Saturday 11 September 2021

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் 

சிவபெருமான் திருவிளையாடல் கதைகள்  

ஆசிரியர் : ரா. சீனிவாசன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 208


 
திருவிளையாடல் என்ற இந்த புராணம் மொத்தம் 64 படலமாக பிரித்து ஒரு பெரிய கதைகளை சொல்கிறது. 1. இந்திரன் பழி தீர்த்த படலம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் 3. திருநகரம் கண்ட படலம் 5. திருமணப்படலம் உலகம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம். 9. எழுகடல் அழைத்த படலம் 10. மலையத்துவசனை அழைத்த படலம் 11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் 13. கடல் சுவற வேல் விட்ட படலம். 14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் 15. மேருவைச் செண்டால் அடித்த படலம் 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் 17. மாணிக்கம் விற்ற படலம் 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் 19. நான் மாடக் கூடல் ஆன படலம் 20. எல்லாம் வல்ல சித்தர் ஆன படலம் 21. கல்லானைக்குக் கரும்பு அருத்திய படலம் 22. யானை எய்த படலம் 23. விருத்த குமார பாலரான படலம் 24. மாறி யாடின படலம் 25. பழியஞ்சின படலம் 26. மாபாதகம் தீர்த்த படலம் 27. அங்கம் வெட்டின படலம் 28. நாகம் எய்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 30. மெய்க் காட்டிட்ட படலம் 31 உலவாக்கிழி அருளிய படலம் 32. வளையல் விற்ற படலம் 33. அட்டமாசித்தி உபதேசித்த படலம் 34. விடை இலச்சினை இட்ட படலம் 35. தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம் 36. இரசவாதம் செய்த படலம் 37. சோழனை மடுவில் வீட்டிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம் 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம் 41. விறகு விற்ற படலம் 42. திருமுகங் கொடுத்த படலம் 43. பலகையிட்ட படலம் 44. இசைவாது வென்ற படலம் 45. பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தபடலம் 46. பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம் 49. திருவாலவாயான படலம் 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம் 51. சங்கப் பலகை தந்த படலம் 52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் 53. கீரனைக் கரை ஏற்றிய படலம் 54. கீரனுக்கு உபதேசித்த படலம் 55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 57. வலை வீசின படலம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 59. நரி பரியாக்கிய படலம் 60 பரி நரியாகிய படலம் 61. மண் சுமந்த படலம் 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம் 63. சமணரைக் கழுவேற்றிய படலம் 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்.

இந்த 64 படலங்களும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான கருத்தினை சிவன் காட்சியளித்து நன்னெறியினை சொல்கிற வழியாகக் கதைகள் அமைந்திருக்கின்றது.  மொத்தம் 64 படலத்தினையும் இங்கே பகிர்ந்தால் அது இன்னொரு புராணமாகவே இருக்கும் அதனால் ஒரு சில படங்களை மற்றும் இங்கே பதிவிடுகிறேன்.

இந்திரன், தேவர்களிடம் அவமதிப்பாக நடந்துகொண்டதும், இந்திரனுக்குத் தண்டனை கிடைக்கிறது கூடவே அணிவது யானையும் மண்ணுலகில் சென்று காட்டு யானையாக மாறிவாழவேண்டும்  என்றும் அவ்வாறானா வேளையில் யானை மூன்று கோயில்களை ஏற்படுத்தியிருந்தது அந்த கோயில்கள் பக்தர்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

பாண்டிய மன்னர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமான வகையில் ஈசனின் திருவிளையாடலில் பங்கெடுத்துள்ளார்கள் என்று சொல்கிறது கதை. காஞ்சன மாலை - மங்கையர்க்கரசியாக்கத் தடாதகைப் பிராட்டிக்குச் செய்யும் உபாயம்.    பல்வேறு தலங்களில் பல்வேறு பெயர்களுடன் வீற்றிருக்கும் சிவபெருமான் அங்கெங்கும் ஒவ்வொரு திருவிளையாடல் செய்திருக்கிறார். 

