா ரோலிங் மில்" -இந்த ஆலையினை வாங்கினார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் இரும்பு தொழிலில் தனியார் முதலீடு செய்வது ஒன்றோ அல்லது இரண்டோ என்று தான் சொல்லவேண்டும் ஆனால் அந்த நிலைமையில் இவர்கள் துணிவாக எடுத்த முடிவுதான் இவர்களை உலகமே பேசும் அளவிற்கு இரும்பின் சாம்ராஜ்யத்தினை கட்டிக் காக்கவைத்தது என்றே சொல்லலாம்.

இந்த காலகட்டத்தில் அப்பாவிற்குத் துணையாகத் தனது படிப்பு முடிந்தவுடன் லட்சுமி மிட்டல் ஆலைக்குச் சென்று விடுவார். தினமும் இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் அதன் பேரில் தனது சிறு வயதிலே இவர் உழைக்க ஆரம்பித்தார். உழைப்பும் படிப்பும் சேர்ந்தே அவர் வளர்ந்து வந்தார்.

இதற்கிடையில் இவரின் சகோதரி திருமணம் முடிந்தது அவள் இந்தோனேசியாவிற்குக் குடிபெயர்ந்து விட்டார். இந்தியாவில் தனியார் முதலீடு செய்ய நெருக்கடி வந்ததால் தங்களது தொழிலினை வெளிநாடுகளில் தொடங்க திட்டமிட்டார் மோகன்லால் மிட்டல்இதற்காக இந்தோனேசியாவில் கொஞ்சம் நிலம் வாங்கி வைத்தனர்.

லட்சுமி மிட்டல் தனது திருத்தத்திற்குப் பிறகு இந்தோனேசியாவிற்கு வந்து இந்த புதிய ஆலையினை ஆரம்பித்தார். இதுதான் லட்சுமி மிட்டல் தனது முழு தொழில் திறமையினை சோதித்துப் பார்க்க நேர்ந்த இடம். தனக்கு இது புதியதாகவே இருந்தது. இந்த ஆரம்பம் தான் இவரை உலகமெல்லாம் அடியெடுத்து வைக்கத் தூண்டியது.

"இஸ்பாத்" - இதுதான் இவர்களின் நிறுவனத்தின் பெயர்.  இந்தோனேசியாவில் ஆரம்பித்த ஆலையின் பெயர் "இண்டோ இஸ்பாத்". இந்த ஆலையின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களைப் பெறுவதில் ஏற்பட்ட இடையூறுகளில் ஒரு சில இவரின் சாதகமான முடிவாகவே திகழ்ந்தது. பழைய இரும்புகளை வாங்கி அதை உருக்கித் தான் இரும்பு செய்யவேண்டிய சூழல் இருந்தது அப்போது பழைய இரும்பின் விலையினை இடைத் தரகர் நிர்ணயித்துக் கூடிக்கொண்டே இருந்தான். இதன் விளைவாக இவர் தேட ஆரம்பித்த மூலப்பொருள்தான் ஒரு புதிய முயற்சிக்கு வழி கொடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் - ல் இருக்கும் "டிரினிடா டொபகோ" என்ற தீவில் இருக்கும் ஒரு ஆலையிலிருந்து தான் இவர்கள் புதிய மூலப்பொருள் கிடக்கிறது ஆனால் அப்போது இந்த ஆலை நசுங்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அதை பத்து வருடக் குத்தகைக்கு எடுத்து நடத்த ஓர் வாய்ப்பு கிடைத்தது அதை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டார் லட்சுமி மிட்டல். அதுமட்டுமல்லாமல் பத்து வருடம் முடிந்த பிறகு இவர்கள் நடத்தும் முறையினை பார்த்து விட்டு இவர்களுக்கே கொடுக்கலாம் என்ற முடிவும் எடுக்கலாம் என்ற ஒரு வாய்ப்புடன் ஆரம்பித்தார். நஷ்டத்திலிருந்த இந்த ஆலை லாபமாக மாறியது அதுமட்டுமல்லாமல் ஐந்து வருட முடிவிலே இந்த ஆலையினை லட்சுமி மிட்டல் முழு விலைக்கு வாங்கிவிட்டார்.

