Friday 9 October 2020

உயிரோவியம் - வாசிப்பு அனுபவம்

                                     உயிரோவியம்   - சிறுகதை தொகுப்பு 

 ஆசிரியர் : மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி 




சமீபத்தில் கிண்டிலில்,  ஆசிரியர் மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி அவர்களின்  ஒரு சிறுகதை தொகுப்பான உயிரோவியம் வாசிக்க வாய்ப்புக்கிடைத்தது. 

எழுத்தாளர் எமது  மயிலாடுதுறை  மண்ணின்  மைந்தர். அவர்  எழுதிய மற்றைய நூல்கள்: உயிரோவியம், சுட்ட தோண்டிகள், அழமட்டுமா விழிகள். இந்த உயிரோவியம் சிறுகதை தொகுப்பில் ' அ முதல் ஃ வரை' கொண்ட  'அனுபந்தம்' தொடங்கி, 'அஃகம் சுருக்காதே', என பதிமூன்று சிறுகதைகளை பெரிதும்  பாசதத்துடன் கூடிய உணர்ச்சியின் மற்றும் சமுதாய முற்போக்குடைய   போக்கிலே எழுதியிருக்கிறார்.

பொதுவாக ஒரு ஆசிரியர் எப்போதும் அவர்களின் மண்ணின் வாசனையுடனே ஒரு கதையினை எழுத முற்படுவார்கள் என்பது உண்மையே. நமது தொகுப்பின் ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. ஒவ்வொரு கதையிலும் மயிலாடுதுறையையும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களையும் கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும், சமூக ஆர்வலர் என்பவர்  சமூகத்தை மாற்ற வந்தவர் அல்ல! 

சமூகத்திற்காக தன்னை மாற்றிக் கொள்பவரே!


1.​அனுபந்தம் 

இரு வேறுபட்ட பிரிவினர்களுக்கு இடையே ஏற்படும் காதல் திருமணம் குறித்த இந்த கதையில் இரு வீட்டாரும் எடுக்கும் முடிவு ஒரு நல்ல முடிவாக சொல்லியிருக்கிறார். நாமளும்,அவாளும் முதல்ல மனுஷாடா!அப்புறம்தான்ட மத்ததெல்லாம்.  

அப்பா தனது பெண்ணுக்கு சொல்லும் அழகிய அறிவுரை " வந்தார்.உனக்கு அவாத்துல செட்டாகுமா?  நீயோ சைவம், நம்ம பழக்க வழக்கம் வேற,பூஜைகள்,பண்டிகைகள் இதெல்லாம் வேற, எப்படிமா? எனக்கு அதுதான் யேசனை,வேற ஒன்றும் இல்லை. அது ஒன்றும் பிரச்சினை இல்லைப்பா, நாங்கள் தனியா  ஜாகை போய்டுவோம். அப்புறம்  நீங்க எல்லோரும் வரலாம், அப்படியே நம்மாத்து வழக்கப்படி வழக்கப்படி எல்லாம் செய்வேன்!  எனக் கூறி கொண்டே போனாள். 

ராமனுக்கோ கோபம் வந்தது,அது மட்டும் முடியாது!  என்ன பேச்சு பேசற?  குடும்பத்தை பிரித்து,தனி ஜாகை வைத்து நீ மட்டும் சந்தோஷமாக இருக்கனும்னு நினைக்கறது தப்பில்லையோ! காதல்னா அது உறவுகளை  பிரிந்து நீங்க இரண்டு பேர் மட்டும் சேர்வது இல்லை ,இருவரும் இணைவதால் அது உறவுகளை வளர்த்தெடுக்கனும்!

2.​ஆறாத சினம்

இந்த கதை கோமல் கிராமத்தில் வசிக்கு ஒரு குடும்பத்தினை சார்ந்த விசுவாசமான கதைதான் இது. சின்னய்யாவின் அப்பா இந்த வீட்டு கார் ஓட்டுனராக பணிபுரிந்து விபத்தில் காயத்திரியின் அப்பா அம்மாவும்  கூடவே  மரணமடைந்த பின் யாருமில்லை இவனுக்கு, ஆகையால் வீட்டிலேயே தங்கி வேலைக்கொடுத்து பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர். திடீரென காயத்ரி தற்கொலை செய்துகொண்டதால் மனம் உடைந்த சின்னய்யா காரணம் தேடி அலைந்தான். இதற்க்கு காரணம்  சென்னையில் இருந்து திருவிழாவுக்கு வந்த ஒருவனால் தான்  நம்ம வீட்டு பெண் தற்கொலை செய்தாள் என்று தெரிந்து அவனை தேடி பழிதீர்த்து கொள்கிறான். 

