Saturday 25 September 2021

மகளிர் மட்டும் - வாசிப்பனுபவம்

மகளிர் மட்டும் 

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை   ரூபாய் 199

பக்கங்கள் 192 


"மகளிர் மட்டும்" என்ற இந்த புத்தகம் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்து, இந்த தொடர் அனைத்தும் ஒரு சேர ஒரு புத்தகமாக முதலில் "24 கேரட்" என்று தலைப்பில் வந்தது பிறகு இந்த புத்தகம் "மகளிர் மட்டும்" என்ற புதிய தலைப்பில் வெளிவந்தது. 

உலக அளவில் சாதனைகள் நிகழ்த்திய 24 பெண் மணிகளைப் பற்றியது என்பதால் 24 கேரட் பெயர் வைத்திருக்கலாம் ஆனால் மக்களிடம் 24 கேரட் என்றால் தங்கம் தானே நினைவுக்கு வரும் அதனால் தான் என்னமோ "மகளை மட்டும்" என்ற சிறப்பான தலைப்பினை கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்று நினைக்கிறேன்.

அகிலத்தின் முதல் பெண் ஏவாள் முதல் அமெரிக்காவின்  முதல் பெண்மணி ஹிலாரி,  உலகின் உச்சம் தோட்ட அழகிகள் மர்லின் மன்ரோ, ஐஸ்வர்யா ராய், உலக இலக்கியத்தின் இடத்திலிருந்து என்றும் விடை பெறாத தாஸ்தாவெஸ்கியின் துணைவியான அன்னா, தங்கள் எழுத்து மூலம் புரட்சியும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலையும் வேண்டும் என்று எழுத்துக்கள் மூலம் போராடிய அருந்ததி ராய், நதீன் கோர்டிமர்,இசபெல் அலண்டே, சரோஜினி நாயுடு, அரசியலில் தங்களது உச்சத்தினை அடைந்த இரும்புப்பெண் இந்திரா, பேனசிர் புட்டோ, சோனியா மற்றும் விளையாட்டில் வீரம் பதித்த மார்ட்டினா,ஆன்மிகத்தின் ஆன்மாவினை அடைந்த ஆண்டாள், அமிர்தானதாயிஸ்ரீ அன்னை, இளவரசி டயானா, மேலும்     இவர்களில் ஒரு படி மேலாக விண்ணைத்தொட்ட கல்பனா சாவ்லா என பல்வேறு வெற்றிப்படிகளை தங்கள் வசமாக்கிக்கொண்ட பெண்மணிகளைப் பற்றிய அறியத் தகவல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த புத்தகம் கட்டாயம் ஒவ்வொருவரும் வாசித்து அறிந்து கொள்ளவேண்டிய புத்தகமாகும்.

பா. ராகவன் அவர்கள் எழுத்து ஒரு தனித்துவம் வாய்ந்தது அதுபோலவே இந்த பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கும் மிக நுட்பமாகத் தொகுத்து எல்லா விவரங்களும் கொண்டதாகக் கொடுத்திருப்பது வாசிக்கும் நமக்கு ஒரு முழு வரலாறும் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஏவாள் - அகிலத்தின் முதல் பெண்மணி என்றும் அவரே முதலில் சிந்தித்து நன்மை எது தீமை எது என்று பகுத்தாய்ந்து பார்க்கத் தொடங்கியவர்,  அதே சமயத்தில் தான் செய்யாத அந்த சிந்தனையின் விளைவாகத் துன்பங்களையும் அனுபவிக்கவேண்டியிருந்தது. கடவுளால் படைக்கப்பட்ட ஏவாள் மானுட குளத்தின் அறிவுக்கண்ணைத் திறந்துவைத்த மாபெரும் பெண் ஆவாள் என்கிறார். 

ஆண்டாள் - பெருமாளுக்காகப் பாடல்கள் பாடி தனது காதலினை வெளிப்படுத்தி, தனது ஒரே நோக்கமான பெருமாளையே அடைந்து இன்று ஆண்டாள் கடவுளாக இருக்கிறார்.

மர்லின் மன்ரோ -  நார்மா ஜீன் என்ற இயற்பெயருடன் மனநலம் பாதிக்கப்பட்ட தாயிக்கு மகளாகப் பிறந்த இவர் தந்தை பெயர் தெரியாமலே அனாதை ஆசிரமங்களிலும் தாயின் நண்பருடனும் வாழ்ந்த தனது இளமைக் காலத்தினை கடத்திய இவர் தனது அழகாலும் திறமையாலும் உலகின் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன்னகத்தே கட்டி போட்ட கனவுக்கன்னியாகத் திகழ்ந்தார் என்றால் அது வியப்பானதாக இருக்கிறது. ஆம் அனைத்தும்  உண்மையே.