இந்த காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினையில் இவர் வெளிநாடுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவில் இருக்கும் முதலீடுகள் எல்லாம் மற்றவர்களுக்கு என்று முடிவானது. 

பின்னர் மெக்சிகோ அரசிற்குச் சொந்தமான "சிகார்ட்ஸா" , அடுத்து கனடாவில் "சிட்பெக்",  கஜகஸ்தானில் இருக்கும் காரகண்டாவில் இருக்கும் ஆலை பிறகு ஜெர்மனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்கள் என இவரின் குழுமம் பெருத்துக்கொண்டே போனது. 

ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் பெரிய ஆலையான இன்லேண்ட் ஸ்டீல் நிறுவனத்தையும் வாங்கினார். தொடர்ந்து கூடிக்கொண்டே போன குழுவின் வளர்ச்சி உலகளவில் இரண்டாவதாக இவரின் இரும்பு உற்பத்தி வந்தது ஆனால் லட்சுமி மிட்டல் மனதுக்குள் ஒரு புதிய அல்லது ஏற்கனவே இருந்த ஒரு கனவுதான் உலகளவில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையினை நிறைவேற்ற இன்னும் ஒரே ஒரு நிறுவனம் தான் இருக்கிறது அதையும் வாங்கிவிட்டால் என்ன என்ற எண்ணம் மனதில் கிளம்பி அதற்கான பெரும் முயற்சிகள் எடுத்து பிறகு அது சில காரணிகளால் தடை பட்டுப்போனது ஆனால் பிறகு அதுவும் அவரின் வசம் வந்து விட்டது.

தொடர்ந்த சென்ற வெற்றிப் பாதையில் இடையே சிறு சிறு சறுக்கல்களும் வந்தது, சில நேரத்தில் எல்லா முடிவுகளும் வெற்றியினை நோக்கிச் செல்வதல்ல அதைப்போல இரண்டு நிறுவனத்தை வாங்கியதால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.

2005 ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார் அது பெரிய சாதனை தான். இவற்றுக்கு எல்லாம் அவரின் கடின உழைப்புதான் காரணம் என்றால் அது தவறேதுமில்லை. சதா எந்நேரமும் உழைப்பின் வளர்ச்சியினை சிந்தித்துக் கொண்டே இருப்பவர்களில் இவரும் ஒருவர்.

இவர் ஒரு நொடித்துப் போன ஆலையினை வாங்குவதற்கு முன்பு செய்யும் முக்கியமான வேளைகளில் ஒன்று தந்து குழுவினை அனுப்பி எல்லாவற்றையும் கணக்கு எடுத்துக்கொண்டு அவற்றுக்கு மீண்டெழ வழி இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியினை நடத்தி ஒரு முழு செய்யக் கூடிய விதத்தில் அறிக்கை எடுத்துக்கொள்வார் பிறகு அதற்குத் தேவையான எல்லாவகையான காரியத்திலும் ஈடுபட்டு அதே வகையில் அவற்றினை செயல்படுத்துவர் அதுதான் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள்.   

உலகளவில் இன்று ஒரு பெரிய இரும்பு சாம்ராஜ்யத்தினை நடத்தி வரும் இந்த லட்சுமி மிட்டல் நமக்கெல்லாம் ஒரு பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

25 ஆகஸ்ட் 2021 

+1 ஒவ்வொரு படியாக முன்னேறலாம் - வாசிப்பனுபவம்

+1  ஒவ்வொரு படியாக முன்னேறலாம் 

ஆசிரியர் : என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள்  79


வாழ்க்கையில் சுயமாக முன்னேற விரும்பு ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய  புத்தகம் இது. நம் முன்னேற்றத்திற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது என்பதினை மிக எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்கிறது இந்த புத்தகம்.