 3.​இயல்பு 

இரண்டு நண்பர்கள் ஒரே இடத்தில வேலை பார்ப்பவர்கள் தங்கள் வீடும் முன்னும் பின்னும் இருந்தது. வழக்கம் போல இரு வீட்டு பெண்களுக்கு இடையே ஏற்படும் சின்ன சின்ன இயல்பான சண்டை சச்சரவால் மனதில் ஏற்படும் சின்ன குறைகளோடு ஓடும் இந்த வாழ்வில் எதார்த்தமான நிகழ்வுகளால் தங்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் நினைத்து தங்களுக்குள்ளே ஒருவிதமாக வெட்கி தலை குனிந்து மீண்டும் இவர்களின் உறவே பலமானது.  - இந்த கதையில் ஆசிரியர் இறுதியில் சொல்லும் ஒரு இயல்பான விஷயம்

"மறுநாள் காலை,மாடியில் கோமதி துணி உணர்த்திக் கொண்டிருந்தாள். அனுசுயாவும் துணிகளை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒருவருக்கொருவர் பார்த்தனர், பேசத்தோணவில்லை, நவீனாவின் நேற்றைய பள்ளி சீருடையை உணர்த்துவதைப் பார்த்தாள் கோமதி, ஏதோ நெஞ்சம் கொஞ்சம் இளகி நெருடியது. ​அப்பொழுது ஏதேச்சையாக மேலே பார்த்தாள் அனுசுயா! அங்கே அவள் வீட்டு தெண்ணை மரம் கிளைக்கு நடுவில் காக்கை கூடும், அருகே காகம் உட்கார்ந்து முட்டை ஓட்டினை வைத்து சாப்பிட, அது தவறி கீழே அனு வீட்டில் விழுந்ததை அனுவும், கோமதியும் ஓரே நேரத்தில் பார்க்க, இவர்கள் கோபமும் கீழே விழுந்த முட்டை ஓட்டைப் போல் சிதற, இருவரும் ஒரேசமயத்தில் புன்னகைத்தனர், வெட்கத்துடன்.

4.​ஈகை 

இந்த கதை ஒரு மேஸ்த்ரி கோபால் 20 ஆண்டுகளாக கணபதிராமிடம் வேலை செய்கிறார். ஒரு நேரத்தில் கோபால் தனியாக வேலை செய்ய திட்டமிட்டார் ஆனால் இதற்க்கு கணபதி முதலில் வேண்டாமென்றும் பிறகு சரியென்று சொல்லி இந்த ஒருவேலை மட்டும் முடித்து கொடு என்றார். ஆனால் கோபால் முழு நேரமும் தனது வேலையில் அதிகம் ஈடுபாடு எடுத்துக்கொண்டார்.  

ஆனால்  இறுதியில் கோபால் இப்படி வாங்க! அம்மா நீங்களும் இப்படி வாங்க! இந்தாங்க ! இதை வாங்கிக்கோங்க! என்றார். ஆம் அது ரவி கட்டிய புது வீட்டின் சாவி என்ன சார் ?என்றார் கோபால் நடுங்கலாக. நீ போறேன்னு சொன்னவுடன் உன் வீட்டை நீயே கட்டி குடி போக சொல்லலாம்னு இருந்தேன் நீ வேற வேலை ஒத்துகிட்டதாலே ரவியை விட்டு செய்யச் சொன்னேன். அவனும் மிக நேர்த்தியாக வடிவமைத்து கட்டி முடித்துள்ளான். அதைதான் உனக்கு கொடுக்கிறேன். இது உன் 20 வருட விசுவாசத்திற்கான பரிசு என்றார்.இருவரும் நெகிழ்ந்து போனார்கள்.

