Saturday 26 December 2020

திறந்து வாசிக்கப்பட வேண்டிய மனிதர்கள். (சிறுகதை தொகுப்பு) ஆசிரியர். : இராஜேஷ் இராமு

 புத்தக_விமர்சனம்

நூல். : திறந்து வாசிக்கப்பட வேண்டிய மனிதர்கள். (சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர். : இ ரா ஜே ஷ் இ ரா மு
அமேசான் மின்னூல்







நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த ஒரு மன நிறைவுடன் இந்த பகிர்வினை இங்கு பதிவிடுகிறேன்.
நண்பர் மருத்துவர் ராஜேஷ் ராமுவின் இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற ஆறு சிறுகதைகள்:
1.கிழட்டுப் பனைமரம்
மிக அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது!!இடம்பெற்ற கிழட்டு பனைமரமும் கிழவனும் எவ்வாறு பயணிக்கிறார்கள் இந்த கதையில் என்பதை அருமையாக விவரித்திருக்கிறார். சுருங்கிப் போன தேகம் கொண்ட கிழவன், தான் எல்லா மரங்களிலும் ஏறிய அனுபவங்களுடன் அவனது முதிரந்த வயதில் தனது ஒலை குடிசையின் ஒலைகள் தறர்நதிரிபதினை கண்டு ஓலை தானே தளர்ந்திருக்கிறது, சட்டம் ஒன்றும் ஆகவில்லையே" என்று சொல்லிகொண்டே புரியும் புன்னகையும் அதற்க்காகவும் பேரனின் பட்டம் அந்த நெடுநடுவென வளர்ந்த பனைமரத்தில் மாட்டிகொண்டதாலும் எப்படியாவது இந்த “கிழட்டு பனைமரத்தில்” ஏறிவிட வேண்டும் என்று மன உறுதியுடன் ஏறி விடுவதும் மிக உணர்சசிபூர்வமாகவும் எழுதியிருக்கிறார் நண்பர்.
2. கல்
“மரணிக்கும் வரை உயிர் பிழைக்கப் போராடுவதே உயிர்களின் இயல்பு.” என்பதனை மிக இயல்பாகவும், அழகாவும் கூடவே விறுவிறுப்புடன் நம்மை அந்த கடலுக்குள் கட்டுமரத்திலும் அஹ்மது மரைக்காயருடனும் பயணிக்க வைக்கிறார் நண்பர் ராஜேஷ் ராமு. போராட்டத்துடன் “தோல்வியை வரவேற்றுக் கிடப்பதைவிட. வெற்றியுடன் போராடித் தோற்கலாம். எனக்காக இல்லையென்றாலும் பரிமளத்திற்காக நான் கரை திரும்பியாக வேண்டும்”, என்று நினைத்துக் கொண்டு போராடி வருவதே கதை!!
இறுதியில் இருக்கும் கல்லின் மகிமைதான் கதையின் தலைப்பு - சரியானதே என்று சொல்லலாம்.
3. லாரி
குலதெயவத்திற்ககு நேர்த்தி கடன் செலுத்த ஒரு ஊரே பயணிக்கும் வாகனமான “லாரி” தான் இந்த கதையின் நாயகன் நாயகி... மிக அழகாக இந்த செல்கிறது கதையும் லாரியும் கூடவே வாசித்த நானும்.
4. செராஃபினா
இதில் வரும் ஒரு பெண் தேவதையை மையமாக கொண்டு வரையபட்ட ஓவியம். இது போல் எத்தனையோ தீட்டபடாத ஓவியங்கள் உலாவிகோண்டுதான் இருக்கின்றன. சமுதாயம் என்னும் சுவற்றில் அனேகமாக தீட்டபட வேண்டிய தேவதைகளின் ஓவியங்கள் ஏராளம். தனித்துவிடபட்ட ( கைவிட பட்ட பெண்) ஒரு பெண்ணின் வலியையும் அவளின் நினைவுகளையும் சுமந்து செல்கிறாள் இந்த செராஃபினா என்ற தேவதை!!
5. பொர(ற)வி
இந்த பொறவி நம்மை அழைத்து செல்லும் இடம் எல்லைகளை காத்துகொண்டிருக்கும் காத்தவராயர்களின் பிரதேசத்திற்ககு. இன்றளவும் ஊருல ஒரு தப்புத் தண்டான்னா… சுடல சும்மா விடுமா… ஊர்க் காவல் தெய்வம் இல்லையா….! அதான்… சுடல பொரவில வந்து காத்தவராயன் தலைய வாங்கிட்டுப் போயிருச்சு…” என்று இருக்கும் பெரும்பகுதி சமூகத்தின் வெளியில் தெறியாத வலியின் கதை.
6. கண்ணாமூச்சி
அம்மா அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் என்றால் தினமும் தனியாக இருக்கும் அதுவுமர ஒரு குழ்ந்தையாக இருக்கும் அமீராவும் அவளுக்கும் புதிதாக கிடைக்கும் பக்கத்து வீட்டு பாட்டியும் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு தான் இந்த கதை. ஒரே குழுவிற்குள் மாற்றி மாற்றிப் பெண் எடுத்தலும் கொடுத்தலுமாக இருந்ததால், பெருமை வாய்ந்த அந்தக் குடும்பமும் குழுமக்களும் குழந்தையின்மை, மரபணு கோளாறு எனக் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்தனர் இந்த குழுமத்தில் பிரிந்து வந்த ஒரு குழ்நதையில்லா தம்பதியின் கடைசிகாலத்தில் கணவரை இழந்த அந்த நானிதான் அமீராவின் புதிய நண்பர் பாட்டி என்று எல்லாமும் என்று கதையினை உணர்ச்சி பூர்வமாக விளையாட்டுக்குள் நம்மை கண்ணாமூச்சி விளையாட வைத்துள்ளார் நணபர் ராஜேஷ் ராமு.
நல்லொதொரு சிறுகதை தொகுப்பினுடன் பயணித்த சில நாட்கள்...

