Saturday 24 September 2022

பர்மா வழிநடைப் பயணம்

எனது பர்மா நடைவழிப் பயணம் 

ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 120

பக்கங்கள் 248


எனது பர்மா நடைவழிப் பயணம்  - இது ஒரு பயண கட்டுரை நூல். இது சாதாரணமான சுற்றுலா பயணமோ  அல்லது துணிந்து செய்யும் சாகச பயணமோ இல்லை. தாய் நாட்டை விட்டு வேறொரு நாட்டில் வாழுபவர்களுக்கு அந்த நாட்டில் திடீரென ஏற்படும் ஒரு போர் அந்த போரின் காரணமாக வெளியேற வேண்டும் என்று ஒரு நிலைமையில் அனுபவிக்கும் அணைத்து விதமான இன்னல்கள் மற்றும் இடையூறுகள் என தனக்குத் தனது 47வது வயதில் ஏற்பட்ட   அனுபவத்தினை ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா மிக எளிய நடையில் மிக அருமையாகக் கொடுத்திருக்கிறார்.

இந்த புத்தகம் நடைவழிப் பயணம் பற்றியது என்று இருந்தாலும் முதலில் கார் பயணம் அடுத்து  ரயில் பயணம் அதற்கடுத்து படகு பயணம் பிறகு லாரி பிறகு டோலி கூடவே நடைப் பயணம் பிறகு லாரி மற்றும் இறுதியில் ரயில் பயணம் என இவர்களின் (பர்மாவிலிருந்து அகதிகளாகத் தனது தாய் நாட்டிற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்கள்) பயணம் சிரமங்களும் சங்கடங்களும் இடையூறுகளும் எதிர்பார்ப்புகளும் எதிர்பாராத திருப்பங்களும் கூடவே சந்தித்த பல்வேறு விதமான மனிதர்களும் என இந்த பயணத்தின் ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லும்போது தனது எழுத்தாளரான வே. சாமிநாத சர்மா நயத்துடன் கூடிய உவமைகளுடன் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

அமைதியும் ரம்மியமும் ஒருசேர இருந்த ரங்கூனில் இரண்டாம் உலகப்போரின் போது திடீரென ஜப்பான் ராணுவத்தால் ஆரம்பித்த குண்டு மழையினால் நிலை குலைந்து போனது முதல் அங்கே ஏற்பட்ட அசாதாரண நிலையினையும் அதுவரை அமைதியாக வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்கள் திடீரென ஏற்பட்ட நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அந்த நிலையில் ஒவ்வொருவரின் மனநிலையும் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள்  என்பதையும் கூடவே ஆசிரியரும் எவ்வாறு இந்த அசாதாரண  சூழ்நிலையினை கையாண்டார் என்பதே இந்த நூலின் முழுவதும் இருக்கிறது.

ஆரம்பத்தில் ரங்கூன் இருந்து கார் வழியே மாந்தளை பிறகு அங்கிருந்து  ரயில் மூலம் மொனீவாவிற்கு  பிறகு அங்கிருந்து படகு வழியே கலேவாவிற்கு வந்த பயணத்தில் இங்கிருந்து இண்டாஞ்சிக்கு லாரி வழிப் பயணம் மீண்டும் இங்கிருந்து லாரி வழியில் டாமு வந்து சேருகின்றனர். டாமுவில் இருந்து நடைப்பயணம் ஆனால் பலருக்கு டோலி வசதியும் கொடுக்கப்பள்ளது.

டாமுவிலிருந்து வான்சிங் முகாம் வரை செல்லும் பயணம் ஆரம்பத்தில் மாட்டு வண்டிகள் மூலம் தொடங்கி அடுத்த இருந்த வக்க்ஷு முகாம் வரை மாட்டுவண்டியில் வந்தனர்.    பிறகு வக்க்ஷு முகாமிலிருந்து லும்மிங் முகாம் பிறகு சிட்டா முகாம் வான்சிங் முகாம் வரை டோலி மற்றும் நடைப் பயணம்.

வான்சிங் முகாமிலிருந்து இம்பால் நகரில் இருக்கும் முகாமிற்கு வந்து பிறகு அங்கிருந்து டிமாபூர் ரயில்வே நிலையம் வரை மீண்டும் லாரி  பயணம். இறுதியில் ரயில் பயணம் சென்னை வரை இடையில் கல்கத்தாவில் ஏற்பட்ட சில நாட்கள் தங்கிய அனுபவத்தையும் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.  