மங்கையர்கரசியாகியா பாண்டியர் மகள் அன்னதானம் செய்ய அதற்காக ஏற்பாடுகள் செய்கிறாள் ஆனால் இறைவன் அதற்கு உம்மால் முடியாது என்று சொல்கிறார் அதைக் கேட்காத மங்கையர்க்கரசி என்னால் முடியும் என்கிறாள் அதனைக் கேட்ட சிவபெருமான் சோதிப்பதற்காகக் குண்டோதரனுக்கு அன்னமிடச் சொல்கிறார். தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இல்லாமல் செய்கிறார் இறுதியில் தனது சடையிலிருந்த கங்கை  இறங்கி வந்ததால் இதற்குச் சிவகங்கை எனப் பெயரானதும் ஒரு கதை அதுபோலவே இந்த அன்னத்திடம் படலத்தில் இருக்கிறது.  சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தர ஏழு கடலையும் மதுரைக்குக் கொண்டுவந்து காஞ்சனமாக்கு இனபகடலில் நீந்தச்செய்கிறார். முருகனை உக்கிர குமாரனாக அவதரிக்கவைத்து ஆட்சி செய்யத் தேவையான அணைத்து பயிற்சிகளையும் கற்றுக்கொடுத்து அந்நாட்டின் ஆட்சியினை நடத்தச் செய்கிறார் சிவபெருமான். 

சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த தமிழ்நாட்டில் மழை இல்லாமல் வறண்டுபோனது இதற்குக் காரணமான தண்டித்து இறுதியில் மழை பொழிந்தது அதுமுதல் மாதம் மும்மாரி பெய்து நாடு வளம் பெற்றது.

வீர பாண்டியனின் பல்வேறு புதல்வர்களில் எவருமே சரியாக வளர்க்கப்படாத நிலையில் இளைய மகன் மட்டுமே தந்தையின் கடமையினை செய்தான் அதனால் அவனை மன்னராக முடி சூட நினைத்தனர். ஆனால் அந்த அரணையில் அறைகளிலிருந்த செல்வங்கள் எல்லாம் இல்லாமல் போனது அந்த நேரத்தில் இறைவன் தானாக வந்து மாணிக்கம் வியாபாரி போல வந்து உதவினார் 

சித்தரை அவமதித்த பாண்டியனுக்குப் பாடம் புகட்டி கல்லானைக்குக் கரும்பு கொடுத்தது மற்றும் விக்கிரமன் ஆட்சியில் வேதியன் என்றவனுக்குக் குழந்தை இல்லாமல் இருந்தது இறைவன் அருளாலே கவுரி என்ற ஒரு மகள் பிறந்தால், அவளுக்குத் திருமணம் முடிந்து சென்ற வீட்டில் அவளுக்கு ஏற்பட்ட அநீதிகளை அகற்றிய  எனவும் இதுபோல பல்வேறு வகையில் சிவனின் திருவிளையாடல் பாண்டிய மன்னர்கள் சார்ந்தே இருந்தது.           
    

தேவதாரு என்னும் வனத்திலிருந்த ரிஷிகளின் பத்தினியர்களுக்கு பாடம் புகட்ட அவர்களைத் தண்டிக்கவும் மேலும் அவர்களுக்கு புத்துயிர் கொடுக்கவேண்டி வளையற்காரனாகி அவர்களின் பாவம் போக்கினார்.

காடு வெட்டிய சோழனோடு பாண்டிய நாட்டின் அரசின் நட்புறவில் வளர இருந்த ஒரு திருமண நிகழ்வினை வஞ்சகத்துடன் தம்பி முந்திக்கொண்டதனால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் வளர்ந்த பெரிய பகையின் பாடம் புகட்டத் தண்ணீர் வற்றியது அப்போது பாண்டியனுக்கு உதவி செய்ய தண்ணீர்ப்பந்தல் அமைத்துக் கொடுத்தார்.