நன்றி
தேவேந்திரன் ராமையன்

Friday 25 December 2020

ரப்பர் வளையல்கள் - வாசிப்பு அனுபவம்


நூல்        : ரப்பர் வளையல்கள்

                  (சிறுகதை தொகுப்பு)

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்

அமேசான் மின்னூல்.

விலை : ₹99



நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான  "ரப்பர் வளையல்கள்" இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதையினையும் நடப்பு காலகட்டத்தில் இருக்கும் சில சமூக அவலங்களையும், சமுதாய வாழ்வியலையும் சில வரலாற்று கதைகளையும் கொண்டு மிக அழகாகவும் சில கேள்விகளை சமுதாயத்திற்கும் கேட்டு தனது கதையின் ஊடே நமக்கு கொடுத்திருக்கிறார்.

1. ரப்பர்  வளையல்கள்  

சமூகத்தில் “ ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்லுக்கிணங்க இந்த ரப்பர் வலையல்கள் என்னதான் அடித்து கொண்டாலும் சத்தம் வராது என்பதை ஒரு ஏழையின் மீது வங்கியினர் செய்யும் செயல் மூலமாக ஆசிரியர் நமக்கு சொல்லி செல்கிறார். 

2. மாற்றுக் கொலை  

சாதி மற்றும் ஆணவம் இவைகள் இன்றளவும் சமூதாயத்தில் பரந்து விரிந்து கிடக்கும் குப்பை, இவைகளை களையவேண்டும் என்ற சிந்தனையை, இந்த அவள பெண்ணின் கொலை நமக்கு சிந்திக்க தூண்டுகிறது.


 3. செம்மலர்  

எல்லோரும் சமமே என நம்மில் எத்தனை பேர் ஏற்றுகொள்கிறோம், நிறம், வசதி, படிப்பு மற்றும் ஆடம்பரம் என இவை எல்லாம் இருப்பவர்களையே மனிதர்கள் என்று நினைத்தை உண்மையான “மனிதம்” படைத்தவர்களை கண்டுகொள்ளாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியாக ஒரு ஆழ்ந்த கருத்தினை இந்த அழகிய “செம்மலர்” நம் மனதில் மலர வைக்கிறாள்.


4. உணர்வுகள்   

உணர்வுகள் என்ற கதையின் வழியே இளங்காதலர்களுக்கு இடையே ஏற்படுகின்ற எதிர்பார்ப்புகளை அழகாக பட்டியலிட்டுள்ளார். தங்கள் உணர்வுகளை உணர்நதுகொள்ள முடியாத சூழலில் எற்படும் வலியே பிறிவுக்கு அடுத்தளம் எனபதை அழகாக உணரவைக்கிறது இந்த “உணர்வுகள்”.


5. வெண்ணி  

இந்த கதை சோழர்களின் வீரத்தையும் வரலாற்றையும் அழகாக சொல்கிறது. 


