Wednesday, 26 May 2021

எரியும் பனிக்காடு - நூல் வாசிப்பு அனுபவம்

 எரியும் பனிக்காடு - நூல் வாசிப்பு அனுபவம்


தமிழகத்த்தின் உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ‘ரெட் டீ’ ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பல  ஆண்டுகள் கழித்து முதல்முதலாக ‘எரியும் பனிக்காடாக’த் தமிழில் வந்தது.   


இன்றைக்கு திரைப்படங்களில் மற்றும் மலை நகரங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது  தேயிலைத் தோட்டங்கள் தான். ஆனால் அந்த தேயிலை தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்தக் கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன லட்சோப லச்சம்  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையில் கலந்த ரத்தத்தின் கதைதான் ‘எரியும் பனிக்காடு.’

இந்த கதையினை படித்த பின்னர் நான் விரும்பி பருகும் தேநீரில் எத்தனையோ இருண்ட முகங்களின் மறைந்த சோகம் இருக்கிறதோ என்ற நடுக்கத்துடன் தான் பருக வேண்டியிருக்கிறது. 

ஒவ்வொரு டீ எஸ்டேட்டும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் செத்துபோயோ அல்லது கொல்லப்பட்டோ அவர்களின் ரத்தமும் சதையும் உரமாக போட்டுத்தான் இந்த தேயிலை புதர்கள் எல்லாம் வளர்ந்து இருக்கிறது என்றால் அது தவறு இல்லை அதுதான் உண்மையும் கூட.

பிரிட்டிஷ்காரர்களோட நன்மைக்காக இந்தியாவில் தேயிலைத்  தொழிலை உருவாக்கியதில் நம் நாடு எத்தனை பெரிய விலை கொடுத்து இருக்கிறது. மனிதர்களின் ரத்தத்தை உரிஞ்சும் அட்டைகளும் அதைவிட மோசமாக உறிஞ்சும் மேஸ்திரிகளும், தொரைகளும் எப்படி கூலிகள் எல்லோரையும் கொடுமை படுத்தி வாழக்கையை சீரழிக்கிறார்கள் என்பது தான் இந்த கதையின்    
 
கதைக்கு வருவோம்.
 
1925ஆம் ஆண்டு, ஒரு டிசம்பர் இரவு...திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மயிலோடை அங்கு  சுமார் முப்பது வீடுகளே இருந்தன. அவற்றில் ஓடு போடப்பட்ட ஒரேயொரு செங்கல் வீட்டைத் தவிர மற்றவை அனைத்துமே பனையோலையால் வேயப்பட்ட, ஒற்றை அறை களைக் கொண்ட குடிசைகள்தான். சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை. சில குடிசைகளில்தான் மலிவான மரங்களாலான கதவுகள் காணப்பட்டன. மற்றவற்றில் மூங்கில் தட்டிகளையும், பனை யோலைகளையும் கொண்டு கைகளால் செய்யப்பட்ட படல்களே கதவுகளாகப் பயன்பட்டு வந்தன. மக்கள் அத்தனை பேரும் தாழ்த்தப் பட்டவர்கள். பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்தே தங்கள் வயிற்றுப்பாட்டைக் கவனித்து வந்தார் கள்.

அந்த கிராமத்தின்  குடிசைகளில் ஒன்றில் ஒரு கிழிந்த பாயில் கருப்பன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். இரவின் நிசப்தத்தினூடே அவ்வப்போது யாரோ உலுக்கி விட்டது போல அவனுடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. நெடுநேரத்துக்கு முன்பே விழிகளிலிருந்து உறக்கம் விடைபெற்றுச் சென்றிருந்தது. இரவெல்லாம் ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலை நேரத்தில் புதுவேகம் பெற்று குடல்களைப் பிடுங்கியெடுக்க மனது மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டுவதற்கான திட்டங்களைப் பரபரப்புடன் வகுத்துக் கொண்டிருந்தது. ராபட்டினி கிடந்த வாலிபனின் வயறு எத்தனையோ சோக கீதங்களை கதறி கொண்டுயிருந்தது.

வானம் பார்த்த பூமி, வானம் பொய்த்து போனதால் வாழவாதரம் இல்லாமல் போன பல குடும்பங்களின் ஒன்றே இந்த கருப்பன் வள்ளி குடும்பம். இரவு முழுவதும் பசியோடு தூங்க முடியாமல் எப்படியாவது நாளைக்கு உணவுக்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று ஒரே தீர்மானத்துடன் பொழுது விடிவதற்குள் அவன் கயத்தாறு நோக்கி சென்றான். எங்கு கேட்டும் வேலை கிடைக்க வில்லை பசியின் கொடுமை ஒருபுறம் வேறு வேலை இல்லாமல் எப்படி திரும்புவது என்ற வழி தெரியாமல் அந்த கடைவீதியில்  அவன் தடுமாறிக்கொண்டிருந்தான்.

வாழ வழி தெரியாமல் இருந்த கருப்பனின் வாழ்வில் வந்த ஒரு வசந்தம் போல சில பகடு வார்த்தைகளை கொண்டு அவனை அந்த நகரத்திற்கு வரவழைத்தான் மேஸ்திரி சங்கரபாண்டியன்.

சங்கரபாண்டியனின் ஆசை வார்த்தை கேட்டு எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுவதாக நம்பி தனது மனைவி வள்ளியுடன் அந்த நரகத்தை நோக்கி நகர்வலம் போனான். 

அந்த கிராமத்தில் இருந்து இதுவரைக்கும் நடை பயணத்தை தவிர வேறு எந்த பயணமும் கண்டிராத கருப்பனின் முதல்  பேருந்து பயணம், ரயில் பயணம் செய்வதை மிக அழகா காட்சிப்படுத்த பட்டுள்ளது. அவன் தான் பிறந்து வளர்ந்த வீடும் ஊரும் விட்டு பிரிய மனம் வராமல் தவிக்கும் அவனது தவிப்பு நம்மையும் ஒரு நிமிடம் அந்த இடத்தில் இருந்து யோசிக்க வைக்கிறது.

ஆனைமலைக்கு செல்லும் அந்த பயணம் ஆரம்பத்தில் சுவாரஷ்யமாக இருந்தாலும் கொஞ்சம் போக போக தான் தெரிந்தது. எங்கோ வழி மாறி போன பயணிகள் போல ஒவ்வொருவரும் பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை. அடிமைகளாக சென்று கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு அடிமைகளும் உணர ஆரம்பித்தனர். 

பாலைவனத்தின் பயணம் போல இருந்தது அவர்களின் அந்த பயணம். இறுதியில் ஆனைமலைக்கு வந்து சேர்ந்தனர். 

எண்ணற்ற கனவுகளோடு கூலி அடிமைகளாக வந்த கருப்பன்....  லைனில் ஒரு குடிசையில் மூன்று குடும்பம் வாழ வேண்டிய கட்டாயம், தனக்கு தனி வீடு தருவதாக சொல்லியிருந்த கங்காணி சங்கரபாண்டியனிடம் கேட்ட பொது அவனின் முகமே வேற முகமாக இருந்தது, நா கூசும் வார்த்தைகளால் வசை பாடினான், அதை கேட்டு மிரண்டு போன கருப்பன் முதல் முதலாக உணர்ந்தான் அவன் செய்த தவறை நினைத்து.

வாழ்வதற்கு கொஞ்சம் கூட முடியாத அந்த குடிசைகளில் வாழ கற்று கொண்டனர். தேயிலை தோட்டத்தின் வேலை ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பல வித அவஸ்தைகளை அனுபவித்து மெல்ல மெல்ல வேலை கற்று கொள்ள ஆரம்பித்தனர்.    