5.​உண்மை 

இந்த கதையில் ரேவதியின் திருமணம் குறித்து பேசப்படும் எதார்த்த உண்மைகள் தான். ரேவதி, குப்புசாமி மற்றும் ராதாவின் ஒரே செல்ல மகள், இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற, தற்காலிகமாக  தனியார்  பள்ளியில் வேலை. இவளின் எதிர்பார்ப்பு ஒருவிதமாகவும் புதுவிதமாகவும் இருக்கிறது. நீ நினைச்சது!  அனைவரும் கிளம்பினார்கள். மாப்பிள்ளை பார்க்க அவர்கள் வீட்டிற்கு. ஒரு மணி நேரம் பயணம். ஆண் பார்க்கும் படலம்…..

6.​ஊழல் ஒழிப்பு 

இந்த கதை நம்ம சமுதாயத்தில் புரையோடி இருக்கும் ஊழல் பற்றிய அழகான கதை. வயோதிக ஆதரவற்ற ஒரு பெண்மணி நாகம்மாள்  தனக்கு கிடைக்கும் அரசு முதியோர் உதவி பணம் கேட்டு விண்ணப்பிக்கிறாள். அதற்கான அதிகாரி இந்த பணம் கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு 3000 பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் ஒண்ணுமே இல்லாமல் நிர்கதியாய் நிற்கும் அந்த முதிய பெண்மணி மயங்கி விழுகிறாள்.  இறுதியில் அதிகாரியின் அண்ணனுக்கு ஏற்படும் உடல்நல குறைவிற்கு அந்த முதிய பெண்மணி நாகம்மாளின் கல்லீரல் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

மறு நாள் அலுவலகம் வந்தார். அதிகாரி, அனைத்து கோப்புகளயும் உடனடியாக பார்த்து ஓகே செய்தார்.  அவன் முன்னே நாகம்மாளின் மனு ஆவணங்கள் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. அதில் இருந்த அந்த அம்மாவின் போட்டோவை எடுத்து தன் மேஜைக்கு மேலே கண்ணாடிக்கு கீழே வைத்தார். அழுகையால் தன் மனதில் உள்ள கறையைக் கழுவிய அதிகாரி.

7.​எச்சம்

இந்த கதை ஒரு காதலர்களின் கதை. ஆமாம்  விஜியும், சுந்தரும் இருவரும் காதலர்கலாக இருந்து மணமானவர்கள். எதிர்பாராத விபத்தில் சுந்தர் தவறிவிட்ட சூழ்நிலையில் விஜி. பறவையின் எச்சம் பட்டுப்போன மரத்தின் வேரின் இடுக்கில் விழுந்தாலும்,பட்ட மரம் அதனை வளர்த்தெடுக்க மறுப்பதில்லை.ஆணிவேர்க்கும் அதனால் எந்த பாதிப்பும் வருவதும் இல்லை. நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஆதாரமாய் இந்த விதையை போட்டுவிட்டு பறவை பறந்திடுச்சு!அதை வளர்க்க வேண்டியது என் பொறுப்பு. அவரின் வாழ்க்கையில் மிச்சாமாய் ஆணிவேராகிய அப்பாவை காப்பதும் என் பொறுப்பு என்று தீர்க்கமாக கூறும் விஜியின் கருத்தாக ஆசிரியர் சொல்லியிருப்பது மிக அருமையானது.

8.​ஏ(மா)ற்றம் 

சத்யன், சென்னையிலேர்ந்து வந்த மிகப்பெரிய தொழிலதிபரும்,சிவ பக்தருமான பசுபதீ ஐயாவை அருகிலிருக்கும் எல்லா சிவஸ்தலங்களுக்கு அழைத்து சென்று அதன் வரலாறு எல்லாம் சொல்லி மிக அழகாக செய்தான். அவனின் செயலினை கண்ட பசுபதி அவனை தன்னுடனே அழைத்து சென்று சென்னையில் தனது ஆன்மிக வேலைகளெல்லாம் பார்த்துக்கொள்ள சொன்னார்.

நன்றாக போய்க்கொண்டிருந்த அவனது வேலையில் ஒரு சமயத்தில் அவனுக்கு அகங்காரம் கூடி தன்னை இந்த பசுபதி ஐயாவிடம் அறிமுக படுத்திய தனது ஊரின் குருக்கள் சென்னைக்கு வந்ததை கூட அவன் கண்டுகொள்ளவில்லை. சத்யா,உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணோமோ, அவருக்கே இப்படி பன்னலாமா? என்று சொல்லிவிட்டு குருக்கள் சென்றுவிட்டார். 

