Monday 3 August 2020

கபாடபுரம் - வாசிப்பு அனுபவம்

கபாடபுரம் - வாசிப்பு அனுபவம் 


ஆசிரியர் : நா. பார்த்தசாரதி  


இது ஒரு வரலாற்று (சரித்திர) நாவல்






ஆசிரியர் இந்த நாவலில் முக்கிய கதை களமாக பாண்டிய மன்னர்களின் துறைமுகமாக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கபாடபுரத்தை  தான் முன்னெடுத்துள்ளார். 

இந்த கபாடபுரம் நாளைடைவில் கடலுக்கு இரையாகி போனதால் பின்னர் மதுரையினை தலைமையிடமாக கொண்டனர் என்று ஆசிரியர் விவரித்துள்ளார்.   

பாண்டிய மன்னர் வெண்தேர்ச் செழியன் இந்த கபாடபுரத்தினை அழகிய பொருநை நதி நரகை கடந்து கடலில் சேரும் இடத்தில் அருகில் உள்ள பல தென் பழத்தீவுகளில் இருக்கும் யவனர்களை கொண்டு இந்த கபாடபுர கோட்டையினை கட்டி எழுப்பினார் என்றும் அந்த கோட்டையில் ரத்தினமும் முத்தும் பதித்த வாயிற்கதவுகளால் அலங்கரித்து இருந்தன என்றும் அழகாக விளக்கியுள்ளார்.

கபாடபுரம் இரத்தின சுரங்கள் நிறைந்த ஒரு நில பரப்பு என்பதால் இங்கு பல நாட்டினர்கள் வந்து ரத்தினம் வெட்டி எடுத்து  தங்கள் பிழைப்பை நடத்தினார்கள் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது அந்த நாட்டின் செழுமையினை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.  

பெரிய பாண்டியர் வெண்தேர்ச்  செழியனும் அவரது ஆட்சிக்காலத்துக்கு பிறகு  அவரது வாரிசான மன்னர் அநாகுல பாண்டியனும் ஆட்சி காலத்தில் தான் இந்த கதை நகர்கிறது. 

அநாகுலபாண்டியனின் வாரிசான அரசகுமாரனாகிய      சாரகுமாரனுடைய  அழகினையும் அவனுக்கு இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வமும் மிக மிக அழகாக விவரித்துள்ளார். பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியன் எவ்வாறு சரகுமாரனை ஒரு வலிமையான அரசனாக்க வேண்டும் ஒவ்வொரு வினாடியும் சிந்திப்பதும் அதை செய்வதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியும் மிக அழகாக விவரித்துள்ளார்.    

கதையின் நாயகியாக கண்ணுக்கினியாளும் அவளின் அழகை சொல்லியிருக்கும் விதம் நம் கண் முன்னே அந்த கண்ணுக்கினியாள் என்ற ஒரு தேவதை நகர்வது போலவே வர்ணித்திருக்கிறார் ஆசிரியர். மேலும் அவளுக்கு இசையின் மீது கொண்ட ஆர்வமும் அவளது யாழ் இசையினையும் மிக இனிதாகவே வர்ணித்திருப்பது அழகிலும் அழகு. 

வெண்தேர்ச் செழியன் பேருக்கேற்ப அவரது தேர்கள் வெண்முத்துக்களால் மிக அழகாகவும் அற்புதமாகவும் அமைத்திருந்த தேர் படை வரலாற்று சிறப்பு மீக்கது இதுவே பிற்காலத்தில் இவரது பெயர் வெண்தேர்ச் செழியன் என்று போற்றப்பட்டது. 