ஒரே வருடத்தில் நிறைய காசு சம்பாதிச்சு பெரிய பணக்காரனாக திரும்பி ஊருக்கு வந்துவிடலாம் என்ற பெரிய கனவுடன் வந்த கருப்பனுக்கு இங்கு வந்து பார்த்ததும் அது நடக்குமா என்ற சந்தேகம் வந்தது அதுபோலவே பல இடையூறுகளுக்கு இடையே வாழ ஆரம்பித்த அவனின் வாழ்வில் மீண்டும் மீண்டும் வரும் பெரிய இடிகள் சில தங்க கூடியதாகவே இருந்தாலும் சில தாங்க முடியாததாக தான் இருந்துதது.

கடும் குளிர், விட  அடை மழை, இதெல்லாம் புதியது தான் இருந்தாலும் அவற்றை வெற்றி கொள்ள முடியாமல் படும் இன்னல்கள் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போனது. காய்ச்சல் அவற்றிக்கு ஒரு நல்ல வசதி கிடையாது. மருத்துவர் இல்லாமல் வெறும் வார்டு பாய் தான் அங்கே சகலமும் அவன் தான் இந்த அடிமைகளின் வைத்தியர். சுத்தமான தண்ணீர் கிடையாது, வீடு கிடையாது இவற்றால் ஒவ்வொரு வருசமும் வரம் காய்சாலின் விளைவாக எத்தனையோ அடிமைகள் உயிரையே தியாகம் செய்தனர். இந்த நரகத்தில் இருந்து எப்படியாவது வெளியே தப்பித்து போகலாம் என்று நினைக்கும் அடிமைகள் எஸ்டேட்டை விட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொள்ள காவலாளிகள். ஏன் சில எஸ்டேட்டில் கூலிகளை சங்கிலி போட்டு கட்டி வைத்திருக்கிறார்கள், இந்த கொடுமைகளை எல்லாம் மிக தெளிவாக எல்லா மேஸ்திரிகள் செவ்வனே செய்தனர். 

வருட கடைசியில், ஜனவரி மாதம், கூலிகளுக்கு கணக்கு தீர்க்கப்படும் நேரம் அப்போது வருடம் முழுதும் உழைத்ததற்கு மிகவும் சொற்பமான கூலியே கிடைக்கும் அதுவும் எந்த படிப்பறிவும் இல்லாத இந்த அடிமைகளுக்கு அவர்களின் உரிமை என்ன என்பதுவே தெரியாமல் ஆட்டு மந்தைகள் போலவே அடிமைகள் ஏமாந்து போனார்கள்.  

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த கூலி நேரம் வந்தது, கருப்பன் எதிர்பார்த்த எந்த ஒரு சந்தோஷமும் அவனுக்கு கிடைக்க வில்லை, நோயினால் வேலை செய்யமுடியாத நாட்களெல்லாம் கூலி இல்லை, ரேஷன் கொடுத்ததற்கு காசு பிடித்தம், கம்பளிக்கு காசு என ஏராளமான பிடித்தம் போக மீதி கிடைத்தது மிக சொற்பமான காசேதான். அதிலிருந்து மேஸ்திரி கொடுத்த முன்பணம் கொடுக்க முடியவில்லை, காலிச்செட்டியாரின் கடைக்கு கொடுக்க வேண்டிய கடன் பலமடங்காக பொய் கணக்கு எழுதி வசூல் செய்து விட்டான். 

பாவம் இந்த அடிமைகள், இவர்களின் ரத்தம் அட்டை உறிஞ்சுவது என்னமோ கொஞ்ச நாட்கள் மட்டுமே ஆனால் அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் இந்த கள்வர்களால் உரிஞ்சப்படுகிறது. கேட்க ஆளில்லை தொரைகள் முதல், மேஸ்திரி, செட்டி கடைக்காரன் என இவர்களின் வாழ்வில் என்றேற்ற அட்டை பூச்சிகள் நாள் தோறும் உரிஞ்சுகொண்டே தான் இருந்தது.

ஒரு வருடம் முடிந்ததும் கருப்பனுக்கு ஊருக்கு போகவேண்டிய அளவுக்கு பணம் இல்லை, மீண்டும் அவன் கடன் பட்டிருந்தான். அந்த கடனில் இருந்து தப்பிக்க எப்படி முடியும் என்று யோசிக்க கூட முடியமால் மீண்டும் அடுத்த வருஷதிற்கு வேலை செய்ய தயரான நிலையில் கருப்பனுக்கு வள்ளியும்....

தொரைமார்களின் காம விளையாட்டுக்கு உடன்படாத வள்ளியின் நிலை அவள் செய்த வேலைக்கு ஈடான கூலி கொடுக்க வில்லை, மாறாக அவள் வஞ்சிக்கப்ட்டால்.     அவள் கடினமாக உழைத்த உழைப்பை தொரைமார்களின் ஆசை நாயகிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

முள் படுக்கையில் அந்த பரிதாப பட்ட அடிமைகளின் வழக்கை நகர்கிறது. இரண்டு வருடமும் கடந்தது இதில் மீண்டும் மீண்டும் கடன் உயர்ந்து கொண்டே தான் இருந்தது. காய்ச்சலில் இருந்து தப்பிக்க தாயத்து தருவதாக ஏமாற்றும் ஒருவன் என கருப்பன் மேலும் கடன் படவேண்டியிருந்தது.
பல கனவுகளின் இறுதியாக இரண்டாம் ஆண்டும் முடிந்தது ஊருக்கு போக தேவையான காசு கருப்பனுக்கு கிடைக்க வில்லை. மீண்டும் ஒரு பெருத்த ஏமாற்றம் அனால் இந்த வருஷம் வள்ளியின் உடல் நிலை சரியில்லாமல் போனது. மீண்டும்  மூன்றாவது ஆண்டு கருப்பன் அடிமை வாழக்கை முள் மீது நடக்க தொடர்ந்தது. 

ஆனால் இந்த வருடமாவது ஊருக்கு திரும்ப போகவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற இடைவிடாமல் உழைக்க தொடங்கினார்கள். இந்த வருசமும் ஊருக்கு போக முடியாமல் போக கூடாதென்று முடிவே எடுத்திருந்தார்கள். இந்த வருடம் பலவகையான மாற்றங்கள்.வள்ளியின் உடல் நலம் பாதிக்க தொடங்கியிருந்தது இருந்தாலும் அவள் விடுப்பு எடுக்காமல் உழைத்து கொண்டே தான் இருந்தால். 

வார்ட் பாய் டாக்டராக வேலை பார்த்ததால் தான் நிறைய சாவுகள், காங்கிரசு காரர்கள் எப்போ வேண்டுமானாலும் இங்கே வருவார்கள் என்று பயத்தால் ஒரு படித்த டாக்டரை நியமிக்க வேண்டிய காட்டுயா சூழல் அப்படியாக ஒரு புதிய டாக்டர் வருகிறார் அதற்க்கு பிறகு கொஞ்சம் அடிமைகள் நல்ல மருத்துவம் கிடைத்தது. 

இங்கே கூலிகள் மட்டும் அடிமைகள் இல்லை இங்கு வேலைக்கு வரும் எல்லோருமே அடிமைகள் தான், காலில் செருப்பு போடக்கூடாது, தொப்பி போட கூடாது, தொரைகள் வரும்போது பவ்வியமாக அவர்களை மரியாதையை செலுத்த வேண்டும். இது போல கொடுமைகள் ஒரு முடிவுக்கு வரவே இல்லை.

புதிதாக வந்த டாக்டர் சில மாறுதல்களை கொண்டுவந்தார். எழுத்தர் அப்பாவு, ஜான்சன் இவர்கள் எல்லாம் சேர்ந்து கிறுஸ்துமல் விடுமுறைக்கு அருகில் இருக்கும் மலைக்கு ஒரு பயணம் மேற்கொண்டனர். இது வரை தேயிலை தோட்டத்தின் இரண்டு பக்கம் மட்டுமே தெரிந்த நமக்கு அந்த அழகிய மலையில் எவ்வளவு ரம்யமான காட்சிகள் இருக்கிறது என்று இந்த பயணத்தில், அப்பாவு மிக அழகா விவரிக்கிறார். 