"+1 ஒவ்வொரு படியாக முன்னேறலாம் - வெற்றிக் கதவுகளைத் திறக்கலாம்" - இந்த புத்தகம் முன்னேற்றத்திற்கான வழிகளைச் சொல்கிறது. மொத்தம் 10 கட்டுரைகளாகப் பிரித்து எளிமையான நடையில் விவரித்துள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு இலக்கினை அடையவேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுப்போம் அது ஒவ்வொரு வருடமும் முதல் நாள் நாம் எடுக்கிற அதே இலக்கு தான் ஆனால் பெரும்பாலும் அந்த இலக்கு நிலையாகவே இருக்கும் நாம் அதை அடையாமல் இருப்போம் அதற்கு நம் மனதில் தோன்றும் எல்லாவற்றையும் தடையாக நினைத்துக் கொள்வோம் ஆனால் நம் பக்கம் இருக்கும் தோல்வியினை ஒத்துக்கொள்ள நம் மனம் ஏனோ மறுக்கிறது. இதுதான் நமது முன்னேற்றத்தின் முதல் தடை என்கிறார் ஆசிரியர். எப்போதும் நமது இலக்கினை அடைய ஒரு எடுக்க வேண்டிய செயல்களைத் திட்டம் தீட்டி நடக்க வேண்டும்.

"டாஸ்க் பட்டியல் அல்லது டு டூ பட்டியல்"  - சிலர் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை எழுதிவைத்து அதன் ஒவ்வொரு செயலையும் அதற்கு ஏற்ற முன்னுரிமையுடன் செயல்படவேண்டும்.

நாம் நமது இலக்குகளை அடைவதற்குத் தெளிவான சிந்தனையுடன் முயலவேண்டும். அதற்கான எல்லா வகையில் கிடைக்கும் தகவல்களைத் திறம்படத் தேர்ந்தெடுத்துத் தெரிந்துகொள்ளவேண்டும். எவ்வாறு தெரிந்து கொள்வதென்று தயக்கம் இல்லாமல் எந்த வழியில் நாம் அந்த தகவலினை திரட்டலாம் என்ற எண்ணத்தினை மனதில் ஓட்டி பார்க்கவேண்டும்.

நாம் எடுக்க வேண்டிய முடிவினை சரியாகவும், தரமாகவும் எடுக்க வேண்டும். அந்த முடிவில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நம்முடைய முடிவாகவே இருக்கவேண்டும். எப்போதும் நம்மால் ஒரு சுயமான முடிவினை எடுக்க முடியவில்லை என்றால் நாம் மற்றொருவரின் முடிவில் தான் பயணிக்க வேண்டியிருக்கும் அதனால் முடிவெடுப்பது பற்றி நன்கு ஆலோசிக்க வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் பேச்சுக்கள் ரத்தின சுருக்கமாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் சொல்லவேண்டிய கருத்தினை விடாமல் சொல்லிவிடவேண்டும். கேட்பவர்களைக் குழப்பவும் கூடாது அதே நேரத்தில் சொல்கிற நாமும் குழம்பிவிடக்கூடாது.

நம்மிடம் எப்போதும் இந்த ஏழு கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும் அதாவது 1. என்ன? 2. ஏன்? 3. எப்போது? 4. எப்படி? 5.எங்கே?  6. யார்? & 7.எவ்வளவு. இந்த கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைத்துவிட்டால் நாம் அடைய வேண்டிய இலக்கினை பாதி அடைந்துவிட்டோம் என்றே சொல்லாம்.

நாம் வீணடிக்கும் நேரத்தினை அதற்குச் சமமாக உள்ள பணமதிப்பும் மற்றும் அந்த நேரத்திற்கான மதிப்பினையும் சரியாக மதிப்பிடவேண்டும் அதன் படி நேரத்தினை விரயமாக்காமல் செயல்பட்டால் நம் எண்ணங்கள் போலவே நாம் முண்டேற்றமடைவது நிச்சயம்.

நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அவற்றைச் சரியாகச் செய்கிறோமா இல்லையா என்ற கண்காணிப்பு அவசியம். அதற்காக நமக்கு நாமே கண்காணித்துக் கொண்டு செயல்பட்டால் சிறப்பாக முன்னேற வழிகிடைக்கும். நாம் எங்கே பின்தங்கியுள்ளோம் அல்லது எவ்வாறு மாற்றிப் பயணிக்கலாம் என பல்வேறு வழிகள் நாம் கண்காணிக்கும் போது கிடைக்கும்.