பசுபதி ஐயா,வீட்டிற்கு வந்தா்,  சற்று சிடுசிடுவென இருந்தார்,ஆடிட்டரிடம், பேசினார்,அவர் பேசியதிலிருந்து ஒரு யூனீட்டில் பெரும் நட்டம் என்பது புரிந்தது. அதனால் இவன் கிட்டவே போகவில்லை. மறுநாள், அவராகவே இவனை கூப்பிட்டு உங்க கோவில் குருக்கள் வந்தாரே அவருக்கு என்ன செஞ்சிங்க சத்யா! என்றார், இல்லை, அது , வந்து , நான் வந்து பார்த்துவிட்டு செய்யறேன்னு சொன்னேன். அதான்!  எனக்கு அந்த கோவில்தான்டா, எல்லாம் கொடுத்தது. நீ அந்த கோவிலுக்கு செய்ய மறுத்ததாலதான் இன்றைக்கு எனக்கு இவ்ளோ பெரிய நஷ்டம். என கடிந்து கொண்டார்,உடனே பணம் எடுத்துகிட்டு போய் அந்த வேலையை முடிச்சிட்டு வா, என கட்டளையிட்டார்.

சத்யன் தனக்கு ஒரு பெரிய வேலை கிடைத்தவுடன் வந்த பாதையினை மறந்தான் அதனால் என்ன நடக்கும் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.  

9.​ஐயனார் 

இந்த கதையில்,  ஆற்றங்கரைக்கு வடக்கே உள்ளதால் வடபாதியாகவும்,தென் பகுதி தென்பாதி எனவும் பிரிந்துள்ளது, இரு கிராமத்திற்கும் இடையே உள்ள ஐயனார் கோவில் தான்  பகைக்கு காரணம், இந்த இரண்டு கிராமங்களுக்கு எப்படி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற பின்னணியில் செல்லும் ஒரு கதைதான் இந்த கதை.

10.​ஒற்றை நாணயம் 

கிராமத்தில் சிறுவயதில் தந்தையை இழந்த நாரயணன் தனது படிப்பை நிறுத்திவிட்டு அம்மா இருமலுடன் ஆஸ்துமா நோயாளி கவனித்து  பார்த்துக்கொண்டு மற்றும் இரு தங்கைகளை நல்ல முறையில் படிக்க வைத்து குறையின்றி திருமணம் செய்து வைத்தான். ஆனால் தான் திருமணம் செய்யாமலே இருந்தான் பின்னர் காலத்தின் கட்டாயத்தின் பேரில் உறவின் முறையான கற்பகத்தை கரம் பிடித்தார். அதுவரையிலும் அவரே உணவு சமைத்தார் ஆனால் கற்பகம் வந்த பிறகு அவருக்கு அதிலிருந்து ஓய்வு.  காலத்தின் நிலை அவர் கற்பகத்தையும் புற்று நோய்க்கு பறி கொடுத்துவிட்டார். தனது குழைந்தைகள் வெளிநாடுகளில் செட்டில் ஆனதால் இறுதியில் மீண்டும் தனிமையில் தள்ளப்பட்டார்.   

11.​ஓரகத்தி

இந்த கதை வீட்டிற்கு வரும் இரண்டாவது மருமகளுக்கும் மாமியாருக்கும் இடையே ஏற்படும் சின்ன சின்ன வருத்தங்களும் கொண்டதாகும். இதில்  மூத்த மருமகள் எப்படி தன்னோட ஓரகத்தியை ஒரு அம்மா போல இருந்து வழிநடத்துகிறாள் என மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

நம்ம பெண்கள் வாழ்க்கை,பயிர் நாத்து மாதிரி,பிறப்பது பிறப்பது  ஓரிடம், வாழறது ஓரிடம், வளர்த்தவங்க, கூட வளர்ந்தவங்க என அனைத்தையும்  விட்டுவிட்டு வேறிடத்தில்,புதிய மணிதர்களுடன்,புதிய வாழ்க்கை  வாழனும்,அதற்கு பொறுமையும், விட்டுகொடுத்தலும் மிக அவசியம்.அதனால்தான் அந்த குணங்களை நமக்கு நிறைய கிடைக்கப் பெற்றோம், அதை பயன்படுத்தி குடும்பம் தழைக்க வைக்க நம்மால் மட்டுமே முடியும். நீங்க எனக்கு ஓரகத்தி இல்லை என் அம்மா என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள் இளைய மருமகள்.