இந்த வருஷம் வள்ளியின் உடல் நிலை படு மோசமாவே இருந்தது இந்த நிலையில் கருவுற்று இருக்கிறாள். பூசாரி இந்த முறையும் தனது பங்குக்கு கருப்பனிடம் ஏமாற்றிகொண்டே தான் இருந்தான்.  வள்ளி இனி நாம இரண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போகமாட்டோம் என தீர்மானித்துவிட்டால். இருந்தாலும் புதிய மருத்துவர் கொஞ்சம் நல்ல முறையில் வைத்தியம் பார்ப்பதால் தெரிவிடுவோம் என்ற நம்பிக்கை கருப்பனுக்கும் வள்ளிக்கும் வந்தது. 
ஆனால் விதி அவளின் உயிர் இந்த தேயிலை தோட்டத்துக்கு உரமாக வேண்டும் என்று இருக்கிறது                                            
                                
தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது ‘எரியும் பனிக்காடு’.பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள்தான் இந்நவீனமாக உருப்பெற்றன.

இன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.

அன்புடன், 
தேவேந்திரன் ராமையன் 
26 மே 2021
 

Sunday, 10 January 2021

'எஸ்தர்'. - வாசிப்பு அனுபவம்

நூல். : எஸ்தர் - சிறுகதை
ஆசிரியர். : வண்ணநிலவன்
அமேசான் மின்னூல்

பக்கங்கள் 23



 

"எஸ்தர்"  மிகவும் அருமையான ஒரு சிறுகதை.  "எஸ்தர் சித்தி" என்ற பெண்மணியின் வலிமையை மிகவும் அழகாக எழுத்தாளர் இந்த கதையின் முழுவதும் பயணிக்க வைத்துள்ளார்.  இந்த குடும்பத்தின் எல்லோரையும் வளர்த்த பாட்டி, எஸ்தர் சித்தி மற்றும் குழந்தைகள் என மூன்று தலைமுறைகளின் கடந்து செல்லும் இந்த சிறுகதை மனதை வருடும் ஒரு கதை.

நான் இதற்க்கு முன்பு, வண்ணநிலவனின் "கடல் புரத்தில்" என்ற கதையினை வாசித்திருக்கேன்.  கதையின் கதாபாத்திரங்கள் மிக வலிமையாக வாழ்ந்திருப்பார்கள். அது போல 23 பக்கங்களில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மையும் உணர வைப்பதால் இந்த "எஸ்தர்" சிறுகதையிலும் கதாபாத்திரங்கள் வலிமையையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

ஒரு சிறுகதைக்குள், ஒரு பெரிய குடும்பத்தின் மூன்று தலைமுறையின் வாழ்க்கையும், அழகாக செழிப்பாக இருந்த ஒரு கிராமம் காலத்தின் விளைவாக வறண்ட போன பூமியானதால் மொத்த குடும்பங்களும் பிழைப்பை தேடி வெளி ஊருக்குச் சென்றதால் இந்த கிராமத்தில் எஞ்சிய ஐந்தாறு குடும்பம் மட்டுமே. 

  "எஸ்தர்  சித்தி"  எவ்வளவு வலிமையுடன் இந்த குடும்பத்தைச் சுமக்கிறாள். பிள்ளைகள் மருமகள்கள் என எல்லா உறவுகளையும் நேர்த்தியாகச் சுமந்து செல்கிறாள். 

எஸ்தர் குடும்பமும் ஊரை விட்டுப் போகத் தீர்மானம் போட்டுவிட்டனர் அதற்காக எஸ்தர் கொஞ்சம் பணமும் சேர்த்துவைத்திருந்தார் ஆனால் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுவிட்ட போக நினைத்தார்கள். ஆனால் பாட்டியின் திடீர் மரணம்.  

இன்னமும் "எஸ்தர் சித்திக்கு, மட்டும் எல்லோரையும் வளர்த்த பாட்டியின் வாழ்வின் இறுதியில் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது.."


மனநிறைவுடன் ஒரு நல்ல சிறுகதையினை வாசித்த அனுபவம் ... மனதில் நீங்காத “எஸ்தர் சித்தியின்” கதாபாத்திரம்.

இந்த புத்தகத்தை வாங்க ....

https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-Tamil-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-ebook/dp/B0814WRKPS/ref=sr_1_2?dchild=1&keywords=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&qid=1610296566&sr=8-2

அன்புடன் 

தேவேந்திரன் ராமையன்     

     

 








சி

Saturday, 9 January 2021

என் தூரிகையின்ஓவியங்கள் - வாசிப்பு அனுபவம்

நூல் : என் தூரிகையின்ஓவியங்கள்
- கவிதை தொகுப்பு
ஆசிரியர் : பா. சுதாகர்
அமேசான் மின்னூல்

பக்கங்கள் : 91




கவிதைகள் என்றாலே அவை தாங்கி, மறைத்து வரும் கருத்துகளை புரிந்து கொண்டு வாசிப்பதே ஒரு வாசகனுக்கு ஒரு தனி புரிதல் வேண்டும் கவிதை கதைகளை போல அல்ல.
பா. சுதாகரின், என் தூரிகையின் ஓவியங்கள் கவிதை தொகுப்பு பல கோணங்களில் பல வண்ணங்களால் வரையபட்ட ஓவியங்களின் தொகுப்பு என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக தவழ்கிறது.
என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்வதைவிட, பாதித்த வரிகள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் “வலி” யின் பிரதிபலிப்பாக கேட்கும் இந்த கேள்வி நான் யார் ? ?

"என்னை யாரென்று எண்ணிப் பார்க்கிறேன்"
தாயாய்
மகளாய்
தாரமாய்
தங்கையாய்
தோழியாய்
காதலியாய்
மன்னிக்க
முடியாத
மறைமுக
எதிரியாய்
இப்படியாய்
எனக்கு
எத்தனையோ
வேடங்கள்.
பெண்ணென
பிறந்திடல்
வரமா
சாபமா
எதுவும்
தெரியாமல்
எத்தனையோ
எதிர்வினை
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
அடிப்படை
பேதங்கள்
உடலில் தான்
என்றாலும்,
எதிர்கொள்ளும்
பார்வையில்
எத்தனை
பேதங்கள்?
எனக்கென
வாழாமல்
பிறர்க்கென
வாழ்ந்தே
பாதிப்பிறவி
பயனற்றுப்
போனது
என்றேனும்
ஒரு நாள்
நான்
இறந்து
போனதும்,
மண்ணோடு
மண்ணாய்
மறைந்திடும் என்
திறமைகள்,
நான்
உயிரோடு
இருக்கையில்
கொல்கிறது
அனுதினம்.
ஆனாலும்
உங்களுக்கு
அதுவெல்லாம்
தெரியாது
சொல்வதற்கு
உங்களிடம் தான்
எத்தனையோ
குறைகள்

//
- ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் குறை சொல்லாமல் இருப்பதற்க்கு இங்கு யாருமில்லை!!!

"விமர்சனம்"
விமர்சித்த பின்
என்னிடத்தில் நீயும்
உன்னிடத்தில் நானும்
இருந்து
வாசித்து பார்த்தால்
தெரியும்
இதில் தவிர்கக
வேண்டியதே ஏராளம் என...

"இரவு பயணம் "
இரவில் இரயில் பயணத்தில்
ஏங்கும் புதுமணத் தம்பதிகளின்
மனதினை படம் பிடித்து
காட்டும்
கவிதை
அழகான இரவு பயணம்...

"எத்தனை இன்பம்"
என்ற வரிகளில் தெரியும் வலிகள் நாம் தொலைத்த கிராமத்து வாழ்க்கையின் சுவடுகளாக....

"நான்"
என்ற கவிதையில் வரும் நானாகவே வாழத்தோன்றியது ..... எத்தனை விதமான நம்பிக்கை நான் என்ற எனக்குள்...

"நிலவுக் காதலியிடம்"
எத்தனை கேள்விகள்??
விடை கிடைக்குமா?