நாம் வாழும் காலத்தில் இருக்கும் அணைத்து வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்கள் என எல்லாவற்றிலும் நம்மை தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

24 ஆகஸ்ட் 2021

Monday 23 August 2021

அஜிம் ப்ரேம்ஜி (விப்ரோ) வரலாறு - வாசிப்பனுபம்

 அஜிம் ப்ரேம்ஜி 

விப்ரோ வரலாறு 

ஆசிரியர் என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

பக்கங்கள் 80

விலை ரூபாய்  49


என். சொக்கன் அவர்கள் எழுதும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின்  வரலாற்றுக் கதைகள் வாசிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அதிகளவு விவரங்களும் சேர்ந்த ஒரு அருமையான தொகுப்பாக இருக்கிறது.  

இந்த புத்தகம் "விப்ரோ நிறுவனர் அஜீம் ப்ரேம்ஜிஅவர்களைப் பற்றிய அருமையான தொகுப்பு. அஜிம் ப்ரேம்ஜிகுழந்தைப் பருவத்திலிருந்து அவரின் ஒவ்வொரு முன்னேற்றமாக மிகத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்.

1945 இல் மும்பையிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ‘அமல்னெர்’  என்ற கிராமத்தில் தனக்கென ஒரு தாவர எண்ணெய் மற்றும் வனஸ்பதி தயாரிக்கும் தொழிற்சாலையினை அஜிம் ப்ரேம்ஜியின் தந்தையான "முஹம்மத் ஹுஸைன் ஹஷம்" ஆரம்பித்தார். முதலில் சிறிய தொழிற்சாலையாகத்தான் தொடங்கப்பட்டது. நன்றாக நடந்து கொண்டிருந்த இந்த தொழிற்சாலையில் இவர்களின் முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே இருந்தது.

இவர்களின் குடும்பம் அரிசி மொத்த விற்பனையினை தொடர்ந்து செய்துவந்தனர். இவர்களின் குடும்பம் முழுவதும் உழைப்பை மட்டுமே நம்பி வளர்த்தவர்கள்.இந்த வரிசையில் "அஜிம் ப்ரேம்ஜியும் விதி விலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார் அஜிம் ப்ரேம்ஜியும்.

எதிர்பாராத சம்பவத்தால் அதாவது அப்பா மறைந்து போனதும் அவர்களின் தொழிற்சாலையினை அஜிம் ப்ரேம்ஜி ஏற்று நடத்தவேண்டிய சூழல். தவிர்க்க முடியாமல் பொறுப்பினை ஏற்றுத் தனது தொழில் வாழ்க்கையினை ‘அமல்னெர்’  என்ற அந்த கிராமத்தில் ஆரம்பித்தார்.

ஒரு சிறிய தாவர எண்ணெய் நிறுவனத்தின், அதாவது "வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் புராடக்ட்ஸ் லிமிடெட்விப்ரோ என்ற பெயர் வைத்தனர். இந்த நிறுவனத்திலிருந்து இன்று உலகளவில் விப்ரோ நிறுவனத்தின் சேவை பரவியிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாடு இரண்டாகப் பிரிந்த போது  "முஹம்மத் ஹுஸைன் ஹஷம்" அவர்களைப் பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தும் எனது நாடு இந்திய நான் இங்குதான் பிறந்தேன் இங்கே தொடர்ந்து வாழவிரும்புகிறேன் என்று பதில் சொல்லிவிட்டு இங்கே தனது மீதம் வாழ்வினை வாழ்ந்து சென்றார்.

அஜிம் ப்ரேம்ஜி, எளிமையான வாழ்வினை அதிகம் விரும்புகிறவர். நிறுவனத்தில் கூட அனாவசிய செலவுகளை தவிர்த்துத்தான் மற்ற செலவினங்கள் நடைபெறும். இதுவே இவர்களின் வியாபாரத்தின் வெற்றிக்கு வித்தான வழியாக இருந்திருக்கிறது.

