Thursday 19 August 2021

திணையியல் கோட்பாடு - வாசிப்பனுபவம்

திணையியல் கோட்பாடு 

ஆசிரியர் : பாமயன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49 

பக்கங்கள் 65



ஆசிரியரைப்பற்றி: 

பாமயன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயற்கை வழி வேளாண்மையினை பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளில் தன்னை முற்றுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டவர். பல்வேறு நாளிதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதும், சிறந்த வேளாண் அறிவியலாளர் விருதும் பெற்றவர். தமிழில் அலையாத்தி காடுகள், மரபினை போன்ற  பல புதிய கலைச் சொற்களை அறிமுகப்படுத்தியவர் இவர். இவரின் எழுத்தின் வழியே நமக்கு திண்ணையியலை பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த புத்தகம் இருக்கிறது.

இந்த புத்தகத்தின் வழியாக புறநானூறு மற்றும் தொல்காப்பியம் என நமது பண்டைய காலத்தின் நூல்களின் சிறப்பாக எப்படி நம் முன்னோர்கள் நமது வாழ்வியலினை தொகுத்து வைத்திருந்தனர் என்றும் நமது நிலங்களை எவ்வாறு வகைப்படுதின்னார்கள் என்றும் அந்த நிலத்தினை சார்ந்தவர்களுக்கு எவ்வாறு பெயரிட்டு அழைத்தனர் என்றும் மிகத் தெளிவாக மேற்கோள்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

நம் முன்னோர்கள் தங்களது வாழ்விடத்தை இயற்கையின் கூறுகளாகவே வகுத்துள்ளார்கள் இதுபோல வேறு எந்த பண்டைய நாகரிகத்திலும் காணவில்லை. 

நிலம், நீர், தீ மற்றும்  வளி இவை அனைத்தும் கலந்தது தான் உலகம் என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது என்பதை மேற்கோள்காட்டி இந்த திணையியல் நூலினை ஆரம்பித்திருக்கிறார்.

திணை என்பது தமிழில் வாழிடம் என்றொரு பொருள்ளது மட்டுமல்லாமல் ஒழுகலாறு என்று மற்றுமொரு பொருளும் இருக்கிறது என்றும் தமிழர்களின் மெய்யியலாக இயற்கையினை எவ்வாறு நோக்குவது? எவ்வாறு அணுகுவது? என்ற அறிவுக்கோட்பாடு உள்ளதாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நூல்களின் வழியாக அறிந்துகொள்ளமுடியும்.

முதற்பொருள், கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என மூன்று வகையான பொருள்களை உள்ளடக்கி இருக்கிறது திணையியல்

முதற்பொருள்: 

உலகம் ஒரு பெரிய திணை மண்டலம், இது இயல்பாகவே அமைந்த ஒன்றாகும், இந்த அமைவு என்பது இவற்றில் "நிலமும் பொழுதும்" முதற்பொருள் ஆகும். உலகின் எகிப்து, சீனா, சிந்துசமவெளி என்று பல்வேறு பண்டைய நாகரிகங்கள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டது. 

பண்டைய தமிழ் மக்கள் தெய்வ வழிபாடுகளைக் கொண்டிருந்தார்கள் எனத் தொல்காப்பியம் சொல்கிறது. ஆனால் அது எந்த ஒரு சமயம் சார்ந்ததாக இருந்ததில்லை எனவும் இவர்கள் நிலம், நீர், ஆகாயம், தீ மற்றும் காற்று என இயற்கையின் ஐம்பூதங்களினை கொஞ்சம் கொஞ்சமாக வழிபட ஆரம்பித்தார்கள். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த பழக்கங்கள் மற்றும் தொன்மங்கள் இவற்றுடன் மயங்கிய சமயம் சார்ந்த மெய்யியல் உருவானது.    

 கருப்பொருள்:

உலகின் பூகோள அடிப்படையில் தமிழ் நிலம் வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ளது இட்டன மண்டலம் கடக கோட்டிற்கும் மகர கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும். எனவே கதிரவன் சுழற்சி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது இதனால் இந்த பகுதியினை திரும்பியல் என்று அழைக்கப்படுகிறது.