6. பணமதிப்பிழப்பு  

இந்த நாள் எத்தனை எத்தனை இழ்ப்புகள் எனபதை நாம் எல்லோரும் அறிந்ததே!. ஆனால் இந்த சூழலையும் ஒரு நேர்மறையாக்கி ஒரு கதை அழகாக சொல்லியிருக்கிறார் நண்பர்.


7. கொடுக்காப்புளி  

இயற்க்பையின் சாபக்கேடு என்னவோ தெரியவில்லை, நண்பர்களின் கூட்டத்தில் ஒருவன் எப்பொழுதும் அடுத்தவர்களால் இழவிற்க்கு உள்ளாவது!! அதுபோலவேதானர இங்கு “ கொடுக்காபுள்ளி” வாழ்கிறான். கதையின் முடிவு அருமை...


8. அலங்கரிக்கப்பட்ட பொய்கள்   

பெரும்பாலும் பொய் சொல்லும் போது ஏதோ ஒரு இடத்தில் மாட்டிகொள்வதும் இயற்ககையே. அப்படியே ஆசிரியரே பொய் சொல்லி மாட்டி கொள்கிறார். அழகான கதை.


9. தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்   

இனணயதளத்தில் முகபுத்தகம் முதல் உள்ள அனைத்து சமூக வலைதளத்தி்ல் உளா வருவம் போலி செயதிகள் பின்னணியில் நடைபெறும் கதையினை அழகாக சொல்லியிருக்கிறார்.

 

10. எச்சில்  

பழிவாங்கும் எண்ணம் என்பது நம்மில் மறைந்து கிடக்கும் ஒரு குப்பை எனபதை உணர்ததும் கதைதான் இந்த கதை. பழிவாங்கும் சமயம் கிடைத்த போது அதை செயல்படுத்திய அர்ப்ப சந்தோஷத்தில் இருக்கும் ஒருவரின் கதை..


11. மேய்ப்பர்  

கடவுள் மீது இருந்த நம்பிக்கை நல்லதையே கொடுத்தது ஆனால் அதற்க்கு விலையாக அப்பாவின் உயிர் தான் கொஞ்சம் அதிகம்.


12. ‘அட்ரஸ்’ பாலாஜி  

தனக்காக சினிமாவில் ஒரு அட்ரஸ் தேடி சென்னைக்கு வரும் ஏராளமானவரில் அட்ரஸ் கிடைப்பதென்னவோ சிலருக்கே. அப்படிதான் இந்த கதையின் நாயகன் “அட்ரஸ் பாலாஜி”யாக மாறியது. எதார்தத சூழ்நிலைகளை அழகான கதையாக்கியருக்கிறார்.


13. லாக்டவுன் சமையல்  

இந்த சம்பவம் பெரும்பாளான இல்லத்தில், அரங்கேறிய நிகழ்வுகளாகதான் இருக்கும் வாசிக்கும் நம் அனைவருக்கும். இங்கே ஏற்படும் சின்ன சின்ன கலாட்டாகளை கதையாக்கியிருக்கறார் நண்பர்.


14. பெருமூச்சு  

உலகையே உலுக்கி எடுத்த கொடிய நோயினால் மக்களுக்கு ஏற்பட்ட மன உலைச்சல்களை மையமாக கொண்டு எழுதபட்டதுதான் இந்த “பெருமூச்சு”. எத்தனையோ அப்பா அம்மாக்கள் அனாதையாகவும், ஆதரவற்றவர்களாகவும் தள்ளபட்ட சூழலில் கொள்ளைநோயால்  உயிர்போன பின் என்ன நிலையென்பதை நான் அனைவரும் உணர்ந்ததே!! அழகாக சொல்லியருக்கிறார் இந்த “அப்பா விடும் பெருமூச்சு” அதன் இந்த கொள்ளை நோயிலிருந்து மீனடு வந்ததும்.


15. இ.யெம்.ஐ  

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டி தனது  வாழ்க்கை தரத்தை கடன் பெற்றாவது உயர்த்திகொள்ள வேண்டிய கட்டாய சூழலில் தவிக்கும் மனிதர்களின் வலியினை வெளிபடுத்தும் கதை. நண்பரின் கதையில் வரும் நாயகனுக்கு திடீரென ஏற்படும் சூழல் அதிலிருந்து சாமர்த்தியமாக வெளி வருவது சரிதான். ஆனால் அவன் இயல்புக்கு திரும்பும் வரை?