அம்மாவின் செல்லப் பிள்ளையான அஜிம் ப்ரேம்ஜி எப்போதும் அம்மாவின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததே கிடையாது. தனது தந்தை இறந்த பிறகு வெளிநாட்டுப் படிப்பினை விட்டுவிட்டு தங்கள் தொழிலினை ஏற்று நடத்தச் சொன்னதும் இந்த தொழிலுக்குப் புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் தன் மகன் அஜிம்ஜிக்கு, தங்கள் தொழில் சார்ந்த  சில அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்துப் பொறுப்பினையும் கையில் கொடுத்துத் தொடங்கிவைத்துக் கூடவே ஒரு விஷயத்தில் உனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அதைப்பற்றி மற்றவர்கள் என்ன விமர்சனம் சொல்வார்களோ என்று யோசிக்காதே. எப்போதும் உன் இலக்கினை நோக்கிப் பயன்படு என்று அறிவுரையும் சொல்லிக் கொடுத்தார் அம்மா.  

இந்த புதிய ஆரம்பத்திலிருந்து அந்த நிறுவனத்தினை ஒரு பெரிய வெற்றியின் சிகரத்திற்குக் கொண்டு சென்ற அஜிம் ப்ரேம்ஜிக்கு எத்தனை விதமான இடையூறுகள். முதலில் அவரின் நிறுவனத்தில் பணி புரிந்துவந்த மூத்த நிர்வாகிகளிடம் இருந்தும் மேலும் பங்குதாரர்களிடமிருந்தும்  வந்த எதிர்மறையான விமர்சனம் எனத் தொடங்கி     அந்த விமர்சனத்தினை எதிர்கொண்டு வெற்றி நடை போடவேண்டும் என்ற ஒரு விதையினை அவரின் மனதில் விதைக்க ஆரம்பித்த காலம் தான் அவரின் முதல் பங்குதாரர்களின் கூட்டம் தான் என்றே சொல்லவேண்டும். 


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

23 ஆகஸ்ட் 2021

Sunday 22 August 2021

ரத்தன் டாடா - வாசிப்பனுபவம்

ரத்தன் டாடா 

வாழ்க்கை வரலாறு 

ஆசிரியர் : என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 100

பக்கங்கள்  201 


இந்த புத்தகம் தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை மிகத் தெளிவாகவும், அருமையான மொழிநடையுடனும் மிக நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்.சொக்கன் அவர்கள்.

ரத்தன் டாடா அவர்களின் ஆரம்ப நாள் முதல், அவர் வாழ்க்கையினை ஒவ்வொரு அடி எப்படி எடுத்து வைத்தார் என்று சொல்லும் இந்த புத்தகத்தின் சில சுவையான தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

150 வருடங்களுக்கு மேலாகச் சாதனை படைத்தது கொண்டிருக்கும் டாடா குழுமம். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலும் காலூன்றி இருக்கும் இந்த குழுமத்தின் ஆணிவேராக இருந்தவர் ஜே ஆர் டி என எல்லோராலும் அழைக்கப்படும் ஜாம்செட்ஜி. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து  1868 ஆம் ஆண்டு 21,000 ரூபாயுடன் ஒரு வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்தார்.     இந்த புள்ளியில் ஆரம்பித்து அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தினை மெல்ல மெல்லப் பரவி தனது பெயரினை நிலை நாட்டினார்.

ஆரம்பத்தில் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்து வியாபாரம் செய்தவர், இதிலிருந்து நமக்குத் தேவையான பொருள்களை நம் தேசத்திலே தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பித்து செகண்ட் ஹாண்ட்டில் வந்த ஒரு எண்ணெய் ஆலையினை வாங்கி அதை நெசவாலையாக மாற்றி தனது உற்பத்தி பயணத்தினை ஆரம்பித்தார்.