"கைவளையல் சத்தமிட"
எண்ணற்ற கனவுகளுடன்
அத்தை மகளின்
அத்தானுக்கான
ஏக்கமானாலும் அழகா
“கைவளையல் சத்தமிட
கால்விரலும் கோலமிட
காத்திருக்கேன் மாமனுக்கு
வேறுதுணை யாரெனக்கு”

- எத்தனை ஏக்கமானாலும் மாமன் தான் மருந்தென்று காத்திருக்கும் மணப்பெண் அழகே!!
"உன்னோடு நான்"

அலைபேசி
அனைவரின்
வாழ்விலும்
அகலாத
ஒன்றாய்
அனுதினமும் ....
//
ஈரத் தலையோடு
இன்முகம்
காட்டுகின்ற,
இளநங்கை
போன்றங்கே
பல தென்னை
மரங்கள்!
ஏற்றுக் கொள்
எனச் சொல்லி
என் மீது
படர்ந்திட்ட,
மழைத்துளிகள்
ஒவ்வொன்றும்
இனிப்பவைகள்!
//
"இல்லத்தரசி"

கனவுக்
குப்பைகளை
கைகழுவித்
தள்ளி விட்டு,
யதார்த்த
வாழ்க்கைக்கு
எப்பொழுதோ
பழகியவள்!
சுதந்திரக்
காற்றையெல்லாம்
சுவாசிக்கத்
தெரியாமல்,
அடிமைத்
தளையினையும்
அனுபவித்
திருப்பவள்!
தனக்காக
வாழாமல்
பிறர்க்கென
வாழ்ந்திருந்து,
தனக்கென
இருந்ததோர்
வாழ்வினைத்
தொலைத்தவள்!
அடுப்படியில்
அனுதினமும்
இடுப் பொடிய
கிடந்தாலும்,
அலுத்துக்
கொள்ளாத
சமையல்
காரியவள்!
வருங்காலம்
என்பதையே
முற்றிலும்
மறந்துவிட்டு,
நிகழ்காலக்
கடமைகளில்
நெஞ்சம்
நிறைபவள்!
இல்லத்தரசி
யென்ற
பட்டமொன்றை
சுமந்து கொண்டு,
இல்லத்
தடிமையாய்
இன்முகம்
காட்டுபவள்!
முற்றும்
துறந்து விட்ட
முனிவனைப் போல்
வாழ்ந்தாலும்,
சாபங்கள்
மட்டுமே
வாழ்க்கையிலே
பெற்றவள்!

// - நிதரசனமான உண்மை

வாழ்த்துகள் சகோ 💐💐

தங்கள் எழுத்து பயணம் சிறந்து தொடர வாழ்த்துகள்..

இந்த நூலினை வாங்குவதற்கு

https://read.amazon.in/kp/kshare?asin=B08QZ4THV8&id=irpxlcf7fjeitoz2fmwhruspyq&fbclid=IwAR07BeR8V4OwDhMXyGLjhnBUGC1acVDAXlbb9rB8DEGeQ7jbm3ra6aFJoWA&reshareId=TNP8SD0G6W4T3FTV1Z8Q&reshareChannel=system

அன்புடன் ,

தேவேந்திரன் ராமையன்
07 ஜனவரி 2021

Saturday, 26 December 2020

திறந்து வாசிக்கப்பட வேண்டிய மனிதர்கள். (சிறுகதை தொகுப்பு) ஆசிரியர். : இராஜேஷ் இராமு

 புத்தக_விமர்சனம்

நூல். : திறந்து வாசிக்கப்பட வேண்டிய மனிதர்கள். (சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர். : இ ரா ஜே ஷ் இ ரா மு
அமேசான் மின்னூல்







நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த ஒரு மன நிறைவுடன் இந்த பகிர்வினை இங்கு பதிவிடுகிறேன்.
நண்பர் மருத்துவர் ராஜேஷ் ராமுவின் இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற ஆறு சிறுகதைகள்:
1.கிழட்டுப் பனைமரம்
மிக அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது!!இடம்பெற்ற கிழட்டு பனைமரமும் கிழவனும் எவ்வாறு பயணிக்கிறார்கள் இந்த கதையில் என்பதை அருமையாக விவரித்திருக்கிறார். சுருங்கிப் போன தேகம் கொண்ட கிழவன், தான் எல்லா மரங்களிலும் ஏறிய அனுபவங்களுடன் அவனது முதிரந்த வயதில் தனது ஒலை குடிசையின் ஒலைகள் தறர்நதிரிபதினை கண்டு ஓலை தானே தளர்ந்திருக்கிறது, சட்டம் ஒன்றும் ஆகவில்லையே" என்று சொல்லிகொண்டே புரியும் புன்னகையும் அதற்க்காகவும் பேரனின் பட்டம் அந்த நெடுநடுவென வளர்ந்த பனைமரத்தில் மாட்டிகொண்டதாலும் எப்படியாவது இந்த “கிழட்டு பனைமரத்தில்” ஏறிவிட வேண்டும் என்று மன உறுதியுடன் ஏறி விடுவதும் மிக உணர்சசிபூர்வமாகவும் எழுதியிருக்கிறார் நண்பர்.
2. கல்
“மரணிக்கும் வரை உயிர் பிழைக்கப் போராடுவதே உயிர்களின் இயல்பு.” என்பதனை மிக இயல்பாகவும், அழகாவும் கூடவே விறுவிறுப்புடன் நம்மை அந்த கடலுக்குள் கட்டுமரத்திலும் அஹ்மது மரைக்காயருடனும் பயணிக்க வைக்கிறார் நண்பர் ராஜேஷ் ராமு. போராட்டத்துடன் “தோல்வியை வரவேற்றுக் கிடப்பதைவிட. வெற்றியுடன் போராடித் தோற்கலாம். எனக்காக இல்லையென்றாலும் பரிமளத்திற்காக நான் கரை திரும்பியாக வேண்டும்”, என்று நினைத்துக் கொண்டு போராடி வருவதே கதை!!
இறுதியில் இருக்கும் கல்லின் மகிமைதான் கதையின் தலைப்பு - சரியானதே என்று சொல்லலாம்.
3. லாரி
குலதெயவத்திற்ககு நேர்த்தி கடன் செலுத்த ஒரு ஊரே பயணிக்கும் வாகனமான “லாரி” தான் இந்த கதையின் நாயகன் நாயகி... மிக அழகாக இந்த செல்கிறது கதையும் லாரியும் கூடவே வாசித்த நானும்.
4. செராஃபினா
இதில் வரும் ஒரு பெண் தேவதையை மையமாக கொண்டு வரையபட்ட ஓவியம். இது போல் எத்தனையோ தீட்டபடாத ஓவியங்கள் உலாவிகோண்டுதான் இருக்கின்றன. சமுதாயம் என்னும் சுவற்றில் அனேகமாக தீட்டபட வேண்டிய தேவதைகளின் ஓவியங்கள் ஏராளம். தனித்துவிடபட்ட ( கைவிட பட்ட பெண்) ஒரு பெண்ணின் வலியையும் அவளின் நினைவுகளையும் சுமந்து செல்கிறாள் இந்த செராஃபினா என்ற தேவதை!!
5. பொர(ற)வி
இந்த பொறவி நம்மை அழைத்து செல்லும் இடம் எல்லைகளை காத்துகொண்டிருக்கும் காத்தவராயர்களின் பிரதேசத்திற்ககு. இன்றளவும் ஊருல ஒரு தப்புத் தண்டான்னா… சுடல சும்மா விடுமா… ஊர்க் காவல் தெய்வம் இல்லையா….! அதான்… சுடல பொரவில வந்து காத்தவராயன் தலைய வாங்கிட்டுப் போயிருச்சு…” என்று இருக்கும் பெரும்பகுதி சமூகத்தின் வெளியில் தெறியாத வலியின் கதை.
6. கண்ணாமூச்சி
அம்மா அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் என்றால் தினமும் தனியாக இருக்கும் அதுவுமர ஒரு குழ்ந்தையாக இருக்கும் அமீராவும் அவளுக்கும் புதிதாக கிடைக்கும் பக்கத்து வீட்டு பாட்டியும் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு தான் இந்த கதை. ஒரே குழுவிற்குள் மாற்றி மாற்றிப் பெண் எடுத்தலும் கொடுத்தலுமாக இருந்ததால், பெருமை வாய்ந்த அந்தக் குடும்பமும் குழுமக்களும் குழந்தையின்மை, மரபணு கோளாறு எனக் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்தனர் இந்த குழுமத்தில் பிரிந்து வந்த ஒரு குழ்நதையில்லா தம்பதியின் கடைசிகாலத்தில் கணவரை இழந்த அந்த நானிதான் அமீராவின் புதிய நண்பர் பாட்டி என்று எல்லாமும் என்று கதையினை உணர்ச்சி பூர்வமாக விளையாட்டுக்குள் நம்மை கண்ணாமூச்சி விளையாட வைத்துள்ளார் நணபர் ராஜேஷ் ராமு.
நல்லொதொரு சிறுகதை தொகுப்பினுடன் பயணித்த சில நாட்கள்...