 12.​ஒளஷதாலாயம்

புதிய நீதிபதியாக   திரு. ராமன், தனது மாவட்டத்தில் பதவியேற்று இன்று முதல்  அமர்கிறார். தனது முதல்நாளே அவருக்கு மிகவும் நெருடலான ஒரு தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது. அது அவருடைய பள்ளிக்கூட நண்பரின் தீர்ப்பு. அவரின் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்ததை அவர் தீர்ப்பை மிக அழகாக சொல்கிறார்.  இவ்வளவு வருடங்களாக குற்ற உணர்ச்சியில் இருந்த எனக்கும்  இப்போது மனதுக்கு ஆறுதலாக மருந்து இட்டது போலவும்,அவன் செய்தகொலைக்குப் பதில் தூக்கு தண்டனை சரியான தீர்பாகாது,சிகிச்சையே அவசியம்.அவனைச் சுற்றிலும் எப்போதும்  ஆட்களும்,அவன் திறமைக்கு வடிகாலாக ஓவியமும் இருந்தால்,அவன் மனம் தவறை நாடாது.

13.​அஃகம் சுருக்காதே

இந்த கதை மிக முக்கியமானது எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் அளவு முக்கியம் என்பதை மிக நேர்த்தியாக சொல்கிறார். நியாய விலைக்கடை. பெயருக்கேற்ற நியாயம், அளவில் இல்லை. என்பதே இவர்களின் முக்கிய விவாதமாக  இருந்தது அந்த மாஞ்சோலை கிராமம்,ரேசன் கடை,ஊழியர்கள், சரவணன் எழுத்தர் ஆகவும்,அரி எனும் அரிச்சந்திரன் உதவியாளராக பணி புரிகின்றனர் இவர்கள்தான். அது அந்த கடையில் இருக்கும் .ஒரு துப்புரவு பணியாளர் தன்  மகள் படித்துக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.அஃகம் சுருக்கேல்! அதாவது தானியங்களை சுருக்காதே!  எந்த பொருளாயினும்,எந்த துறையானாலும்  அதற்குண்டான அளவும் முக்கியம், என  படித்தது ஞாபகம் வந்தது. அரிச்சந்திரனின் மனைவி இறந்து போது, போதும்டா,  இந்த நீளம்,ஆழம். அந்த அரிச்சந்திரன் செய்கிற வேலைக்கு அவன் மனைவிக்கு இதுவே அதிகம்,இவனுக்காக மெனக்கடாதே, அவன் செய்யற வேலையிலே, அரிசி கேட்டா இன்றைக்கு மண்ணெண்ணை தருகிறோம் என்பான். சரக்கே இல்லை என்பான்,  பயறுகளில்,அரிசிகளில் கலப்படம்,செய்வான்,அரிசி,சீனி,மற்ற அனைத்து பொருட்களிலும் அளவை குறைத்துதான் எடை போடுவான்.பேர் மட்டும் அரிச்சந்திரனாம்! என வசை பாடினான்.  மற்றொருவன் சின்ன குழி போதுமென சொல்ல அதுக்கு மற்றொருவன் மறுத்து இது எல்லா துறைக்கும் பொருந்தும்டா என் பொண்னு  சொல்லிச்சுடா,  நம்ம தொழில் பிணத்திற்கு குழி எடுக்கிறது, அதோட அளவும் முக்கியம்தானே,  நாய், நரி தோண்டாம  இருக்கனும், அதுதான் நாம வாங்குகிற காசுக்கு மரியாதை. எனக்கூறிக்கொண்டே வேலைசெய்தான். இது ஒரு கனவில் மயானம் வரை வந்து உண்மையை உணர்த்திய மனைவி் தெய்வமாக காட்சியளித்தாள்.  அவனை நேர்மை ஆட்கொண்டது.



No comments:

Post a Comment