ரத்தன் டாடா, தனது சிறுவயது முதல் பெரிய செல்வச் செழிப்பாகவே வாழ்ந்து வந்தவர், ஆனால் அவருக்கு அந்த ஆடம்பர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு சாதாரண வாழ்க்கையினை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு அவருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு அமெரிக்காவிற்குப் படிக்கப் போகவேண்டும் அப்படிப் போனபோது அங்கே ஓய்வு நேரங்களில் கிடைத்த வேலைகளைச் செய்து தனக்குத் தேவையான சம்பாத்தியத்தினை திரட்டிக்கொண்டு தன் மனதின் ஆசைப்பட்ட வாழ்க்கையினை வாழ ஆரம்பித்தார். படிப்பை முடித்து அங்கேயே வேலை பார்க்கத் தொடங்கியவர் பிறகு பாட்டியின் உடல்நலத்தில் ஏற்பட்ட தொய்வால் இந்தியாவிற்குத் திரும்பி வந்தவர் பிறகு இங்கேயே புதிய வாழ்வு தொடங்க ஆரம்பித்தார்.

டாடா குழுமத்தில், குடும்பத்தில் இருக்கும்  யாருக்கும் சுலபமாக வேலை கொடுத்துவிடமாட்டார்கள். ஜே ஆர் டி அவர்களால் முதலில் ரத்தன் அவர் படித்த படிப்பு தகுந்தாற்போல ஒரு சிறிய வேலை கடைநிலை ஊழியராகக் கொடுத்து குழுமத்தில் அவரை சேர்த்துக்கொண்டார். இங்கிருந்து ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பிறகு நட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு துறையில் பொறுப்பாக கொடுக்கப்பட்டது.

ஒரு கடைநிலை தொழிலாளியாக ஆரம்பித்து முன்னேறி வரும் ஒரு தனி மனிதனை எத்தனையோ இடையூறுகள். தனக்கு வந்த அத்தனை இடையூறுகளையும் நிதானமாக எதிர்கொண்டு தனது குறிக்கோளான வெற்றியினை மட்டும் நோக்கி பயணத்தினை நடத்தியவர். இவரின் வளர்ச்சியும் இவரிடம் இருக்கும் போராட்ட குணமும் எல்லோரையும் ஒன்று திரட்டி நடத்தும் திறமையினையும் தொடர்ந்து கவனித்து வந்த ஜே ஆர் டி தனது அடுத்த வாரிசாக டாடா குழுமத்தின் தலைவராக இவரை நியமித்தார்.

முழுவதும் இந்தியாவிலே உருவான ஒரு வாகனம் தயாரிக்கவேண்டும் என்று ஒரு திடமான முடிவினை எடுத்தார். இதன் மூலம் "டாடா இண்டிகா வெளிவந்து மிகவும் பெரியளவில் வெற்றியும் பெற்றது அதுபோலவே குறைந்த விலையில் ஒரு வாகனம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசையின் வழியாக "டாடா நானோ வாகனம் வந்தது. 

தனக்கு முன் எப்படி இருந்ததோ அதைவிட மிகச் சிறப்பாக இந்த குழுமத்தினை நடத்திக்கொண்டிருக்கிறார் ரத்தன் டாடா.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

22 ஆகஸ்ட் 2021

           

    



Friday 20 August 2021

கருந்துளை என்னும் பெருந்துளை

கருந்துளை என்னும் பெருந்துளை  

ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல் 



கருந்துளையினை பற்றிய அறிவியல் சார்ந்த கூற்றுகளை விளக்கும் இந்த புத்தகம் இருவருக்கும் இருக்கும் இடையே நடக்கும் கேள்வி பதில்கள் போன்ற அழகாக நடைபெறுகிறது.

இந்த நூலின் ஆசிரியர் ஜெயராஜ் முத்துவேல், அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் நாகமங்கலம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இயல்பிலே ஒரு ஆசிரியர் என்பதால் இந்த புத்தகத்தில் "கருந்துளையினை பற்றிய விவரங்களை" மிகத் தெளிவாகவும் ஒரு மாணவனுக்கு எப்படிச் சொன்னால் புரிந்துகொள்ள முடியுமோ அதுபோல மிக எளிமையாக நான்கு கட்டுரைகளாகச் சொல்லியிருக்கிறார்.     

