Sunday 4 December 2022

இக்கிகய்

 இக்கிகய் 

ஆசிரியர் : ஹெக்டர் கார்சியா & பிரான்ஸ்செஸ்க் மிராயியஸ்  

தமிழில் - பி.எஸ்.வி. குமாரசாமி 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 257

பக்கங்கள் 216


ஹெக்டர் கார்சியா & பிரான்ஸ்செஸ்க் மிராயியஸ் ஆகிய இவர்கள் டோக்கியோவில் இருக்கும் ஒரு சிறிய மது விடுதியில் கலந்துரையாடும் போது உதித்ததுத் தான் இந்த புத்தகத்திற்கான கரு என ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இக்கிகய்  இருக்கிறது, அவற்றைப் பயன்படுத்தி நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசுகிறது இந்த புத்தகம். மனிதன் நீண்ட காலம், எவ்வாறு மகிழ்ச்சியாக வாழும் ரகசியத்தினை பற்றிப் பேசும் அருமையான புத்தகம். ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொருவரும் தினமும் தனது உறக்கத்திலிருந்து மிகவும் உற்சாகமாக எழுவதற்கான காரணத்தினை இந்த இக்கிகய் வெளிப்படுத்துகிறது. 

உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் நீங்கள் நீண்ட காலம் வாழும் கலையினை அறிந்துகொள்வீர்கள் என்கிறார்கள் ஆசிரியர். லோகோ சிகிச்சையில் கிடைக்கும் பயன்களை மிகவும்  


நீண்ட ஆயுளுக்கான கின்னஸ் சாதனை படைத்த கிராமமாக ஓகிமி இருக்கிறது இதற்குக் காரணம் இங்கு வாழ்ந்தவர்கள் எல்லோரும் நீண்ட ஆயுளுக்கான வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இங்கே பெரும்பாலான மக்கள் நூறு வயதினை தாண்டி வாழ்கின்றனர். இது அவர்கள் பாடும் பாட்டு தான் அவர்களின் கள்ளங்கபடமற்ற மனநிலையினை காட்டுகிறது. 

ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் வேண்டுமா?

குறைவாய் சாப்பிடுங்கள் நன்றாய் ருசித்து !

முன் தூங்கி முன் எழுங்கள்.

எழுந்தவுடன் செல்லுங்கள் காலார நடக்க.

அன்றாடம் ஓட்டுகிறோம் வாழ்க்கையை நாங்கள் அலட்டிக்கொள்ளாமல் .

வாழ்க்கை பயணத்தைத் தொடர்கிறோம் குதுகூலத்துடனே.

நண்பர்களுடன் ஆடி பாடுகிறோம் பிணக்கின்றி.

வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ 

அனைத்தையும் அனுபவிக்கிறோம் ஆனந்தமாய்!

கவலைப்படுவதில்லை நாங்கள் எங்களின் 

விரலின் மூப்பைப் பற்றி!

நீங்களும் உங்கள் விரல்களை 

அசைத்துக்கொண்டிருந்தால் அலுங்காமல் 

குலுங்காமல் ஓடி வரும் உங்களை நோக்கி 

அந்த நூறு வயது!!...


லோகோ மற்றும் மோரிட்டோ சிகிச்சை முறை எப்படி ஒரு மனிதன் தனக்கான இருத்தலைத் தெரிந்துகொள்கிறானோ அப்போதிலிருந்து அவன் அவனுக்கான வாழ்க்கையினை வாழ ஆரம்பித்துவிடுகிறான் என்கிறது.

நாம் ஏன் வாழ்கிறோம் என்ற இலக்கினை தெரிந்து கொள்வதும் முக்கியம் அதே சமயம் எவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் எவ்வாறு திளைத்திருப்பது என்ற ரகசியத்தினையும் உணர்ந்துகொண்டால் வாழ்வே சிறப்பாகும் என்கிறார்கள்.

உலகில் பல்வேறு பகுதிகளில் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்தவர்கள் இருக்கின்றனர் ஆனால் ஜப்பான் மட்டும் தான் அதிகம் மக்கள் நூறு வயதினை தாண்டியவர்களாக வாழ்கின்றனர். அதற்கான ரகசியத்தினை இந்த புத்தகம் சொல்கிறது.

வாசிக்கும் நமக்கு வேண்டிய உத்வேகமும் மற்றும் ஊக்கமும் கொடுக்கக் கூடிய நூலாக இருக்கிறது இந்த நூல்.  நம்முடைய தனிப்பட்ட இக்கிகயயை கண்டுபிடிக்கத் தேவையான வழிகளை இந்த புத்தகம் வழங்குகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் அவரச போக்கைக் கைவிட்டுவிட்டு நமக்கான நோக்கத்தினை கண்டறிந்து அதற்கான எல்லா வகையான வழிகளையும் கண்டடைந்து தமது வாழ்க்கையினை சிறப்பாக வாழ இந்த நூல் ஒரு அற்புதமான வழிகாட்டியாக இருக்கிறது.

இந்த நூலின் உதவியோடு நாம் கண்டடைந்த இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையினை அர்த்தமுள்ளதாகவும் ஆனந்தமாகவும் வாழ்வோம்.


அன்புடன்

தேவேந்திரன் ராமையன் 

03 டிசம்பர் 2022



    


             




ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரை விலக்கும் ஓர் அருமையான நூல்!

எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரை விலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும்.
இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.

No comments:

Post a Comment