16. ஆன்லைன் ரம்மி  

சூதாட்டம் காட்டும் ஆசை மீளமுடியாத ஒன்று. இந்த கதையை படிக்கும் போது எனது சிறு வயது ஞாபகங்கள் வருகிறது. எங்கள் ஊரில் நடைபெரும் திருவிழாவிற்க்கு “சூதாட்டம்” கட்டாயம் இடம்பெறும். எங்கள் தெருவின் கடைசியில் காலியாக இருந்த களம் தான் சூதாட்ட பந்தல் இருக்கும். காலையில் மாப்பிள்ளைபோல போகிறவர்களில் பலர் திரும்பும் சைக்கிள், வாட்ச், மோதிரம் மற்றும் பணம் எல்லாம் இழந்து வருவார்கள் பாவமாக இருக்கும் ஆனால் மறுநாள் காலையில் கடன் வாங்கிகொண்டு விட்டதை மீட்க வருவார்கள். அந்த ஆசை யாரையும் விடுவதில்லை என அழகாக சொல்கிறார் நண்பர்.


17.கிணத்துக்கடவு  

இந்த “கிணத்துகடவு” தமிழகத்தில் உள்ள பெரும்பாளான கிராமங்களின் ஒரு பிரதிநிதியாகவே பார்கக வேண்டும். ஆம் இன்றளவில் பெரிதும் அவலநிலையில் இருக்கும் விவசாயிகளின் கதையைபற்றி கொஞ்சம் பேசுகிறது.  விவசாயிகளின் பிரச்சினையை கொண்டு அவரை கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாய பொருள் விவசாயிடமிருந்து கடைநிலை பயண்பாட்டுக்கு வருவதற்க்குள் எத்தனை விலையேற்றம் எனபதை சொல்லியிருக்கலாம்.


18. பற்றாக்குறை  

உயிரனங்களின் வாழ்வாதாரமாக திகழுமழ “தண்ணீர்” அவ்வுயிரனங்களுக்கு கிடைக்காமல் நுறுவனங்களால் கொள்ளையடிக்க படுவதை முன்னறித்தி இந்த “ பற்றாக்குறை” என்ற கதை பேசுகிறது.


19. தாரா

தாரா, வாழ்ககையில் வழுக்கி விழும் பெண்களில் தாராவும் ஒன்று. பழிவாங்குவது என்ற என்னம் இல்லாத மனிதர்கள் இல்லை எனவே தன் வாழ்வினை சீரழித்தவர்களை பழிவாங்கிவிட்டு தானும் மாய்ந்துவிடுகிறாள்.

மொத்ததில் ஒவ்வொரு கதைகளும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்கால செயல்களை அடிப்படியாக கொண்டு மிக அழகாவும்  தெளிவாகவும் சொல்ல வந்ததை ஆசிரியர்  சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை வாசித்து பாருங்கள் ..

வாழ்த்துகள் சகோ 💐💐💐

தொடரட்டும் தங்கள் எழுத்து பயணம்.....


அன்புடன்,

 

தேவேந்திரன் ராமையன் 

Sunday 20 December 2020

ஊர்திரும்புதல் -25

ஸ்ரீ மந்தகரை காளியம்மன் கோவில் திருவிழா 


அவனின் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதுதான் காளி என்றோரு அழகிய பெரிய கிராமம்.  அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாய் ஸ்ரீ மந்தகரை காளி அம்மன் அரணாக வீற்றிருக்கும்.




தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் வந்தாலே பக்கத்து ஊர்களுக்கெல்லாம் காளியின் மந்தகரை காளியம்மன் கோவில் காவடித்திருவிழாதான் நினைவுக்கு வரும். வருடம் தவறாமல் காவடித்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.  

அப்படித்தான் அவனும் தனது சிறுவயதில், நண்பர்களுடனும்,  ஊர்ப்  பெரியவர்களுடனும் அந்தத்  திருவிழாவுக்கு போய்வருவதுண்டு. அவன் சிறிய வயதில் திருவிழாவுக்கு  செல்வதுபற்றி  திட்டமிடுவான். யாரிடம் எவ்வளவு காசு வாங்குவது, எந்த நேரத்தில் போவது, என்னென்ன வாங்கி சாப்பிடுவது, என்ன விளையாட்டு பொருள் வாங்கிவருவதென்பதுவரை அதில் எல்லாம் அடங்கும். 

சித்திரை மாத வெயிலில் நண்பர்களுடன் நடந்தே  காளிக்குப்  போய் அந்த திருவிழாவினை கண்டு களிக்க அவனுக்கு  வருடாவருடம்  எழும்  ஆவல்  தணிந்ததே  இல்லை. 
 
