Saturday 17 December 2022

வாசகர்கள் விமர்சகர்கள் - ஆசிரியர் : வல்லிக்கண்ணன்

 வாசகர்கள் விமர்சகர்கள் 

ஆசிரியர் : வல்லிக்கண்ணன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 99

பக்கங்கள் 131


இந்த புத்தகத்தின் ஆசிரியர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.  இவர் காலகட்டத்தில் வாசகர்கள் மனநிலை எப்படி இருந்தது அதே சமயம் அவர்களுக்கான எழுத்துக்களை பெரும்பாலான பத்திரிக்கைகள் கொடுத்ததா இல்லையா என்றும் அதே சமயம் விமரிசகர்கள் எப்படி தங்களது பார்வையினை கொண்டிருந்தார்கள் என்பதையும் மிகத் தெளிவாகவும் பல்வேறு விதமான விவரங்களுடன் அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 

இந்த புத்தகம் 1987ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அந்த காலகட்டத்தில் எவ்வாறு வாசர்கள் மற்றும் விமர்சகர்கள் இருந்தார்கள் என்பதையும் அவற்றில் என்னமாதிரியான குறைபாடுகள் மற்றும் நன்மைகள் இருந்தன என்பதையும் பற்றி தனது தரப்பு நிலையினை மிகவும் விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர் வல்லிக்கண்ணன்.  இவர் பெரும்பாலாக 1930 லிருந்து 1970 வரையினால தனது கண்ணோட்டத்தினை மிகவும் பல்வேறு விதமான குறிப்புகளுடன் தனது  ஆதங்கத்தையும் அதே சமயம் தனது தரப்பு நியாயத்தினையும் இந்த நூலின் வழியே பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலினை வாசித்த போது, இவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் எல்லாக்காலகட்டத்திலும் பொருந்துவதாகவே இருக்கிறது.

ஆரம்பக்காலத்தில் பத்திரிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதிலிருந்து அவைகள் வாசகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்த்தார்கள் என்பதையும், அதே சமயம் வாசகர்கள் எப்படிப் பட்ட பத்திரிக்கைகளை வசிக்கின்றனர் என்பதும் அவர் சொல்லும் விதம் அருமையாகவே இருக்கிறது.

1930  மற்றும் 1940 களில் வெளி வந்த பல்வேறு சிறுபத்திரிக்கைகள் அவற்றில் என்னவெல்லாம் இருந்தது, மற்றும்  எவ்வாறு அந்த பத்திரிக்கைகள் தங்களின் இருப்பை காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்தது என்பது அதாவது சினிமா செய்திகள்,நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசு செய்திகள் எனப் புறம் மற்றொரு புறம் பிளாக் மெயில் செய்யும் விதமான செய்திகள் என மக்களை ஒரு விதமான போதைக்குள் தள்ளி தங்கள் பத்திரிகைகளை வாசிக்க வைத்தனர் என்கிறார். இதுபோன்ற பத்திரிகைகளுக்கு வாசகர்கள் நீண்ட வரிசையில் நின்று பத்திரிகை வாங்கி சென்றார்கள் எனவும் மேலும் பிரதி கிடைக்காவிட்டால் வடைக்கு எடுத்துப் படிக்கும் பழக்கமும் இருந்தது என்கிறார்.

அதே நேரத்தில் தொடர்கதைகள் வெளிவரத் தொடங்கியது, அதன் வழியாகவே பெரும்பாலான வாசகர்கள் தங்கள் வசம் வைத்திருந்ததாக பல்வேறு பத்திரிகைகள் இருந்தது. ஆரம்பத்தில் அ.மாதவையா, மாயூரம் வேதநாயகப்பிள்ளை, வத்தலக்குண்டு ராஜமய்யர் என இவர்கள் எழுதிய தொடர்கதைகள் பிரபலமானது. இவற்றைத் தொடர்ந்து கல்கி அவர்களின் தொடர்கதை அதிகளவில் வெற்றிகண்டது. கல்கி ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதிவந்தார் பிறகு விகடனில் இருந்து பிரிந்து வந்து கல்கி என்ற என்ற பத்திரிக்கையினை ஆரம்பித்தார் அவற்றில் தந்து தொடர்கதையைத் தொடர்ந்தார் அதுவும் சரித்திர நாவல், இது பெரும் வெற்றியினை கண்டது.

மனோரஞ்சிதம் என்ற ஒரு பத்திரிக்கை வடுவூர் கே.துரைசாமி அவர்களின் நாவல்களைத் தொடர்கதையாக வெளியிட்டது மற்றும் வை.மு.கோதை  அவர்களின் கைதிகளை ஜகன்மோகினி என்ற மாதப் பத்திரிக்கை வெளியிட்டது இதன் விளைவாக ஏ.கே. செட்டியார் ஆரம்பித்தது குமாரி மலர் என்ற மாதப்பத்திரிக்கை இதன் மூலமாகத் தனது பயண கட்டுரைகளை வெளியிட்டார் செட்டியார்.

இதைப்போலவே பல்வேறு தினசரி பத்திரிக்கைகள் வெளிவந்தது, அவற்றிலும் கூட சினிமா செய்திகள், வதந்திகள், மருத்துவக்குறிப்புகள்,ஜோதிடம் என வாசகர்களைக் கவரும் வகையில் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது என்கிறார்.

அதேபோல, பெரியார், அண்ணா போன்றவர்களின் வரவும் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் வாசகர்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது, அதன் விளைவாக பெரும்பாலும் வாசகர்கள் இவர்களின் எழுத்துக்களை விரும்பி படித்தனர். 

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பத்திரிக்கைகள் வணிக நோக்குடன் இயங்கிவந்தது என்றும் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வாசகர்களுக்காக என இயங்கிவந்தது  என்கிறார். பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களைக் கவரும் விதமாக பல்வேறு பத்திரிக்கைகள் வெளிவந்துகொண்டேதான் இருந்தது.

அதேகாலகட்டத்தில் விமர்சகர்கள் எவ்வாறு இருந்தனர் என்றும் தங்களது  கருத்துக்களை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.  பல்வேறுவிதமான விமர்சகர்கள், ஒரு சாரார் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களின் நூல்களை ஒருவிதமாகவும் அதே சமயம் பிடிக்காத ஆசிரியர்களின் நூல்களை வேறுவிதமாகவும் விமர்சனம் செய்தார்கள் என்கிறார்.          

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

13 டிசம்பர் 2022               

No comments:

Post a Comment