சூரியன், கோள்கள் என்று இல்லாமல் எந்த இரண்டு பொருள்களுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருக்கும்னு நியூட்டன் ஒரு விதியினை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அதுபோல விடுபட்டு திசைவேகத்தின் சூத்திரத்தில் அதிகமா போய்க்கொண்டே இருந்தால் அப்போது ஏற்படும் அடர்த்தியின் காரணமாக அந்த பொருள் தன்மீது விழும் எந்த பொருளையும் தப்பிக்க விடாது அப்படி ஏற்படும் ஒரு நிகழ்வு தான் இந்த கருந்துளை.   

இந்தியாவிலிருந்து சுப்பிரமணியன் சந்திர சேகர்  அவர்கள் கருந்துளை ஆய்வில் கொஞ்சம் பங்காற்றியிருக்கிறார். இவர்  நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்  சர். சி.வி. அவர்களின் நெருங்கிய உறவினரானவார்.  இவர் சூரியனின் நிறையப்போல் 1.4 மடங்கு வரைக்கும் உள்ள வெள்ளைக்குள்ள விண்மீன் நிலைத்து இருக்கும். இந்த 1.4 மடங்கிற்கு மேல் போனால் அது சிதைந்து சுருங்கி கருந்துளையாக மாறிப்போகும் என்கிறார்.    பலூனுக்கும் காற்றுக்கும் இடையே இருக்கும் அறிவியலின் உண்மையினை கொண்டு வெப்ப அணுக்களுக்கும் மற்றும் ஈர்ப்பு விசைக்கும் இருக்கும் ஒரு விசை தான் விண்மீன்களுக்குக் காரணம் என்றும் இந்த நிகழ்வில் உள்ளே இருக்கும் எரிபொருள் தீரும் போது அதன் வெளி வட்டம் விலகிப் போய்விடும் அந்த நிகழ்வில் தோன்றுவதுதான் கருந்துளை ஆகும். இந்த எல்லைக்கு "சந்திரசேகர் லிமிட்" என்று பெயர்.   

             


      

அழிவை நோக்கி பூமி

அழிவை நோக்கி பூமி  

ஆசிரியர் : அ. கந்தசாமி 

கிண்டில் பதிப்பு 

விலை  

பக்கங்கள் 


இந்த புத்தகம் இன்றைய உலகம் வெப்ப மயமாவதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களையும், ஆராய்ச்சிகளையும் அவற்றின் வழியே கிடைத்த அதிர்ச்சி கொடுக்கும் தகவல்களைக் கொண்ட ஒரு அருமையான புத்தகம்.

நாம் ஒவ்வொருவரும் நமது அடுத்து வரும் சங்கத்திற்கு என்ன கொடுத்துச் செல்கிறோம், அவற்றில் எதாவது நல்லதை விட்டுச் செல்கிறோமா என்ற கேள்விகளை எழுதச்செய்யும்.

இந்த புத்தகத்தின் ஆசிரியர் அ. கந்தசாமி அவர்கள் சமீபத்தில் உயிர் பிரிந்தார் என்றும் அவரின் விருப்பப்படி இந்த தகவல்களைப் பெரும்பான்மையை மக்களுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற அவரின் விருப்பப்படி மின்னூலாக வெளியிட்டுள்ளார்கள்.

நாம் வாழும் இந்த நாட்களின் மிகப் பெரிய சவாலான ஒரு விஷயம் நாம் தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்படுத்தும் எண்ணற்ற தீமைகள் தான் இன்றிய இயற்கையின் வளத்திற்கு மிகவும் பங்கம் விளைவிக்கிறது. மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான் ஆனால் அந்த இயற்கை நாளுக்கு நாள் ஒடுங்கிக் கொண்டே செல்கிறது என்றால் அவற்றில் தவறேதுமில்லை.

இந்த புத்தகம், இன்றைய சூழலில் நாம் எவ்வாறு ஓசோன் மண்டலத்தைப் பழுதடையச் செய்கிறோம் என்றும், கரியமில வாயுவினை வெளிப்படுத்தி பூமி  வெப்ப மயமாவதற்கு ஒரு பெரிய தூண்டுதலாக இருக்கிறோம்.     

