Monday 4 October 2021

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை

பாரதிக்கும் எனக்கும் பழக்கம் 

வ.உ. சிதம்பரம் பிள்ளை 

கிண்டில் பதிப்பு 

விலை   49

பக்கங்கள் 50 




இந்த புத்தகம் வ.உ. சிதம்பரம் பிள்ளை, தனக்கு சுப்பிரமணிய பாரதியாருடன் இருந்த பழக்கத்தினையும் உறவினையும் நம்மிடம் பகிர்ந்திருக்கிறார்.

எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஸ்ரீ சின்ன சாமியின் மகனாக சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார், அதே சமஸ்தானத்திலிருந்துவந்த ஸ்ரீ வ.உலகநாத பிள்ளையின் மகனாக வ.உ. சிதம்பரம் அவர்களும் பிறந்தார். இவர்களின் தந்தையர்கள் பழக்கத்திலிருந்து பாரதியார் அவர்களை பற்றித்த் தெரிந்துகொண்டதாகவும் அவரை சந்திக்க வேண்டு என்றும் எண்ணமும் இருந்தது என்கிறார்.

முதல் முதலாக 1906 ஆம் ஆண்டு சென்னையில் தான் சந்தித்தாக குறிப்பிருக்கிறார் அதுவும் பாரதியார் "இந்தியா" என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததாகவும் அப்போது அவரை முதலில் பத்திரிகையின் அலுவலகத்தில் சந்திருந்திருந்தார்.  முதல் சந்திப்பிலே இருவரும் மிகவும் நெருக்கமான ஒரு உறவு ஏற்பட்டது. பிறகு இந்த சந்திப்பு நாள்தோறும் தொடர்ந்தது மேலும் பத்திரிகையின் அதிபர் வீடும், திருவல்லிக்கேணி கடற்கரையும் என எங்கள் நாட்கள் நகர நகரச் சோழனும் கம்பனுமாக இருந்த நாங்கள் மாமன் மருமகனாக மாறினோம் என்கிறார்.

ஒருநாள் கடற்கரையில் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் வங்காள நாட்டில் காளிக்கு ஆடு பலி கொடுக்கிறார்கள் அது பாவமில்லையா என்ற கோபத்துடன் வியக்கனாம் செய்ததாகக்க் குறிப்பிடுகிறார்.

சூரத் காங்கிரசில் மாநாட்டில் தலைவரை மாற்றுவதற்காக ஏற்பாடு செய்தனர் ஆனால் இந்த முயற்சிகள் அதிக முன்னெடுத்து பிறகு இறுதியில் இந்த நிலை கலவரத்தில் தான் முடிந்தது. இந்த மாநாட்டில் தமிழர் தலைவர்களுக்கு எதிராக வாசிக்க இருந்த வாசகத்தை நீக்கச்ச் சொல்லி    முழக்கம் இட்டதும் அதனால் ஏற்பட்ட கட்சி பிளவு என்று பல்வேறு தகவல்களைக்க் குறிப்பிடுகிறார்.

வெள்ளையர்களை விரட்டியடிக்க நம்மிடம் கப்பல் வேண்டும் என்றதும் அதற்காகப்ப் போட்ட திட்டத்தின் காரணமாக ஆரம்பிக்கப்பட்டுத் தான் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பனி. இதற்காக வெகுண்டெழுந்த வெள்ளையர்கள் எங்களை தேசத்துவேஷாஹ் வழக்கில் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறைக்குச்ச் சந்திக்க வந்த மாமா கண்கலங்கிவிட்டார்.

கலெக்டர் ஆஷ் துறையின் கொலையின் காரணமாக என்னைக்க் கைது செய்த போது குழுமத்தை சேர்ந்த மற்றவர்களையும்,  பாரதியையும்  கைது செய்யவாய்ப்பு இருந்ததால் பாண்டிச்சேரிக்குப்ப் போகச்ச் சொன்னதற்கு மறுத்துவிட்டார் இறுதியாகப்ப் போகவைத்தாயிற்று.  புதுச்சேரியில் அரவிந்தர் மற்றும் வ.வே.சுப்பிரமணிய அய்யரும் வந்துசேர்ந்தார்கள். பாரதி அங்கே சென்றவுடன் பத்திரிகை மற்றும் வேறு வழிகளிலும் தந்து தேசிய விடுதலை பற்றிய வேலைகளைச்ச் செய்துகொண்டுதான் இருந்தார் என்கிறார்.

ஒருமுறை 

எனது சிறைத்த் தண்டனையை கோவை சிறையிலும், கண்ணூர் சிறையிலும் கழித்து விட்டு வந்த பிறகு, ஒரு முறை புதுச்சேரி சென்று மாமாவின் விலாசம் கண்டுபிடித்துச்ச் சந்தித்தது மற்றும் அரவிந்தர் எல்லோரும் சேர்ந்து தேச விடுதலைக்காகப்ப் பேசியது என தங்கள் நாட்களை நினைவுகூருகிறார். அப்போது அரவிந்தரிடம் இருபத்தேழு மொழிகளில் பத்திரிகை ஆரம்பிக்கவேண்டும் என்று சொன்னபோது மாமா அவர்கள் என்னைப்ப் பரிகாசம் செய்தார்கள் நானும் அதற்காக கோவப்பட்டேன் ஆனால் இறுதியில் தான் தெரிந்தது அவர் சொன்னதது உண்மை என்று. 

கப்பல் வணிகத்தில் நட்டம் வந்ததால் ஒரு கப்பலை மற்ற அதிகாரிகள், ஒரு வெள்ளைக்காரர்களுக்கு விற்று விட்டனர் அதைக்க் கேட்டுக்க் கொதித்து எழுந்து விட்டார் மாமா அல்லாமல் ஒரு கவிதையும் சொன்னார் அதில் "மானம் பெரிது பெரிது மானம்" மேலும் அந்த கப்பலை விரோதிகளிடம் விற்பது அதைத்த் துண்டு துண்டாக்கி கடலில் வீசியிருக்கக்கூடாதா என்று கேட்டார்.      

நான் அவரை நான்  சென்னையில் வசித்த நேரத்தில் ஒரு முறை மாமனும் ஒரு சாமியாரும் வந்தார்கள் என்றும் கூட வந்த சாமியாரின் மீது எப்படித்தான் மாமாவிற்கு நட்பு வந்ததோ தெரியவில்லை அவர்கள் இருவரும் எதையோ மென்றுகொண்டிருந்தார்கள்  எனக்க் குறிப்பிருக்கிறார். இந்த சந்திப்புதான் நான் மாமாவை இறுதியாகச்ச் சந்தித்தது என்று தந்து கவலையினை குறிப்பிடுகிறார்.   


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

07 செப்டம்பர் 2021 

         

   

No comments:

Post a Comment