ஸ்ரீ மந்தகரை காளியம்மன், காளி கிராமத்தின்  மெயின் ரோட்டிலேயே  கோவிலில்  வீற்றிருக்கும். திருவிழா சமயத்தில் அந்த ரோடு முழுவதும் தென்னங் கீற்றினால் பெரிய பந்தல் போடப்பட்டிருக்கும். பந்தலின் உட்புறம் வெள்ளை வேட்டிகளால் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த பந்தலின் நுழைவு வாயிலின் இருபுறமும் குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருக்கும். தங்கநிறம் கொண்ட தென்னம்  பாளைகளினாலும், பனை குலைகளினாலும், ஈச்சங் குலைகளினாலும் அழகாக  அலங்கரிக்க பட்டிருக்கும்.  அதனுடன் நடுநடுவே  வண்ண வண்ண காகித பூக்களின்  வரிசை இளங்காற்றில்  அசைந்தாடி பார்ப்பவர்  கண்களை  ஈர்க்கும். தென்னைஓலை  தோரணங்களும் அந்த  பந்தலினையும்  வீதிகளையும்  திருவிழா மனநிலைக்கு உரிய  மங்களத்தை   கொண்டுவரும்.  

பந்தல் முகப்பு வண்ணம் தீட்டிய தென்னங்  கீற்றுகளால் கோபுரம் போல அலங்கரிப்பட்டிருக்கும். அதன் மீது வண்ண வண்ண மின்மினி விளக்குகள் அழகாக பொருத்தி இருக்கும். அந்த மினுக்கும் மின் விளக்குகள்  இரவில் கண்கொள்ளாக்  காட்சியாக இருக்கும்.   

திருவிழா என்றாலே புதிது புதிதாக  கடைகள் வருவது வழக்கமாக தொன்று தொட்டு இருந்து வருவது. அதுபோலத் தான் இந்த ஊர் திருவிழாவிலும் ஒவ்வொருமுறையும் எண்ணற்ற கடைகள் வருவது வழக்கம். காளியம்மன் கோவில் தெருவெங்கிலும் புதிதாய் முளைத்த திருவிழா கடைகள் வண்ண வண்ணமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும். கண்ணாடியினால் நான்குபக்கமும் மூடப்பட்ட தள்ளு வண்டியில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  அருகில் செல்பவர்களை பலகாரங்களின் வாசனை சுண்டி இழுக்கும்.  நினைக்கும் தோறும் நாவில் எச்சில் ஊரும்.  




சாலையின் ஓரத்தில் வண்ணவண்ண பலூன்களுக்குள் காற்றினை ஊதி அழகாய் அதனை பல உருவங்களாக மாற்றி அருகில் செல்லும் குழந்தைகளின் மனதையும் மாற்றி கொண்டிருக்கும் பலூன் வியாபாரிகள் ஒருபுறம்.  

மூங்கிலில் செய்த ஊதுகுழல்களை  வியாபாரிகளிடம்மும்,  அடிக்கும் ரோஸ் வண்ணத்தில் ஜவ்வு மிட்டாயை  ஒரு கம்பத்தில்  சுற்றிவைத்து அதனை  இழுத்து இழுத்து கைக்கடிகாரம், மோதிரம், மீசை மற்றும் வித விதமான அணிகலன்களை செய்துவிற்கும் வியாபாரியிடம் சிறுவர்கள்  ஈ மொய்ப்பது போல் கூட்டமாக நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள்  சிறுவர்களுக்கு  காட்டும்  வேடிக்கைகளும்  ரசிக்கும்படி இருக்கும். அந்த  ஊதுகுழல்களை  வாங்கிய  சிறுவர்கள்  ஆர்வத்தில்  ஊதி எழுப்பும்  ஒலிகள்தான்  அங்கே  திருவிழா  நிகழ்ந்து  கொண்டிருப்பதையே நினைவுபடுத்தும். 


மற்றொரு இடத்தில் விளையாட்டுக்கடைகளும்  இருக்கும். அது  கொஞ்சம்  பெரியவர்களுக்கானது. அங்கே பிஸ்கெட், சோப்பு  டப்பா என்று  பலவிதமான  பொருள்களைப் சீரான இடைவெளியில் பரப்பி வைத்திருப்பார்கள். அந்த  வியாபாரி  கைகளில்  வளையங்கள் இருக்கும். போட்டியில்  பங்கேற்க  விரும்புபவர்  வியாபாரியிடம்  ஒரு  ரூபாய் கொடுக்க  வேண்டும். அதற்கு 3 வளையங்கள்  கிடைக்கும். போட்டியாளர் மூங்கில்  தடுப்புக்கு  பின்  நின்று  அடுக்கடுக்காக  வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களின்  மீது  குறிவைத்து  வளையங்களை ஒன்றின்  பின்  ஒன்றாக  எறியவேண்டும்.  அது எந்த பொருள்மீதாவது சரியாக  சுற்றி விழுந்துவிட்டால், அதுதான்  வெற்றி. எறிந்த  போட்டியாளருக்கு  அந்தப்  பொருள் கொடுக்கப்படும். 