நிலத்தில் இன்றியமையாத முறையில் இருக்கும் பொருள் கருப்பொருள்  என்கிறது தொல்காப்பியம். உயிருள்ள பொருள்கள்  மற்றும் உயிரற்ற பொருள்கள் என இரண்டு வகையாக பாகுபடுத்தியிருக்கிறார்கள். இவற்றில் கருப்பொருள்களாக உணரப்படுவது நாம் தொட்டு உணரக்கூடிய எல்லாமே அதாவது உணவு, விலங்குகள், மரங்கள், பயிரினங்கள்புள்ளினங்கள் என நீண்டுகொண்டே செல்கிறது. தொழில்கள், இசைக்கருவிகள் போன்ற அனைத்தும் வாழ்நிலைக் கூறுகளான எல்லாவற்றையும் தொல்காப்பியம் கருப்பொருள் கீழ் கொண்டுவருகிறது.

உரிப்பொருள்:

தொல்காப்பியர் திணைகளை வகைப்படுத்தும்போது நானிலம் ஏழு திணைகளைக் கொண்டுள்ளது என்றும் அவற்றில் குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் பாலை என வகைப்படுத்துகிறார். முதற்பொருளும் கருப்பொருளும் விளக்கும்போது ஒவ்வொரு திணைக்கு இருக்கும் உரிப்பொருள்களை விவரமாக விளக்குகிறார். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிப்பொருள் அதாவது முல்லை நிலத்தவர்களை ஆயர்கள் மற்றும் வேட்டுவர்கள் என்று வகைப்படுகிறது. 

ஆக நிலம், பொழுது, கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் என்ற யாவுமே உறவும் ஓட்டும் கொண்டு இயல்பான நிலையில் இயங்கி வருவதாகவும் குறிப்பிடுகிறது.

உயிரும் மெய்யும்: 

காலப்போக்கில் மனிதக்குலம் தான் காணும் பொருள்களை எல்லாம் ஆராயத் தொடங்கினார்கள், அதன் வழியே அந்த பொருள்களின் தன்மையினை அறிந்துகொள்ள முயன்றனர். இங்கிருந்து கேள்வி கேட்பதும் அதற்கான விடையினை தெரிந்து கொள்வதும் என தங்கள் அறிவின் தன்மையினை வளர்த்துக்கொண்டார்கள். 

உயிரியல் பன்மயம்:

இந்த கோட்பாட்டின்படி ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினை சார்ந்து வாழ்கின்றது. ஒரு காடு, அதில் இருக்கும் மரங்கள் அந்த மரத்தினை நம்பி இருக்கும் உயிர்கள், மண், விலங்குகள், செடிகள் மற்றும் நுண்ணுயிர்கள் என அந்த சுழற்சி இயல்பாகவே நடந்தேறுகிறது.                  

 மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக, காடுகளை அழித்துவிட்டு, அவற்றில் வாழ்ந்த உயிர்களை இழந்துவிட்டு இயற்கையாக வாழ்ந்த நமது வாழ்வியலினை தொலைத்துவிட்டு எங்கே தொலைத்தோம் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம்.

காடு வளர்கிறது அதன் வழியே மண் செழுமையாகிறது பல்வேறு உயிரினங்கள் வாழ்கிறது.

உயிர்ம நேயம்:

மனித நேயத்தினையும் தாண்டிய விரிவான பொருளைக் கொண்டது உயிர்மை நேயம். இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது இங்கே பிறக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்விடமாகவே இந்த உலகம் திகழ வேண்டும் ஆனால் இங்கே சுயநலமிக்க மனிதர்களால் இவை பறிபோகிறது. 

நஞ்சில்லாத உலகம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் மக்கள் சூழலியலினை நாடி வந்துகொண்டிருக்கின்றார்கள் .

"பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளுக்கு இணங்க இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இங்கே இருக்கும் ஒரு சில்லி உயிரினமான அமீபா முதல் பேராற்றால் மிக்க மனிதன் வரை அனைவரும் சமமே என்று ஒருமித்த கருத்தினை வலியுறுத்தி இந்த சமூகம் ஒரு புதிய தடத்தினை தேடிக்கொண்டிருந்தது.     

        

No comments:

Post a Comment