Friday 25 December 2020

ரப்பர் வளையல்கள் - வாசிப்பு அனுபவம்


நூல்        : ரப்பர் வளையல்கள்

                  (சிறுகதை தொகுப்பு)

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்

அமேசான் மின்னூல்.

விலை : ₹99



நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான  "ரப்பர் வளையல்கள்" இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதையினையும் நடப்பு காலகட்டத்தில் இருக்கும் சில சமூக அவலங்களையும், சமுதாய வாழ்வியலையும் சில வரலாற்று கதைகளையும் கொண்டு மிக அழகாகவும் சில கேள்விகளை சமுதாயத்திற்கும் கேட்டு தனது கதையின் ஊடே நமக்கு கொடுத்திருக்கிறார்.

1. ரப்பர்  வளையல்கள்  

சமூகத்தில் “ ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்லுக்கிணங்க இந்த ரப்பர் வலையல்கள் என்னதான் அடித்து கொண்டாலும் சத்தம் வராது என்பதை ஒரு ஏழையின் மீது வங்கியினர் செய்யும் செயல் மூலமாக ஆசிரியர் நமக்கு சொல்லி செல்கிறார். 

2. மாற்றுக் கொலை  

சாதி மற்றும் ஆணவம் இவைகள் இன்றளவும் சமூதாயத்தில் பரந்து விரிந்து கிடக்கும் குப்பை, இவைகளை களையவேண்டும் என்ற சிந்தனையை, இந்த அவள பெண்ணின் கொலை நமக்கு சிந்திக்க தூண்டுகிறது.


 3. செம்மலர்  

எல்லோரும் சமமே என நம்மில் எத்தனை பேர் ஏற்றுகொள்கிறோம், நிறம், வசதி, படிப்பு மற்றும் ஆடம்பரம் என இவை எல்லாம் இருப்பவர்களையே மனிதர்கள் என்று நினைத்தை உண்மையான “மனிதம்” படைத்தவர்களை கண்டுகொள்ளாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியாக ஒரு ஆழ்ந்த கருத்தினை இந்த அழகிய “செம்மலர்” நம் மனதில் மலர வைக்கிறாள்.


4. உணர்வுகள்   

உணர்வுகள் என்ற கதையின் வழியே இளங்காதலர்களுக்கு இடையே ஏற்படுகின்ற எதிர்பார்ப்புகளை அழகாக பட்டியலிட்டுள்ளார். தங்கள் உணர்வுகளை உணர்நதுகொள்ள முடியாத சூழலில் எற்படும் வலியே பிறிவுக்கு அடுத்தளம் எனபதை அழகாக உணரவைக்கிறது இந்த “உணர்வுகள்”.


5. வெண்ணி  

இந்த கதை சோழர்களின் வீரத்தையும் வரலாற்றையும் அழகாக சொல்கிறது. 


6. பணமதிப்பிழப்பு  

இந்த நாள் எத்தனை எத்தனை இழ்ப்புகள் எனபதை நாம் எல்லோரும் அறிந்ததே!. ஆனால் இந்த சூழலையும் ஒரு நேர்மறையாக்கி ஒரு கதை அழகாக சொல்லியிருக்கிறார் நண்பர்.


7. கொடுக்காப்புளி  

இயற்க்பையின் சாபக்கேடு என்னவோ தெரியவில்லை, நண்பர்களின் கூட்டத்தில் ஒருவன் எப்பொழுதும் அடுத்தவர்களால் இழவிற்க்கு உள்ளாவது!! அதுபோலவேதானர இங்கு “ கொடுக்காபுள்ளி” வாழ்கிறான். கதையின் முடிவு அருமை...


8. அலங்கரிக்கப்பட்ட பொய்கள்   

பெரும்பாலும் பொய் சொல்லும் போது ஏதோ ஒரு இடத்தில் மாட்டிகொள்வதும் இயற்ககையே. அப்படியே ஆசிரியரே பொய் சொல்லி மாட்டி கொள்கிறார். அழகான கதை.


9. தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்   

இனணயதளத்தில் முகபுத்தகம் முதல் உள்ள அனைத்து சமூக வலைதளத்தி்ல் உளா வருவம் போலி செயதிகள் பின்னணியில் நடைபெறும் கதையினை அழகாக சொல்லியிருக்கிறார்.

 

10. எச்சில்  

பழிவாங்கும் எண்ணம் என்பது நம்மில் மறைந்து கிடக்கும் ஒரு குப்பை எனபதை உணர்ததும் கதைதான் இந்த கதை. பழிவாங்கும் சமயம் கிடைத்த போது அதை செயல்படுத்திய அர்ப்ப சந்தோஷத்தில் இருக்கும் ஒருவரின் கதை..


11. மேய்ப்பர்  

கடவுள் மீது இருந்த நம்பிக்கை நல்லதையே கொடுத்தது ஆனால் அதற்க்கு விலையாக அப்பாவின் உயிர் தான் கொஞ்சம் அதிகம்.