அதை  அடுத்து  வளையல்கள், மணிகள், மற்றும் அழகுசாதன பொருட்கள் என பெண்களுக்கான சிறப்பு கடைகள் அதிக அளவில் இடம் பிடித்திருக்கும். காளியம்மன் கோவில் வீதியின்  கடைசியில் ராட்டினம் மேலும் கீழுமாக  சுழன்று கொண்டிருக்கும்.  அதனுள்ளே ஆரவாரத்துடன் சிறுவர் சிறுமியர்கள் கத்திக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். 

சித்திரை மாதவெய்யிலின் தாக்கத்தைப் போக்க தண்ணீர்ப் பந்தல்களில் , நீர்  மோர் கொடுக்கப்படும். ரோஸ் மில்க், சேமியா பாயசம், நன்னாரி சர்பத் என எந்த பக்கம் திரும்பினாலும் இரண்டு மூன்று கடைகள் இருக்கும். 

அங்கேயே  இரும்புச் சாமான்  கடைகளையும் காணலாம். இரும்புக்கடைகளில் தோசைக்கல் முதல் அரிவாள்மனை வரை எண்ணற்ற இரும்பாலான  வீட்டு உபயோகப்  பொருள்கள் கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் இது போன வருட திருவிழாவில் வாங்கியது, இது மூன்று வருடம் முன்பு வாங்கியது என பேசக்  கேட்கலாம்.

இந்தத்  திருவிழா காளியம்மன் கோவில் வீதியில்  நடப்பதால் அங்கு இருக்கும் மண்பானைகள் செய்யும் நண்பனின் வீட்டுக்காரர்கள் கடையும் இருக்கும். இதில் பெரும்பாலும் சிறியவகை மண்பாண்டங்கள் விற்பனை செய்யப்படும். மண்சட்டிகள் முதல் சூட்டு அடுப்புவரை எல்லாம் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.

அவனுக்கு அதிகளவில் பள்ளி நண்பர்கள் அந்த ஊரில் இருப்பதால், திருவிழா சமயங்களில்  அவனுடைய நேரங்களை வெகுவாக நண்பர்களுடனே செலவழிப்பான். கடை வீதியெங்கும் சுற்றுவதும் பலவகையான தின்பண்டங்கள் வாங்கி சுவைப்பதுமாக அவனது நேரம் இனிமையாகக்  கழியும். ராட்டினம் ஏறி விளையாடியதும், காந்தி தாத்தா கண்ணாடிபோல பிளாஸ்டிக் பேப்பரில் செய்த வண்ண வண்ண கண்ணாடிகள் வாங்கி மாட்டிக்கொள்ளுவதும், அது ஒருமணி நேரத்திற்குள்ளவே கிழிந்து போவதும் என, சில சந்தோஷங்களும் சில சோகங்களும் சேர்ந்து அந்த பொழுதுகள் கழியும். 

அவன் தனது சிறுவயதில் எப்போதும் அவனது பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ  நடந்தே போவான். சற்று வளர்ந்து அவன் அந்த ஊர்ப்  பள்ளியில் சேர்ந்த பிறகு தனியாகவே  அவனுடைய பள்ளி நண்பர்கள்கூட  போய்விடுவான்.


அப்போதெல்லாம் சிறுவர்கள்  வண்ண வண்ணக்  கண்ணாடிகளை அணிந்து, கைகளின் ஊதுகுழலும், வண்ண வண்ண பலூன்களும், பலூன்களினால் செய்த பொம்மைகளுமென கூட்டம்  கூட்டமாகப் போவது அவனுக்கு  குட்டி குட்டியாக கடைகளே நடந்து போவதுபோல ஒரு காட்சி தோன்றும்.      எல்லா திசையிலும் சுற்றி இருக்கும் கிராமங்களின் மக்கள்   இந்த திருவிழாவில் ஆண்களும் பெண்களுமாய்  பெரும்திரளாக வருவதும் போவதுமாக ஒரே மக்கள் கூட்டமாக இருக்கும். 

பெரும்பாலான பக்தர்கள் பால் குடம் எடுப்பதும், காவடி எடுப்பதும் என தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டிருப்பார்கள். 