வழியில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இன்னல்கள், இடை இடையே பலர் தங்களது இறுதி மூச்சை விட்டதும், நடக்க முடியாமலும், உணவில்லாமலும், பிற பல்வேறு சூழ்நிலைகளாலும் இவர்களுக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அவ்வப்போது அவர்களுடன் வருவோர்கள் அவர்களை அடக்கம் கூடச் செய்யமுடியாமல் ஓரங்களில் வீசி எரிந்து விட்டு தங்களது உயிர் பிழைத்தால் போதும் என்று மனதைக் கல்லாக்கிக்கொண்டு வந்ததும் என பல்வேறு விதமான மனதை உருக்கும் நிகழ்வுகளையும்  சொல்லியிருக்கிறார்.

வழியில் ஒரு அரசாங்க அதிகாரி கொடுத்த 100 ரூபாய் அப்படியே வைத்திருந்து சென்னைக்கு வந்த பிறகு திரும்ப அவரின் மனைவிக்கு மணி ஆர்டர் செய்ததும் அதுபோலவே கல்கத்தா வந்தவுடன் தன்னிடம் ஒரு அதிகாரி  கொடுத்த கடிதத்தினை அஞ்சல் செய்ததும் எனச் சொல்லும்போது தனக்கு ஏற்பட்ட இதனைக் கடினமான பயணத்திலும் இடை இடையே பல்வேறு மனிதர்கள் கடவுள் போல வந்து உதவிசெய்தார்கள் என்று மிகப் பெருமிதத்துடன் சொல்கிறார்.

இவ்வளவும் ரங்கூனில் ஜோதி என்ற ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வெ. சாமிநாத சர்மாவின் அனுபவங்கள் என்றால் அவர் வந்த பாதையில் அவருக்கு பல்வேறு விதமான உபகாரங்கள் மற்றும்  உதவிகளும் கிடைத்தது ஆனால் ஒரு சாமானியனின் பயணம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

இது போர்க்காலத்தில், போர் நடக்கும் நாட்டிலிருந்து தனது தாய் நாட்டிற்கு அகதிகளாக வரும்போது ஏற்படும் அணைத்து விதமான அனுபவங்களையும் ஒவ்வொன்றாய் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார். கூடவே அவர் வழியில் சந்தித்த பல்வேறு விதமான மனிதர்கள், பல்வேறு விதமான சூழல்கள், இயற்கை சார்ந்த நிலப்பரப்புகள் அங்கே விளைந்த காய்கறிகள் அவர்களின் உணவுப் பழக்கங்கள் கூடவே அப்பகுதியில் சந்தித்தவர்களின் விருந்தோம்பல் என பல்வேறு விதமான சுவாரஸ்யமான தகவல்களை அற்புதமாக அடுக்கடுக்காய் ஒவ்வொருகட்டுரைக்குள்ளும் பக்குவமாகக் கொடுத்திருக்கிறார்.     

உடல்நிலையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் கூடவே காலநிலையினால் ஏற்பட்ட இன்னல்கள் கூடவே   பயணத்தின் பொது ஏற்பட்ட பல்வேறு இன்னல்கள் என ஒவ்வொன்றாய் சொல்லும்போது அந்த கடினத்தினை குறிப்பிடும்போது அவ்வப்போது நடந்து பல்வேறு இனிமையான சம்பவங்களைச் சொல்லி அந்த கடினத்தினை மறக்க வகையில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது.          

டோலி பயணத்தினை இறுதி பயணத்துடன் ஒப்பிட்டது. வரும் வழிகளில் இயற்கையின் கொடையாக இருந்த அருவிகளிலிருந்து வரும் நுரை நிறைந்த நீரை தங்களை (பாவப்பட்ட அகதிகளை) பார்த்து கண்ணீர் விடுகிறது என்பதெல்லாம் வாசிக்கும் நமக்குத் தொய்வில்லாமல் அழைத்துச் செல்கிறது.


அன்புடன்.

தேவேந்திரன் ராமையன் 

24 செப்டெம்பர் 2022 

 

                         

No comments:

Post a Comment