12. ‘அட்ரஸ்’ பாலாஜி  

தனக்காக சினிமாவில் ஒரு அட்ரஸ் தேடி சென்னைக்கு வரும் ஏராளமானவரில் அட்ரஸ் கிடைப்பதென்னவோ சிலருக்கே. அப்படிதான் இந்த கதையின் நாயகன் “அட்ரஸ் பாலாஜி”யாக மாறியது. எதார்தத சூழ்நிலைகளை அழகான கதையாக்கியருக்கிறார்.


13. லாக்டவுன் சமையல்  

இந்த சம்பவம் பெரும்பாளான இல்லத்தில், அரங்கேறிய நிகழ்வுகளாகதான் இருக்கும் வாசிக்கும் நம் அனைவருக்கும். இங்கே ஏற்படும் சின்ன சின்ன கலாட்டாகளை கதையாக்கியிருக்கறார் நண்பர்.


14. பெருமூச்சு  

உலகையே உலுக்கி எடுத்த கொடிய நோயினால் மக்களுக்கு ஏற்பட்ட மன உலைச்சல்களை மையமாக கொண்டு எழுதபட்டதுதான் இந்த “பெருமூச்சு”. எத்தனையோ அப்பா அம்மாக்கள் அனாதையாகவும், ஆதரவற்றவர்களாகவும் தள்ளபட்ட சூழலில் கொள்ளைநோயால்  உயிர்போன பின் என்ன நிலையென்பதை நான் அனைவரும் உணர்ந்ததே!! அழகாக சொல்லியருக்கிறார் இந்த “அப்பா விடும் பெருமூச்சு” அதன் இந்த கொள்ளை நோயிலிருந்து மீனடு வந்ததும்.


15. இ.யெம்.ஐ  

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டி தனது  வாழ்க்கை தரத்தை கடன் பெற்றாவது உயர்த்திகொள்ள வேண்டிய கட்டாய சூழலில் தவிக்கும் மனிதர்களின் வலியினை வெளிபடுத்தும் கதை. நண்பரின் கதையில் வரும் நாயகனுக்கு திடீரென ஏற்படும் சூழல் அதிலிருந்து சாமர்த்தியமாக வெளி வருவது சரிதான். ஆனால் அவன் இயல்புக்கு திரும்பும் வரை?


16. ஆன்லைன் ரம்மி  

சூதாட்டம் காட்டும் ஆசை மீளமுடியாத ஒன்று. இந்த கதையை படிக்கும் போது எனது சிறு வயது ஞாபகங்கள் வருகிறது. எங்கள் ஊரில் நடைபெரும் திருவிழாவிற்க்கு “சூதாட்டம்” கட்டாயம் இடம்பெறும். எங்கள் தெருவின் கடைசியில் காலியாக இருந்த களம் தான் சூதாட்ட பந்தல் இருக்கும். காலையில் மாப்பிள்ளைபோல போகிறவர்களில் பலர் திரும்பும் சைக்கிள், வாட்ச், மோதிரம் மற்றும் பணம் எல்லாம் இழந்து வருவார்கள் பாவமாக இருக்கும் ஆனால் மறுநாள் காலையில் கடன் வாங்கிகொண்டு விட்டதை மீட்க வருவார்கள். அந்த ஆசை யாரையும் விடுவதில்லை என அழகாக சொல்கிறார் நண்பர்.


17.கிணத்துக்கடவு  

இந்த “கிணத்துகடவு” தமிழகத்தில் உள்ள பெரும்பாளான கிராமங்களின் ஒரு பிரதிநிதியாகவே பார்கக வேண்டும். ஆம் இன்றளவில் பெரிதும் அவலநிலையில் இருக்கும் விவசாயிகளின் கதையைபற்றி கொஞ்சம் பேசுகிறது.  விவசாயிகளின் பிரச்சினையை கொண்டு அவரை கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாய பொருள் விவசாயிடமிருந்து கடைநிலை பயண்பாட்டுக்கு வருவதற்க்குள் எத்தனை விலையேற்றம் எனபதை சொல்லியிருக்கலாம்.


18. பற்றாக்குறை  

உயிரனங்களின் வாழ்வாதாரமாக திகழுமழ “தண்ணீர்” அவ்வுயிரனங்களுக்கு கிடைக்காமல் நுறுவனங்களால் கொள்ளையடிக்க படுவதை முன்னறித்தி இந்த “ பற்றாக்குறை” என்ற கதை பேசுகிறது.


19. தாரா

தாரா, வாழ்ககையில் வழுக்கி விழும் பெண்களில் தாராவும் ஒன்று. பழிவாங்குவது என்ற என்னம் இல்லாத மனிதர்கள் இல்லை எனவே தன் வாழ்வினை சீரழித்தவர்களை பழிவாங்கிவிட்டு தானும் மாய்ந்துவிடுகிறாள்.

மொத்ததில் ஒவ்வொரு கதைகளும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்கால செயல்களை அடிப்படியாக கொண்டு மிக அழகாவும்  தெளிவாகவும் சொல்ல வந்ததை ஆசிரியர்  சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை வாசித்து பாருங்கள் ..

வாழ்த்துகள் சகோ 💐💐💐

தொடரட்டும் தங்கள் எழுத்து பயணம்.....


அன்புடன்,

 

தேவேந்திரன் ராமையன் 

No comments:

Post a Comment