நன்றி
தேவேந்திரன் ராமையன்

Friday, 25 December 2020

ரப்பர் வளையல்கள் - வாசிப்பு அனுபவம்


நூல்        : ரப்பர் வளையல்கள்

                  (சிறுகதை தொகுப்பு)

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்

அமேசான் மின்னூல்.

விலை : ₹99



நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பான  "ரப்பர் வளையல்கள்" இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதையினையும் நடப்பு காலகட்டத்தில் இருக்கும் சில சமூக அவலங்களையும், சமுதாய வாழ்வியலையும் சில வரலாற்று கதைகளையும் கொண்டு மிக அழகாகவும் சில கேள்விகளை சமுதாயத்திற்கும் கேட்டு தனது கதையின் ஊடே நமக்கு கொடுத்திருக்கிறார்.

1. ரப்பர்  வளையல்கள்  

சமூகத்தில் “ ஏழை சொல் அம்பலம் ஏறாது” என்ற சொல்லுக்கிணங்க இந்த ரப்பர் வலையல்கள் என்னதான் அடித்து கொண்டாலும் சத்தம் வராது என்பதை ஒரு ஏழையின் மீது வங்கியினர் செய்யும் செயல் மூலமாக ஆசிரியர் நமக்கு சொல்லி செல்கிறார். 

2. மாற்றுக் கொலை  

சாதி மற்றும் ஆணவம் இவைகள் இன்றளவும் சமூதாயத்தில் பரந்து விரிந்து கிடக்கும் குப்பை, இவைகளை களையவேண்டும் என்ற சிந்தனையை, இந்த அவள பெண்ணின் கொலை நமக்கு சிந்திக்க தூண்டுகிறது.


 3. செம்மலர்  

எல்லோரும் சமமே என நம்மில் எத்தனை பேர் ஏற்றுகொள்கிறோம், நிறம், வசதி, படிப்பு மற்றும் ஆடம்பரம் என இவை எல்லாம் இருப்பவர்களையே மனிதர்கள் என்று நினைத்தை உண்மையான “மனிதம்” படைத்தவர்களை கண்டுகொள்ளாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியாக ஒரு ஆழ்ந்த கருத்தினை இந்த அழகிய “செம்மலர்” நம் மனதில் மலர வைக்கிறாள்.


4. உணர்வுகள்   

உணர்வுகள் என்ற கதையின் வழியே இளங்காதலர்களுக்கு இடையே ஏற்படுகின்ற எதிர்பார்ப்புகளை அழகாக பட்டியலிட்டுள்ளார். தங்கள் உணர்வுகளை உணர்நதுகொள்ள முடியாத சூழலில் எற்படும் வலியே பிறிவுக்கு அடுத்தளம் எனபதை அழகாக உணரவைக்கிறது இந்த “உணர்வுகள்”.


5. வெண்ணி  

இந்த கதை சோழர்களின் வீரத்தையும் வரலாற்றையும் அழகாக சொல்கிறது. 


6. பணமதிப்பிழப்பு  

இந்த நாள் எத்தனை எத்தனை இழ்ப்புகள் எனபதை நாம் எல்லோரும் அறிந்ததே!. ஆனால் இந்த சூழலையும் ஒரு நேர்மறையாக்கி ஒரு கதை அழகாக சொல்லியிருக்கிறார் நண்பர்.


7. கொடுக்காப்புளி  

இயற்க்பையின் சாபக்கேடு என்னவோ தெரியவில்லை, நண்பர்களின் கூட்டத்தில் ஒருவன் எப்பொழுதும் அடுத்தவர்களால் இழவிற்க்கு உள்ளாவது!! அதுபோலவேதானர இங்கு “ கொடுக்காபுள்ளி” வாழ்கிறான். கதையின் முடிவு அருமை...


8. அலங்கரிக்கப்பட்ட பொய்கள்   

பெரும்பாலும் பொய் சொல்லும் போது ஏதோ ஒரு இடத்தில் மாட்டிகொள்வதும் இயற்ககையே. அப்படியே ஆசிரியரே பொய் சொல்லி மாட்டி கொள்கிறார். அழகான கதை.


9. தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்   

இனணயதளத்தில் முகபுத்தகம் முதல் உள்ள அனைத்து சமூக வலைதளத்தி்ல் உளா வருவம் போலி செயதிகள் பின்னணியில் நடைபெறும் கதையினை அழகாக சொல்லியிருக்கிறார்.

 

10. எச்சில்  

பழிவாங்கும் எண்ணம் என்பது நம்மில் மறைந்து கிடக்கும் ஒரு குப்பை எனபதை உணர்ததும் கதைதான் இந்த கதை. பழிவாங்கும் சமயம் கிடைத்த போது அதை செயல்படுத்திய அர்ப்ப சந்தோஷத்தில் இருக்கும் ஒருவரின் கதை..


11. மேய்ப்பர்  

கடவுள் மீது இருந்த நம்பிக்கை நல்லதையே கொடுத்தது ஆனால் அதற்க்கு விலையாக அப்பாவின் உயிர் தான் கொஞ்சம் அதிகம்.


12. ‘அட்ரஸ்’ பாலாஜி  

தனக்காக சினிமாவில் ஒரு அட்ரஸ் தேடி சென்னைக்கு வரும் ஏராளமானவரில் அட்ரஸ் கிடைப்பதென்னவோ சிலருக்கே. அப்படிதான் இந்த கதையின் நாயகன் “அட்ரஸ் பாலாஜி”யாக மாறியது. எதார்தத சூழ்நிலைகளை அழகான கதையாக்கியருக்கிறார்.


13. லாக்டவுன் சமையல்  

இந்த சம்பவம் பெரும்பாளான இல்லத்தில், அரங்கேறிய நிகழ்வுகளாகதான் இருக்கும் வாசிக்கும் நம் அனைவருக்கும். இங்கே ஏற்படும் சின்ன சின்ன கலாட்டாகளை கதையாக்கியிருக்கறார் நண்பர்.


14. பெருமூச்சு  

உலகையே உலுக்கி எடுத்த கொடிய நோயினால் மக்களுக்கு ஏற்பட்ட மன உலைச்சல்களை மையமாக கொண்டு எழுதபட்டதுதான் இந்த “பெருமூச்சு”. எத்தனையோ அப்பா அம்மாக்கள் அனாதையாகவும், ஆதரவற்றவர்களாகவும் தள்ளபட்ட சூழலில் கொள்ளைநோயால்  உயிர்போன பின் என்ன நிலையென்பதை நான் அனைவரும் உணர்ந்ததே!! அழகாக சொல்லியருக்கிறார் இந்த “அப்பா விடும் பெருமூச்சு” அதன் இந்த கொள்ளை நோயிலிருந்து மீனடு வந்ததும்.