தனது தங்கை மகனைத் தத்தெடுத்த வாணிகன் தேசாந்திரம்  போனபிறகு அவரின் தங்கைக்கு ஏற்பட்ட அநீதிக்கு  அந்த குழந்தையின் தாய் மாமனாக வந்து சாட்சி சொல்லி நீதி கிடைக்க செய்தர்.

பாணபத்திரனுக்கு உதவ விறகு வெட்டியாக வந்து பாடல் பாடி ஏமநாதன் என்ற இசைக்கலைஞனின் மனச்செருக்கினை போக்கி பாணபத்திரர் தான் சிறந்தவர் என்று சொன்னதும் ஒரு விளையாடலே. இதன் பிறகு பாணபத்திரர் அரசவையில் பாடக்கூடாது என்று சொல்லி இறைவனுக்கே பட வேண்டும் என்று அரசன் கட்டளையிடுகிறார் அதன்படி இறைவனுக்கே பாடி காலம் கழிக்கிறார் அப்படி இருக்கும்போது உணவுக்கு என்ன செய்வது எல்லாம் தீர்ந்த போது மலைநாட்டுக்குப் போகச் சொல்லி உதவிசெய்தார் இறைவன்.

ஒரு வேளாளனின் மகன்கள் தேவ குருவாகிய பிரகஸ்பதிக்கு பெரும் தொல்லைகள் கொடுத்ததால் கிடைத்த சாபத்தால் பன்றிக் குட்டிகளைப் பிறக்க வேண்டும் என்றார். பிறகு இதிலிருந்து விடுதலை பெறச் சிவபெருமான் தாயாக வந்து பால் கொடுத்தால் மனிதர்களாக மாறுவார்கள் என்றதும் அதுபோல செய்து அவர்களை அரசவையில் அமைச்சர்களாக அமர்த்தச்சொன்னார் என்பது ஒரு விளையாடல்.

பாண்டிய மன்னனின் சந்தேகத்திற்குக் கவிதை பாட வேண்டிய நிலையில் தருமி என்றவனுக்குச் சிவபெருமான் கொடுத்த பாடலில் பிழை இருப்பதாகச் சொன்ன நக்கீரனை நெற்றிக்கண்ணால் தண்டித்ததும் பிறகு நக்கீரனை மன்னித்தார் என்கிறது இந்த படலம்.

மாணிக்கவாசகரைக் காப்பாற்ற, நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் கொடுத்ததும் அல்லாமல் மறுநாளே பரிகளை எல்லாம் நரிகளாக மாற்றியதும் அதற்காக மாணிக்க வாசகரைத் தண்டித்த மன்னனின் நிலையினை கண்டு வகையினை வெள்ளப்பெருக்கெடுக்கச் செய்து கரை உடைந்தது அதற்காகக் கரையினை மூட வீட்டிற்கு ஒரு ஆள் என்ற கூற்றுக்குப் பாட்டி வந்திக்காக மண்சுமந்ததும் அதற்காக பிட்டு கூலியாக வாங்கியது என ஒரு படலம்.

பாண்டிய மன்னன் சமண மதத்தினை பின்பற்றியதும் அதற்காக அவரை சைவ மதத்திற்கு மாற்ற வேண்டி நிகழ்த்திய திருவிளையாடல்கள் சமணர்களை அழித்ததும், பாண்டியனுக்குத் தீராத வலியினை கொடுத்து அதற்காகச் சிவனடியாரான திருஞான சம்பந்தரை வரவழைத்து சில நிகழ்வுகளை நடத்தி யார் சைவத்தை நிலை நாட்டியது என ஒரு திருவிளையாடல்.

என இந்த திருவிளையாடல் புராணத்தின் வழியே நாம் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை எளிய முறையில் எளிய மொழிநடையில் சிறு சிறு கதைகளாக  அறிந்துகொள்ள முடிகிறது.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன் 
11 செப்டெம்பர் 2021 

No comments:

Post a Comment