Saturday 17 December 2022

ஷேக்ஸ்பியர் - வாழ்க்கை வரலாறு ஆசிரியர் என். சொக்கன்

 

ஷேக்ஸ்பியர் - வாழ்க்கை வரலாறு 

ஆசிரியர் என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு

விலை : ரூபாய்  50

பக்கங்கள் 109


என். சொக்கன் அவர்களின் புத்தகங்கள் வாசிக்க வாசிக்கத் தொய்வே இல்லாத அளவிற்கு ஏராளமான விவரங்களைச் சொல்லிச்செல்வார். அந்த வரிசையில் இந்த புத்தகம் ஒன்றாகவே இருக்கிறது. 

கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரை பற்றி விபரங்கள் சேகரிக்க எத்தனை மெனக்கெடல் தேவைப்படும். அத்தனையும் சாத்தியப்படுத்தி ஒரு அருமையான வரலாற்று புத்தகமாக இந்த "ஷேக்ஸ்பியர் - வாழ்க்கை வரலாற்றினை "  நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

தனது படிப்பை முழுவதுமாக முடிக்காத      ஷேக்ஸ்பியர் பிற்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் அவரை படிக்காமல் இருப்பதில்லை என்ற ஒரு வரலாறு படைத்தது சென்றிருக்கிறார் என்றால் அது அவரைமட்டுமே அதுவும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இவரைப் பற்றிய வாசிப்பு.  

காலங்களால் அழிக்க முடியாத காவியங்களை இந்த உலகிற்குக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரின் நாடகங்களை பெரும்பாலும் மக்கள் இன்றளவும் அரங்கேற்றி கொண்டே  இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அதனால் தான் என்னவோ இவரை எல்லாக் காலகட்டங்களுக்கான மனிதர் என்று அழைக்கின்றனர்.

1564 ல் ஸ்டார்ட்போர்ட் என்ற ஊரில் பிறந்த இவர் தனது இளமைக் காலத்தில் பள்ளிப்படிப்பு கூட தொடரமுடியாத நிலையில் தனது குடும்ப வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆனால் அவரிடம் எப்போது இலக்கியத்தின் மீது ஒரு நாட்டம் இருந்தது. அப்போதெல்லாம் அவர் பகுதிக்கு வரும் நாடகங்களைத் தவறாமல் பார்ப்பதுமட்டுமில்லாமல் அவற்றைக் கூர்ந்து கவனித்துவந்தார். இவரின் பிறந்த தேதி மற்றும் பெரும்பாலான குறிப்புகள் யுகத்தின் அடிப்படையில் தான் நாம் தெரிந்துகொள்கிறோம் என்பது ஒருபக்க இருக்க மற்றொரு பக்கம் பெரும்பாலான கருத்துக்கள் வெளிவருகிறது. என்னவாக இருந்தாலும் அவர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு கலை மேதை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இவரின் நாடகங்களும் இலக்கியங்களும் மேடையேறும் என்பது தவிர்க்கமுடியாத ஒரு உண்மை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இவரின் கற்பனையின் ஊற்றில் வந்த நாடகங்கள் 37.  மேலும் இவர் நடத்திய "கிங்ஸ் மென்" என்ற நாடகக் குழு பிரபலமானது. இவர்களின் குழு ஏறாத மேடைகள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.    


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

06 டிசம்பர் 2022 

   

 

No comments:

Post a Comment