வண்ணமயமான அந்த திருவிழாவில் சுற்றி இருக்கும் அத்தனை கிராமங்களும் கூடி கொண்டாடுவதும், திருவிழா முடிந்ததும் வீடுகளுக்கு திரும்பும் மக்களை பார்க்கும் போது எறும்புகள் கூட்டம் கூட்டமாக செல்வது போல ஒரு வகையான உணர்வு  தோன்றும்.  

சித்திரை மாதத்தினை மிகவும் விமரிசையாக இந்த கோவில் திருவிழாவுடன் அந்த சுற்று கிராமங்கள் எல்லாம் வரவேற்கும். அந்த நாளில் வந்து இருக்கும் எல்லோரும் காளியம்மன் அருளோடு புது வருடத்தினை ஆரம்பிக்கிறார்கள்.

இன்றளவும் இந்த திருவிழா நடைபெற்றுக்  கொண்டே இருக்கிறது.

  
              


Sunday 13 December 2020

வேலை நிறுத்தம் ஏன் - நூல் விமர்சனம் ( ஆசிரியர் : மக்கள் எழுத்தாளர் விந்தன்)

நூல்.         :  வேலை நிறுத்தம் ஏன்            

ஆசிரியர்   :  மக்கள் எழுத்தாளர்  விந்தன்



இந்த கட்டுரை தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் தாக்கத்தினால் எழுத்தாளர் விந்தன் எழுதிய கட்டுரை தொகுப்பு தான் இந்த நூல். 

எழுத்தாளர் 'விந்தன்' அவர்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் என்றுதான் தமிழ் உலகம் அறியும். அவர் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலும் தீவிரமாகச் சிந்திக்கிறார் என்பதற்கு இச் சிறுநூல் ஒரு சான்று.

இந்த கட்டுரையில் ஆசிரியரால் கேட்கபடும் கேள்விகளுக்கு அன்று முதல்  இன்றுவரை விடை தெரியாத  புதிராகவே இருக்கிறது. இத்தகைய சூழல் இன்றளவும் இருக்கிறது என்றால் இந்த பிரச்சனைகள் இருந்துகொண்டே தான் இருக்கும் எனபதில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?


“அன்றைய வாழ்க்கைச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆடம்பரங்களும் வசதி வாய்ப்புகளும் கூடியுள்ள இன்றைய நிலையிலும் கீழ்த் தட்டு மக்கள் நிலை மாறாமலேயே - வறுமைக்கோடு என்பதற்குக் கீழேயே பலகோடி மக்கள் பாரதப் புண்ணிய பூமியில் வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்”


ஆசிரியர் ஒரு தனி மனிதனை பற்றி கூறும்போது, சமுதாயத்தில் எவரும் தவிர்க்க முடியாதவர்கள்; தனித்தியங்க, தனித்து நிற்க, தனித்து ஒதுங்க எவராலும் இயலாது.  ஒட்டு மொத்த சமுதாயமே மனித குல அமைப்பு. இதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.  மனிதகுலம் முழுமைக்கும் ஒரு நல்வழியைத் தேடி ஆய்ந்து முடிவாக அறிவித்தவர், மனித குலத்தின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர் காரல் மார்க்ஸ்.  சிறு சிறு குழுக்களின், சிறு சிறு நாடுகளின் வளர்ச்சியிலும், தனிமனிதனின் உழைப்பிலும் வளர்ச்சியிலும் முழுமையான சிந்தனை செய்து முடிவுகண்டு முதலில் உரைத்தவர் அறிஞர் கார்ல் மார்க்ஸ்!

விடை காண முடியாத வினாக்களே மிகுதி! இதுவே வாழ்வு இதுவே உலகம்...

நோய் தோன்றத் தொடங்கினால் தொடக்கத்திலேயே கண்டறிந்து தீர்க்க முயல வேண்டும். மனிதர்க்கு உரியதே சமூகத்திற்கும் பொருந்தும். தொழிற் கூடங்களுக்கும் பொருந்தும்; ஆட்சிச் செயலரங்குக்கும் பொருந்தும்.  நீயா, நானா என்பதும், உயர்வு தாழ்வு என்பதும், அமைப்புகளின் வேர்களைப் பறிக்கின்ற தீயவுணர்வுகளாகும்.  நாம் அனைவரும் சமமானவர்கள். பாரத சமுதாயம் எனப் பாரதி பாடியதைப் பாடுவதோடு நிற்காமல், பாராட்டுவதோடு நிற்காமல், சிந்தித்துச் செயலில் கைக்கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத் துறையிலும் இந்தியா தங்களுக்குச் சமமாகத் தலை தூக்குவதைப் பிரிட்டிஷார் எப்பொழுதுமே விரும்புவது இல்லை யென்பது எல்லோரும் அறிந்த விஷயம்.  ஆனால், ஜப்பான் குள்ளர்கள் இந்தியாவின் வாயிலில் காலடி எடுத்து வைத்தபோது, பிரிட்டிஷார் தங்கள் சுயநலக் கொள்கையை ஓரளவாவது மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.

