Thursday 22 December 2022

மெஸ்ஸி - கால்பந்தின் தேவதூதன் - ஆசிரியர் : முகில்

மெஸ்ஸி - கால்பந்தின் தேவதூதன் 

ஆசிரியர் : முகில் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 26 


நாம் பெரும்பாலும் கிரிக்கெட் பின்னாலே செல்வதால், கால்பந்தின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் நான் வசிக்கும் துபாயில் கால்பந்து தான் பிரதான விளையாட்டு. பெரும்பாலும் சிறுவர்கள் மெஸ்ஸியின் டீசர்ட் அணிவது வழக்கம்.  ஒரு சில விளையாட்டினை இங்கே இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனாலும் மொழி தெரியாமல் இருந்தாலும் கால்பந்தாட்டத்தின் ஒரு பெருமை என்றே தான் சொல்லவேண்டியது அந்த விளையாட்டினை பார்த்து ரசிக்கும் அதனை ராசிகளையும் பந்து செல்லும் திசையில் ஓடவைப்பது தான். 

லியோனெல் மெஸ்ஸிஅர்ஜெண்டினாவின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிய வீரன். கடந்த ஒரு வாரக் காலமாக மெஸ்ஸியின் படமும் செய்தியும் இல்லாத நாளேடுகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் நாடே அவனைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கிறது, ஒரே நீலக்கடலின் (அர்ஜெண்டினாவின் கால்பந்து சீருடை அணிந்த அந்நாட்டு மக்கள் கூட்டத்தின்)  நடுவே சட்டை அணியாத மெஸ்ஸி தந்து கையில் தங்கப் பதக்கத்துடன் நீந்திச் செல்வது,  அவனும் தங்கமாய் மிளிர்ந்து செல்வது போல தோற்றமளிக்கிறது. 

அப்படிப்பட்ட மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் தான் இது. வெறும் 26 பக்கங்களே கொண்ட இந்த புத்தகம் மெஸ்ஸியின் பிறப்பு முதல் கத்தாரில் நடக்கும் 2022 பிபா இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் வரையிலான நிகழ்வுகளை மிக அருமையாகவும் தெளிவாகவும் கொண்டுள்ளது.

சிறுவயதிலே கால்பந்தின் மீது நாட்டம் கொண்ட மெஸ்ஸி தனது நான்காவது வயதிலே ஆட ஆரம்பித்தான்.  வளர வளர அவனின் ஆட்டத்தின் திறமையும் மெருகேறிக்கொண்டே இருந்தது. அவன் சேர்ந்த அணைத்து அணியிலும் அவன் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்தான்  என்று தான் சொல்லவேண்டும்.

இயற்கை அவனின் உயரத்தின் மீது ஒரு தடை போட்டு அவனைக் கால்பந்தின் ஆசையினை தடுக்க முயன்றது ஆனால் அவற்றையும் தாண்டி தனது லட்சியம் ஒன்றே அது கால்பந்து தான் என்ற வேட்கையுடன் இருந்தான். அதற்கான தருணம் வந்து சேர்ந்தது. அவனின் திறமையினை அறிந்துகொண்ட பார்ச்சிலோனாமெஸ்ஸியை தங்கள் நாட்டில்  தங்கி இங்கிருக்கும் கிளப் அணிகளில் விளையாட முன்வந்தால் நாங்கள் அவனின் மருத்துவசெல்வுக்கு உதவிபுரிவதாகச் சொல்லி அவ்வாறே நடந்தது.

பிறகு ஸ்பெயினின் குடியுரிமை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளைத் தாண்டி இடை இடையே ஏற்பட்ட விபத்துகள் அதனால் ஏற்பட்ட சோர்வுகள் என எல்லாவற்றையும் கடந்து  பார்சிலோனாவின் பல்வேறு போட்டிகளில் விளையாடி தனது தடத்தைப் பதித்தான் மெஸ்ஸி. அதே வேகத்தில் பார்சிலோனாவின் அணியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையினை 2004 ஆம் ஆண்டில் பதிவுசெய்தான். பார்சிலோனாவின் அணியில் 2014 வரை விளையாடும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் குடியுரிமையும் கிடைத்தது. ஆனால் அப்போது மெஸ்ஸி மக்கள் மத்தியில் கால்பந்தின் தேவதூதன் என்று வர்ணிக்கப்பட்டான். அதே நேரத்தில் மக்களிடம் ஒரு கேள்வியும் அதற்கான விடை மெஸ்ஸியிடமே இருந்தது. தேசிய அணி என்று வந்தால் அவன் எந்த அணிக்காக விளையாடுவான் என்று. மக்களின் கேள்விக்கு, நான் அர்ஜெண்டினாவின் மகன், எனது தேசம் அதுதான் என்றும் அதே நேரத்தில் பார்சிலோனாவின் அணிகளில் விளையாடுவதை நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னான்.

மெஸ்ஸி புரிந்த சாதனைகள்  ஒன்றல்ல இரண்டல்ல அது ஒரு நீண்ட பட்டியல். அந்த சாதனை பட்டியலில் பல்வேறு கோப்பைகள், தங்க காலணிஇளம் வீரர் சாதனை,அதிக கோள்கள் சாதனை என்று நீளும் இந்த பட்டியலில் 2022 ஆண்டு கத்தாரில் நடந்த  உலகக்கோப்பை போட்டியில், உலகக்கோப்பை வென்று  தனது தேசத்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதும்  ஒன்று ஆகும்.               


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 டிசம்பர் 2022

No comments:

Post a Comment