இந்த பின்னணியில் கபாடபுரத்தின் பெருமை மிக்க விழாவான நகரணி மங்கல விழா நாள். சித்திர பௌர்ணமி நாளில் அரசகுடும்பம் தங்களது அரண்மனையில் உள்ள  தேர்க்கோட்டத்தில் உள்ள மூவாயிரத்துக்கு மேலான அலங்கரிக்கப்பட்ட அந்த அழகு தேர்கள் அரச வீதியெங்கும் உலா வரும் அவற்றுள் பெரிய பாண்டியர் ஒரு தேரிலும், அரசர் அநாகுல பாண்டியரும் அரசி திலோத்தம்மையும் ஒரு தேரிலும் மற்றும் மூன்றாவது தேரில் சரகுமாரன் மற்றும் அவனை தொடர்ந்து மற்ற தேர்கள் வீதியங்கும் உலா வரும்.   

சரகுமாரன் தான் வரும் வழியில் கண்ட கண்ணுக்கினியாள் மற்றும் அவளது யாழ் இசையின் மீது கொண்ட காதல் கொஞ்சம் கொஞ்சம் மலர தொடங்கியது அதுவும் சாரகுமாரனின் இளகிய மனம் மிக எளிதாக கண்ணுக்கினியாளை காதல் வயப்பட வைத்தது.  இவை அனைத்தும் சரகுமாரனின் பாதுகாவலர் முடிநாகனுக்கும் தெரிந்த காரியம் என்பதால்  பெரிய பாண்டியர் முடிநாகன் மீது பெரும் கோபம் கொண்டார்.

சரகுமாரனின் காதல் கதையினை தெரிந்த பெரிய பாண்டியர் அவனின் இளகிய மனதில் இருந்து விளக்கி அவனை ஒரு பெரிய வீர தீர அரசனாக்க வேண்டும் என்று ஆசையினால் அவனை பாண்டியநாட்டினை சுற்றி உள்ள பழந்தீவுகளுக்கு ஒரு ரகசிய பயணம் போகவேண்டும் என்று கட்டளையிடுகிறார் இதன் நடுவே கடற்கரை புன்னை தோட்டத்தில் தங்கியிருக்கும் கண்ணுக்கினியாளிடம் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற முடியாமல் சரகுமாரன் பழந்தீவு பயணம் மேற்கொண்டான். அந்த தீவு பயணத்தில் அவன் பல சம்பவங்களை சந்தித்தது மட்டுமில்லாமல் பல தீவுகளின் ரகசியங்களை அறிந்து கொண்டு தனது பயணத்தை முடிநாகனுடன் மிக வெற்றியாக முடித்து வருகிறான்.

காலங்கள் நகர்கிறது, ஒரு நேரத்தில் சரகுமாரனின் ஆசான் சிகண்டியாசிரியர் இசைஇலக்கணத்தை ஒரு அரங்கேற்றம் செய்யவேண்டும் என்றும் அதில் சரகுமாரனின் இசையினை அரங்கேற்ற செய்யவேண்டும் ஒரு பெரிய விழாவினை ஏற்பாடு செய்தார். அந்த விழாவிற்கு சாரகுமாரன் தனது காதலி கண்ணுக்கினியாள் வரவேண்டும் என்று அவளுக்கு அவன் அழைப்பு விடுத்தான். இதை தெரிந்த பெரிய பாண்டியர் வஞ்சகத்தால் அவளை வரவேண்டாம் என்று சொல்லுகிறார்.

இறுதியில் சாரகுமாரன் தனது அரங்கேற்றத்தில் தனது காதலி கண்ணுக்கினியாளும் அரங்கேற்றுவாள் என்று வாஞ்சையுடன் எண்ணியிருந்தான் இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.  

தனது குதிரையின் மீது ஏறி அவளை தேடி பின்தொடர்ந்தான் சரகுமாரன் ஆனால் கடைசியில் கண்ணுக்கினியாள் தனது யாழ் தவற விட்டு குமாரனின் கண்ணுக்கு தெரியாதவளாய் கண்ணீருடன் கரைந்து சென்றாள்..... 

- ராம. தேவேந்திரன்  

       
   




No comments:

Post a Comment