பூமி வெப்பமாவதின் விளைவாக, பனிப் பிரதேசம் உருகி கடல் நீர்மட்டம் உயருவதற்கு பெரும் வாய்ப்பிருக்கு என்றும் அதன் காரணமாகக் கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் நிலைக்குக் கூட தள்ளப் படலம் என்றும் சொல்கிறது ஆய்வுகள் என்கிறார்.  

பசுமைக்  குடில் என்று கூறப்படும் இந்த பசுமை வளி மண்டலம் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமையான ஒன்று என்று சொல்கிறார். நீலகிரி போன்ற குளிர் பிரதேசத்தில் வளரும் சில தாவரங்களுக்கு அதிக குளிரும் ஆதிக்க வெப்பமும் ஒத்துக்கொள்ளாது அதற்காக அவற்றின் மீது ஒரு கண்ணாடி குடில் கட்டி அதன் வழியாக இரண்டு பருவத்தினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறோம் அதைப் போலவேதான் இந்த பூமியின் தட்பவெட்பநிலையின சீராகவைத்துக் கொள்ள இது போன்ற ஒரு படலம் தான் இந்த பசுமைக் குடில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தினை பாதுகாப்பாக வைத்திருந்தால் நம் பூமியினை வெப்பமாகாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து பூமி வெப்பமடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஒரு மாநாடு இந்தோனேசியாவில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் சில வளர்ந்த நாடுகள் நிபந்தனையினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

சீனா, இன்று உலகளவில் பெரிய தொழில் வளர்ச்சியினை அடைந்துள்ளது ஆனால் அவற்றின் விலையாகச் சுற்றுச் சூழல் மாசினை அதிகரித்து விட்டது என்றே சொல்லவேண்டும், கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குச் சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கியோட்டோ ஒப்பந்தம் 1997. இந்த ஒப்பந்தம் 36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயுவின் அளவின் சராசரி 5.2 சதவீதத்தைக் குறைக்க வேண்டி வகைசெய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது ஆனால் இதில் அமெரிக்கா கையெழுத்திட மறுத்துவிட்டது.

ஐரோப்பா ஒன்றியத்தின் சார்பாக நடத்தப்பட்ட பாலி மாநாட்டில் பல்வேறு ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்காவுடன் அணுசக்திக்காக  ஒரு உடன்பாட்டிற்குக் கையெழுத்திட்டது அதன் வழியாக 15% அணுசக்தி உற்பத்தியில் வெளிநாட்டினர் முதலீடு செய்யலாம் என்று வழி செய்தது ஆனால் இதற்கு இந்தியா கொடுத்த விலை இந்தியாவின் இறையாண்மையினை அமெரிக்காவிடம் இழக்க நேரிடும் என்கிறார்.

சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம், இதன் மூலம் பூமி, காற்று மற்றும் கடல் என எதுவும் பாதிக்காமல் நல்லதொரு இயற்கை வாழ்வியல் கிடைக்கும் என்கிறார். 

இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் பின் வரும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பூமி வெப்பமாவதால் இந்தியாவில் தோற்று நோய்கள் அதிகரிக்கும், காற்று மற்றும் தண்ணீரால் நோய்கள் பரவும்  போன்ற பல்வேறு நோய்கள் வரும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான ஆலோசனைக் குழு அமைத்து அதன் வழியாகச் சுற்றுச்சூழல் பற்றிய தேசிய திட்டத்தை வரையறை செய்து, செயலாக்கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆலோசனைகள் வழங்கும்.  

அரசாங்கம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனும் தானாக முன்வந்து உலக வெப்பமாவதைத் தடுக்க தன்னால் முடிந்த வரை உதவி செய்ய முன்வரவேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு நவீன பழக்கத்திலும் எவ்வாறு எரிசக்தியினை சேமிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் கொஞ்சம் சிந்தித்தால் உலகுக்கு நாமும் உதவிசெய்ய முடியும்.