15. இ.யெம்.ஐ  

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டி தனது  வாழ்க்கை தரத்தை கடன் பெற்றாவது உயர்த்திகொள்ள வேண்டிய கட்டாய சூழலில் தவிக்கும் மனிதர்களின் வலியினை வெளிபடுத்தும் கதை. நண்பரின் கதையில் வரும் நாயகனுக்கு திடீரென ஏற்படும் சூழல் அதிலிருந்து சாமர்த்தியமாக வெளி வருவது சரிதான். ஆனால் அவன் இயல்புக்கு திரும்பும் வரை?


16. ஆன்லைன் ரம்மி  

சூதாட்டம் காட்டும் ஆசை மீளமுடியாத ஒன்று. இந்த கதையை படிக்கும் போது எனது சிறு வயது ஞாபகங்கள் வருகிறது. எங்கள் ஊரில் நடைபெரும் திருவிழாவிற்க்கு “சூதாட்டம்” கட்டாயம் இடம்பெறும். எங்கள் தெருவின் கடைசியில் காலியாக இருந்த களம் தான் சூதாட்ட பந்தல் இருக்கும். காலையில் மாப்பிள்ளைபோல போகிறவர்களில் பலர் திரும்பும் சைக்கிள், வாட்ச், மோதிரம் மற்றும் பணம் எல்லாம் இழந்து வருவார்கள் பாவமாக இருக்கும் ஆனால் மறுநாள் காலையில் கடன் வாங்கிகொண்டு விட்டதை மீட்க வருவார்கள். அந்த ஆசை யாரையும் விடுவதில்லை என அழகாக சொல்கிறார் நண்பர்.


17.கிணத்துக்கடவு  

இந்த “கிணத்துகடவு” தமிழகத்தில் உள்ள பெரும்பாளான கிராமங்களின் ஒரு பிரதிநிதியாகவே பார்கக வேண்டும். ஆம் இன்றளவில் பெரிதும் அவலநிலையில் இருக்கும் விவசாயிகளின் கதையைபற்றி கொஞ்சம் பேசுகிறது.  விவசாயிகளின் பிரச்சினையை கொண்டு அவரை கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாய பொருள் விவசாயிடமிருந்து கடைநிலை பயண்பாட்டுக்கு வருவதற்க்குள் எத்தனை விலையேற்றம் எனபதை சொல்லியிருக்கலாம்.


18. பற்றாக்குறை  

உயிரனங்களின் வாழ்வாதாரமாக திகழுமழ “தண்ணீர்” அவ்வுயிரனங்களுக்கு கிடைக்காமல் நுறுவனங்களால் கொள்ளையடிக்க படுவதை முன்னறித்தி இந்த “ பற்றாக்குறை” என்ற கதை பேசுகிறது.


19. தாரா

தாரா, வாழ்ககையில் வழுக்கி விழும் பெண்களில் தாராவும் ஒன்று. பழிவாங்குவது என்ற என்னம் இல்லாத மனிதர்கள் இல்லை எனவே தன் வாழ்வினை சீரழித்தவர்களை பழிவாங்கிவிட்டு தானும் மாய்ந்துவிடுகிறாள்.

மொத்ததில் ஒவ்வொரு கதைகளும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்கால செயல்களை அடிப்படியாக கொண்டு மிக அழகாவும்  தெளிவாகவும் சொல்ல வந்ததை ஆசிரியர்  சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை வாசித்து பாருங்கள் ..

வாழ்த்துகள் சகோ 💐💐💐

தொடரட்டும் தங்கள் எழுத்து பயணம்.....


அன்புடன்,

 

தேவேந்திரன் ராமையன் 

Sunday, 20 December 2020

ஊர்திரும்புதல் -25

ஸ்ரீ மந்தகரை காளியம்மன் கோவில் திருவிழா 


அவனின் ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதுதான் காளி என்றோரு அழகிய பெரிய கிராமம்.  அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாய் ஸ்ரீ மந்தகரை காளி அம்மன் அரணாக வீற்றிருக்கும்.




தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் வந்தாலே பக்கத்து ஊர்களுக்கெல்லாம் காளியின் மந்தகரை காளியம்மன் கோவில் காவடித்திருவிழாதான் நினைவுக்கு வரும். வருடம் தவறாமல் காவடித்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும்.  

அப்படித்தான் அவனும் தனது சிறுவயதில், நண்பர்களுடனும்,  ஊர்ப்  பெரியவர்களுடனும் அந்தத்  திருவிழாவுக்கு போய்வருவதுண்டு. அவன் சிறிய வயதில் திருவிழாவுக்கு  செல்வதுபற்றி  திட்டமிடுவான். யாரிடம் எவ்வளவு காசு வாங்குவது, எந்த நேரத்தில் போவது, என்னென்ன வாங்கி சாப்பிடுவது, என்ன விளையாட்டு பொருள் வாங்கிவருவதென்பதுவரை அதில் எல்லாம் அடங்கும். 

சித்திரை மாத வெயிலில் நண்பர்களுடன் நடந்தே  காளிக்குப்  போய் அந்த திருவிழாவினை கண்டு களிக்க அவனுக்கு  வருடாவருடம்  எழும்  ஆவல்  தணிந்ததே  இல்லை. 
 
ஸ்ரீ மந்தகரை காளியம்மன், காளி கிராமத்தின்  மெயின் ரோட்டிலேயே  கோவிலில்  வீற்றிருக்கும். திருவிழா சமயத்தில் அந்த ரோடு முழுவதும் தென்னங் கீற்றினால் பெரிய பந்தல் போடப்பட்டிருக்கும். பந்தலின் உட்புறம் வெள்ளை வேட்டிகளால் மறைக்கப்பட்டு இருக்கும். அந்த பந்தலின் நுழைவு வாயிலின் இருபுறமும் குலைதள்ளிய வாழை மரங்கள் கட்டப்பட்டிருக்கும். தங்கநிறம் கொண்ட தென்னம்  பாளைகளினாலும், பனை குலைகளினாலும், ஈச்சங் குலைகளினாலும் அழகாக  அலங்கரிக்க பட்டிருக்கும்.  அதனுடன் நடுநடுவே  வண்ண வண்ண காகித பூக்களின்  வரிசை இளங்காற்றில்  அசைந்தாடி பார்ப்பவர்  கண்களை  ஈர்க்கும். தென்னைஓலை  தோரணங்களும் அந்த  பந்தலினையும்  வீதிகளையும்  திருவிழா மனநிலைக்கு உரிய  மங்களத்தை   கொண்டுவரும்.  

பந்தல் முகப்பு வண்ணம் தீட்டிய தென்னங்  கீற்றுகளால் கோபுரம் போல அலங்கரிப்பட்டிருக்கும். அதன் மீது வண்ண வண்ண மின்மினி விளக்குகள் அழகாக பொருத்தி இருக்கும். அந்த மினுக்கும் மின் விளக்குகள்  இரவில் கண்கொள்ளாக்  காட்சியாக இருக்கும்.   

திருவிழா என்றாலே புதிது புதிதாக  கடைகள் வருவது வழக்கமாக தொன்று தொட்டு இருந்து வருவது. அதுபோலத் தான் இந்த ஊர் திருவிழாவிலும் ஒவ்வொருமுறையும் எண்ணற்ற கடைகள் வருவது வழக்கம். காளியம்மன் கோவில் தெருவெங்கிலும் புதிதாய் முளைத்த திருவிழா கடைகள் வண்ண வண்ணமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும். கண்ணாடியினால் நான்குபக்கமும் மூடப்பட்ட தள்ளு வண்டியில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  அருகில் செல்பவர்களை பலகாரங்களின் வாசனை சுண்டி இழுக்கும்.  நினைக்கும் தோறும் நாவில் எச்சில் ஊரும்.  




சாலையின் ஓரத்தில் வண்ணவண்ண பலூன்களுக்குள் காற்றினை ஊதி அழகாய் அதனை பல உருவங்களாக மாற்றி அருகில் செல்லும் குழந்தைகளின் மனதையும் மாற்றி கொண்டிருக்கும் பலூன் வியாபாரிகள் ஒருபுறம்.  