பாடுபடும் ஏழை எலும்புந் தோலுமாகி மடியவும், பாடுபடாத பணக்காரன் பருத்திப் பொதியைப் போன்று வளரவும், பிரிட்டிஷாரின் சுயநலக் கொள்கை இடம் கொடுத்தது.  இந்திய முதலாளி வர்க்கமும், வர்த்தக வர்க்கமும் பிரிட்டிஷாரின் கணக்கற்ற காகித நோட்டுகளைக் கைநிறைய பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ராணுவத் தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தன.  ஏழை ஜனங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று அவர்கள் ஏகாதிபத்தியத்தின் சதிக்குத் துணையாக நின்றனர். 

இந்தக் காலத்தில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் புண்ணியவான்கள், அவர் களுடைய வாழ்க்கைத் தேவையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க வேண்டும். 

இன்னும், போதாக் குறைக்குக் கள்ள மார்க் கெட்டில் ஒன்றுக்கு இரண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்கவேண்டிய அவசியமும் தொழிலாளிகளுக்கு ஏற்படாமற் போகவில்லை. விலைவாசிகள் விஷம்போல் ஏறியிருக்கும் இந்தக் காலத்தில் மேற்கூறிய சம்பள விகிதங்கள், பஞ்சப்படிகள் எல்லாம் எந்த மூலைக்கு?

துரதிர்ஷ்ட வசமாக இந்த நாட்டில் இன்று பிரபலமடைந்திருக்கும் பொதுஜனத் தலைவர்களில் பெரும்பாலோர், ஏழைத் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை நிலையை அறியாதவர்கள்; அறிய முடியாதவர்கள்!  ஏனெனில், மேற்கூறிய தலைவர்களின் வாழ்க்கைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.  பசித்தவனுடைய வேதனையைப் பசித்தவன்தான் அறியமுடியும்; பசியாதவன் அறிய முடியாது.  அதே மாதிரி பசியாதவனுடைய சுகத்தைப் பசியாதவன்தான் உணர முடியும்; பசித்தவன் உணர முடியாது.

அதிகார வர்க்கம், "அமைதியை நிலை நாட்டுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டு, தன் மிருகத்தனமான அடக்கு முறைகளைப் பிரயோகித்தது.  எத்தனையோ அவசரச் சட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்துகொண்டே யிருந்தன.

உணவுப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கல்ல; உடைப் பஞ்சத்தை ஒழிப்பதற்கல்ல; கள்ள மார்க்கெட்டைத் தொலைப்பதற்கல்ல; லஞ்சப் பேயை விரட்டுவதற்கல்ல;  தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காகத்தான்!

தங்களுடைய வேலை நிறுத்தத்துக்குப் பங்கம் நேர்ந்து விடுகிறதென்று அஞ்சித் தொழிலாளிகள் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அமைதி குலைகிறது.  முதலாளிகள் போலீசாரின் உதவியை நாடுகிறார்கள்.  சர்க்கார் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய போலீஸ் உதவி அளிக்கிறது.  தொழிலாளிகள் ஆத்திரமடைகின்றனர். அதன் பலன் படுகொலையில் வந்து முடிகிறது! - சமீபத்தில் நடந்த சம்பவம் பற்றி 75 வருடங்களுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாய் சொல்லியிருப்பதில்  வியப்பதற்கு ஒன்றுமில்லை.  

இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டால் உழைக்காமல் உண்ணும் முதலாளிகள் எந்த வேஷந் தரித்தாலும் பொதுமக்களிடையே இடம் பெற முடியாது.

நல்லொதொரு சமுதாய சிந்தனை உள்ள ஒரு கட்டுரை தொகுப்பினை வாசித்த அனுபவமும் அதனால் ஏற்பட்ட தாக்கமும் குறைய வெகு நாட்கள் ஆகும் என்றே நினவுகிறான்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாசிக்கலாம் ....

                    

நன்றி 

ராம. தேவேந்திரன்