மூங்கிலில் செய்த ஊதுகுழல்களை  வியாபாரிகளிடம்மும்,  அடிக்கும் ரோஸ் வண்ணத்தில் ஜவ்வு மிட்டாயை  ஒரு கம்பத்தில்  சுற்றிவைத்து அதனை  இழுத்து இழுத்து கைக்கடிகாரம், மோதிரம், மீசை மற்றும் வித விதமான அணிகலன்களை செய்துவிற்கும் வியாபாரியிடம் சிறுவர்கள்  ஈ மொய்ப்பது போல் கூட்டமாக நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள்  சிறுவர்களுக்கு  காட்டும்  வேடிக்கைகளும்  ரசிக்கும்படி இருக்கும். அந்த  ஊதுகுழல்களை  வாங்கிய  சிறுவர்கள்  ஆர்வத்தில்  ஊதி எழுப்பும்  ஒலிகள்தான்  அங்கே  திருவிழா  நிகழ்ந்து  கொண்டிருப்பதையே நினைவுபடுத்தும். 


மற்றொரு இடத்தில் விளையாட்டுக்கடைகளும்  இருக்கும். அது  கொஞ்சம்  பெரியவர்களுக்கானது. அங்கே பிஸ்கெட், சோப்பு  டப்பா என்று  பலவிதமான  பொருள்களைப் சீரான இடைவெளியில் பரப்பி வைத்திருப்பார்கள். அந்த  வியாபாரி  கைகளில்  வளையங்கள் இருக்கும். போட்டியில்  பங்கேற்க  விரும்புபவர்  வியாபாரியிடம்  ஒரு  ரூபாய் கொடுக்க  வேண்டும். அதற்கு 3 வளையங்கள்  கிடைக்கும். போட்டியாளர் மூங்கில்  தடுப்புக்கு  பின்  நின்று  அடுக்கடுக்காக  வைக்கப்பட்டிருக்கும்  பொருட்களின்  மீது  குறிவைத்து  வளையங்களை ஒன்றின்  பின்  ஒன்றாக  எறியவேண்டும்.  அது எந்த பொருள்மீதாவது சரியாக  சுற்றி விழுந்துவிட்டால், அதுதான்  வெற்றி. எறிந்த  போட்டியாளருக்கு  அந்தப்  பொருள் கொடுக்கப்படும். 

அதை  அடுத்து  வளையல்கள், மணிகள், மற்றும் அழகுசாதன பொருட்கள் என பெண்களுக்கான சிறப்பு கடைகள் அதிக அளவில் இடம் பிடித்திருக்கும். காளியம்மன் கோவில் வீதியின்  கடைசியில் ராட்டினம் மேலும் கீழுமாக  சுழன்று கொண்டிருக்கும்.  அதனுள்ளே ஆரவாரத்துடன் சிறுவர் சிறுமியர்கள் கத்திக் கொண்டாடிக்கொண்டிருப்பார்கள். 

சித்திரை மாதவெய்யிலின் தாக்கத்தைப் போக்க தண்ணீர்ப் பந்தல்களில் , நீர்  மோர் கொடுக்கப்படும். ரோஸ் மில்க், சேமியா பாயசம், நன்னாரி சர்பத் என எந்த பக்கம் திரும்பினாலும் இரண்டு மூன்று கடைகள் இருக்கும். 

அங்கேயே  இரும்புச் சாமான்  கடைகளையும் காணலாம். இரும்புக்கடைகளில் தோசைக்கல் முதல் அரிவாள்மனை வரை எண்ணற்ற இரும்பாலான  வீட்டு உபயோகப்  பொருள்கள் கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் இது போன வருட திருவிழாவில் வாங்கியது, இது மூன்று வருடம் முன்பு வாங்கியது என பேசக்  கேட்கலாம்.

இந்தத்  திருவிழா காளியம்மன் கோவில் வீதியில்  நடப்பதால் அங்கு இருக்கும் மண்பானைகள் செய்யும் நண்பனின் வீட்டுக்காரர்கள் கடையும் இருக்கும். இதில் பெரும்பாலும் சிறியவகை மண்பாண்டங்கள் விற்பனை செய்யப்படும். மண்சட்டிகள் முதல் சூட்டு அடுப்புவரை எல்லாம் விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.

அவனுக்கு அதிகளவில் பள்ளி நண்பர்கள் அந்த ஊரில் இருப்பதால், திருவிழா சமயங்களில்  அவனுடைய நேரங்களை வெகுவாக நண்பர்களுடனே செலவழிப்பான். கடை வீதியெங்கும் சுற்றுவதும் பலவகையான தின்பண்டங்கள் வாங்கி சுவைப்பதுமாக அவனது நேரம் இனிமையாகக்  கழியும். ராட்டினம் ஏறி விளையாடியதும், காந்தி தாத்தா கண்ணாடிபோல பிளாஸ்டிக் பேப்பரில் செய்த வண்ண வண்ண கண்ணாடிகள் வாங்கி மாட்டிக்கொள்ளுவதும், அது ஒருமணி நேரத்திற்குள்ளவே கிழிந்து போவதும் என, சில சந்தோஷங்களும் சில சோகங்களும் சேர்ந்து அந்த பொழுதுகள் கழியும். 

அவன் தனது சிறுவயதில் எப்போதும் அவனது பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ  நடந்தே போவான். சற்று வளர்ந்து அவன் அந்த ஊர்ப்  பள்ளியில் சேர்ந்த பிறகு தனியாகவே  அவனுடைய பள்ளி நண்பர்கள்கூட  போய்விடுவான்.


அப்போதெல்லாம் சிறுவர்கள்  வண்ண வண்ணக்  கண்ணாடிகளை அணிந்து, கைகளின் ஊதுகுழலும், வண்ண வண்ண பலூன்களும், பலூன்களினால் செய்த பொம்மைகளுமென கூட்டம்  கூட்டமாகப் போவது அவனுக்கு  குட்டி குட்டியாக கடைகளே நடந்து போவதுபோல ஒரு காட்சி தோன்றும்.      எல்லா திசையிலும் சுற்றி இருக்கும் கிராமங்களின் மக்கள்   இந்த திருவிழாவில் ஆண்களும் பெண்களுமாய்  பெரும்திரளாக வருவதும் போவதுமாக ஒரே மக்கள் கூட்டமாக இருக்கும். 

பெரும்பாலான பக்தர்கள் பால் குடம் எடுப்பதும், காவடி எடுப்பதும் என தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டிருப்பார்கள். 

வண்ணமயமான அந்த திருவிழாவில் சுற்றி இருக்கும் அத்தனை கிராமங்களும் கூடி கொண்டாடுவதும், திருவிழா முடிந்ததும் வீடுகளுக்கு திரும்பும் மக்களை பார்க்கும் போது எறும்புகள் கூட்டம் கூட்டமாக செல்வது போல ஒரு வகையான உணர்வு  தோன்றும்.  

சித்திரை மாதத்தினை மிகவும் விமரிசையாக இந்த கோவில் திருவிழாவுடன் அந்த சுற்று கிராமங்கள் எல்லாம் வரவேற்கும். அந்த நாளில் வந்து இருக்கும் எல்லோரும் காளியம்மன் அருளோடு புது வருடத்தினை ஆரம்பிக்கிறார்கள்.

இன்றளவும் இந்த திருவிழா நடைபெற்றுக்  கொண்டே இருக்கிறது.

  
              


Sunday, 13 December 2020

வேலை நிறுத்தம் ஏன் - நூல் விமர்சனம் ( ஆசிரியர் : மக்கள் எழுத்தாளர் விந்தன்)

நூல்.         :  வேலை நிறுத்தம் ஏன்            

ஆசிரியர்   :  மக்கள் எழுத்தாளர்  விந்தன்



இந்த கட்டுரை தமிழ்நாட்டில் (1945-46) எழுந்த வேலை நிறுத்தப் போராட்டங்களின் தாக்கத்தினால் எழுத்தாளர் விந்தன் எழுதிய கட்டுரை தொகுப்பு தான் இந்த நூல். 

எழுத்தாளர் 'விந்தன்' அவர்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் என்றுதான் தமிழ் உலகம் அறியும். அவர் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளிலும் தீவிரமாகச் சிந்திக்கிறார் என்பதற்கு இச் சிறுநூல் ஒரு சான்று.

இந்த கட்டுரையில் ஆசிரியரால் கேட்கபடும் கேள்விகளுக்கு அன்று முதல்  இன்றுவரை விடை தெரியாத  புதிராகவே இருக்கிறது. இத்தகைய சூழல் இன்றளவும் இருக்கிறது என்றால் இந்த பிரச்சனைகள் இருந்துகொண்டே தான் இருக்கும் எனபதில் நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?


“அன்றைய வாழ்க்கைச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் ஆடம்பரங்களும் வசதி வாய்ப்புகளும் கூடியுள்ள இன்றைய நிலையிலும் கீழ்த் தட்டு மக்கள் நிலை மாறாமலேயே - வறுமைக்கோடு என்பதற்குக் கீழேயே பலகோடி மக்கள் பாரதப் புண்ணிய பூமியில் வாழ்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்”


ஆசிரியர் ஒரு தனி மனிதனை பற்றி கூறும்போது, சமுதாயத்தில் எவரும் தவிர்க்க முடியாதவர்கள்; தனித்தியங்க, தனித்து நிற்க, தனித்து ஒதுங்க எவராலும் இயலாது.  ஒட்டு மொத்த சமுதாயமே மனித குல அமைப்பு. இதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.  மனிதகுலம் முழுமைக்கும் ஒரு நல்வழியைத் தேடி ஆய்ந்து முடிவாக அறிவித்தவர், மனித குலத்தின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர் காரல் மார்க்ஸ்.  சிறு சிறு குழுக்களின், சிறு சிறு நாடுகளின் வளர்ச்சியிலும், தனிமனிதனின் உழைப்பிலும் வளர்ச்சியிலும் முழுமையான சிந்தனை செய்து முடிவுகண்டு முதலில் உரைத்தவர் அறிஞர் கார்ல் மார்க்ஸ்!

விடை காண முடியாத வினாக்களே மிகுதி! இதுவே வாழ்வு இதுவே உலகம்...

நோய் தோன்றத் தொடங்கினால் தொடக்கத்திலேயே கண்டறிந்து தீர்க்க முயல வேண்டும். மனிதர்க்கு உரியதே சமூகத்திற்கும் பொருந்தும். தொழிற் கூடங்களுக்கும் பொருந்தும்; ஆட்சிச் செயலரங்குக்கும் பொருந்தும்.  நீயா, நானா என்பதும், உயர்வு தாழ்வு என்பதும், அமைப்புகளின் வேர்களைப் பறிக்கின்ற தீயவுணர்வுகளாகும்.  நாம் அனைவரும் சமமானவர்கள். பாரத சமுதாயம் எனப் பாரதி பாடியதைப் பாடுவதோடு நிற்காமல், பாராட்டுவதோடு நிற்காமல், சிந்தித்துச் செயலில் கைக்கொள்ள வேண்டும்.

தொழில் வளர்ச்சியிலும் பொருளாதாரத் துறையிலும் இந்தியா தங்களுக்குச் சமமாகத் தலை தூக்குவதைப் பிரிட்டிஷார் எப்பொழுதுமே விரும்புவது இல்லை யென்பது எல்லோரும் அறிந்த விஷயம்.  ஆனால், ஜப்பான் குள்ளர்கள் இந்தியாவின் வாயிலில் காலடி எடுத்து வைத்தபோது, பிரிட்டிஷார் தங்கள் சுயநலக் கொள்கையை ஓரளவாவது மாற்றிக் கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.

பாடுபடும் ஏழை எலும்புந் தோலுமாகி மடியவும், பாடுபடாத பணக்காரன் பருத்திப் பொதியைப் போன்று வளரவும், பிரிட்டிஷாரின் சுயநலக் கொள்கை இடம் கொடுத்தது.  இந்திய முதலாளி வர்க்கமும், வர்த்தக வர்க்கமும் பிரிட்டிஷாரின் கணக்கற்ற காகித நோட்டுகளைக் கைநிறைய பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ராணுவத் தேவையைப் பூர்த்தி செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தன.  ஏழை ஜனங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று அவர்கள் ஏகாதிபத்தியத்தின் சதிக்குத் துணையாக நின்றனர். 

இந்தக் காலத்தில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் புண்ணியவான்கள், அவர் களுடைய வாழ்க்கைத் தேவையைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்க வேண்டும். 

இன்னும், போதாக் குறைக்குக் கள்ள மார்க் கெட்டில் ஒன்றுக்கு இரண்டு மூன்று மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்கவேண்டிய அவசியமும் தொழிலாளிகளுக்கு ஏற்படாமற் போகவில்லை. விலைவாசிகள் விஷம்போல் ஏறியிருக்கும் இந்தக் காலத்தில் மேற்கூறிய சம்பள விகிதங்கள், பஞ்சப்படிகள் எல்லாம் எந்த மூலைக்கு?

துரதிர்ஷ்ட வசமாக இந்த நாட்டில் இன்று பிரபலமடைந்திருக்கும் பொதுஜனத் தலைவர்களில் பெரும்பாலோர், ஏழைத் தொழிலாளிகளின் உண்மையான வாழ்க்கை நிலையை அறியாதவர்கள்; அறிய முடியாதவர்கள்!  ஏனெனில், மேற்கூறிய தலைவர்களின் வாழ்க்கைக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது.  பசித்தவனுடைய வேதனையைப் பசித்தவன்தான் அறியமுடியும்; பசியாதவன் அறிய முடியாது.  அதே மாதிரி பசியாதவனுடைய சுகத்தைப் பசியாதவன்தான் உணர முடியும்; பசித்தவன் உணர முடியாது.

அதிகார வர்க்கம், "அமைதியை நிலை நாட்டுகிறோம்!" என்று சொல்லிக் கொண்டு, தன் மிருகத்தனமான அடக்கு முறைகளைப் பிரயோகித்தது.  எத்தனையோ அவசரச் சட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிறந்துகொண்டே யிருந்தன.

உணவுப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்கல்ல; உடைப் பஞ்சத்தை ஒழிப்பதற்கல்ல; கள்ள மார்க்கெட்டைத் தொலைப்பதற்கல்ல; லஞ்சப் பேயை விரட்டுவதற்கல்ல;  தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காகத்தான்!

தங்களுடைய வேலை நிறுத்தத்துக்குப் பங்கம் நேர்ந்து விடுகிறதென்று அஞ்சித் தொழிலாளிகள் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அமைதி குலைகிறது.  முதலாளிகள் போலீசாரின் உதவியை நாடுகிறார்கள்.  சர்க்கார் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய போலீஸ் உதவி அளிக்கிறது.  தொழிலாளிகள் ஆத்திரமடைகின்றனர். அதன் பலன் படுகொலையில் வந்து முடிகிறது! - சமீபத்தில் நடந்த சம்பவம் பற்றி 75 வருடங்களுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாய் சொல்லியிருப்பதில்  வியப்பதற்கு ஒன்றுமில்லை.  

இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டால் உழைக்காமல் உண்ணும் முதலாளிகள் எந்த வேஷந் தரித்தாலும் பொதுமக்களிடையே இடம் பெற முடியாது.

நல்லொதொரு சமுதாய சிந்தனை உள்ள ஒரு கட்டுரை தொகுப்பினை வாசித்த அனுபவமும் அதனால் ஏற்பட்ட தாக்கமும் குறைய வெகு நாட்கள் ஆகும் என்றே நினவுகிறான்.

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாசிக்கலாம் ....

                    

நன்றி 

ராம. தேவேந்திரன்