அன்னா தாஸ்தயேவ்ஸ்கி -   உலக புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கியவாதியுமான   தாஸ்தயேவ்ஸ்கியின் கடினமான நேரத்தில் அவருக்கு உதவியாளராக வந்து தனது கடமைகளைச் சிறப்பாகச் செய்து அவரை சரிவிலும் சூழ்ச்சியிலும் இருந்து மீட்டெடுத்து அவருக்கே வாழ்க்கைத் துணையாக வந்து அவரின் புகழினை உலகறிய செய்தவர் தான் "அன்னா".

இந்திரா காந்தி - இந்தியாவின் இரும்பு பெண்மணி,    இந்தியாவின் பெரிய குடும்பத்தில் பிறந்து அரசியல் தெரியாமல் அயல் நாட்டில் படித்து பிறகு அரசியல் பிரவேசம் செய்து தனது ஆளுமையினை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் தீர்க்கமான முடிவெடுப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று ஒரு தனிப் பெயரினை நிலைநாட்டிச் சென்றார் என்றால் அது இன்றளவும் நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது.

நதீன் கோர்டிமர் யூத இனத்தில் பிறந்து, தனது இளம் வயது முதல் ஆப்பிரிக்கர்களை அவர்கள் வாழும்  அடிமை வாழ்க்கையில் இருந்து  மீட்டெடுக்கத் தனது எழுத்தின் மூலம் ஒரு மாபெரும் சமூக சீர்திருத்தத்தினை கொண்டுவந்தார் என்றால் அதுவும் தனது சிறிய வயது முதலே அவரின் எழுத்துக்கள் எல்லாம் சமுதாய சிந்தனைகளை கொண்டதாகவே இருந்திருக்கிறது. புக்கர் பரிசு, ஸ்மித் பரிசு, ஜேம்ஸ் டாயிட் பரிசு என இலக்கியத்தில் நோபல் பரிசு வரை எல்லா பரிசுகளும் பெற்ற இவர் எல்லா நேரங்களிலும் ஒரே சிந்தனை அது அடிமைப்பட்ட மக்களின் விடுதலை தான். 

மார்ட்டினா நவ்ரத்திலோவா - உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து தனது தொடர் முயற்சியாலும் கடின உழைப்பாலும் உலகின் உச்சபட்ச  டென்னிஸ் நட்சத்திரமாக  ஜொலித்து  முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்தவர்.

ஐஸ்வர்யா ராய் -  தனது அழகாலும், அறிவாலும், திறமையாலும் , தன்னிடம் இருந்த மற்றும் கற்றுத் தெரிந்து கொண்ட புத்திசாலித்தனம் தன்னை ஓர் உலக அழகியாக மாற்றிக்கொண்டதும் அதுமட்டுமல்லாமல் அந்த நிலையிலிருந்து கீழே இறங்காமல் இன்றளவும் தனக்கென ஒரு தனி இடத்தினை தக்க வைத்துக்கொண்டிருக்கும் அழகான ஆச்சரிய  பெண் தான் இவர். 

கிளியோபாட்ரா - எகிப்து மன்னனின் எட்டாவது கிளியோபாட்ராவாக பிறந்து தனக்கு முன்னர் பிறந்த ஏழு கிளியோபாட்ராவை விட உலகில் இன்றளவும் நிலைத்துத் தான் ஓர் அழகி என்று எல்லோர் மனதிலும் நிற்கிறார் என்றால் அது அவரின் அழகுமட்டுமல்ல அவருடைய அறிவும் புத்திசாலித்தனமும் தான் என்பது மறுக்க முடியாத ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும். தன்னை விட்டுப் போன ஆட்சி அதிகாரத்தை தன்னோடு புத்திசாலித்தனத்தால் மீட்டெடுத்தவர்.

பேனசிர் புட்டோ -  பாகிஸ்தான் அரசியலிலிருந்து தன் தந்தையைக் கொலை செய்த துரோகிகளை அழிக்க வேண்டுமாம் என்ற ஆவேசத்து அரசியல் களத்தில் குதித்து இருமுறை ஆட்சியில் அமர்ந்தார் இருந்தாலும் அவரின் உறவினர்களும் உடன் இருந்த அமைச்சர்கள் என இவரின் பெயரைக் கலங்கப் படுத்தினார்கள். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியலில் ஒரு தனி இடம் பிடித்தவர் இந்த பெண்மணி.

இசபெல் அலண்டே -  லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த மிகவும்    புகழ் பெற்ற எழுத்தாளர்களில் இவரளவுக்கு கொண்டாடப்பட்டவர்கள் யாரும் இல்லை.       இவரும் தனது எழுத்து என்ற ஆயுதத்தைக் கொண்டு தனது தேசத்து  மக்கள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளார். பெரு நாட்டில் பிறந்து சிலி நாட்டில் குடியேறினார். ஒரு மனிதாபிமானமுள்ள எழுத்தாளராக இசபெல்  தனது தேச மக்களின் வளர்ச்சிக்காக வாழ்ந்த பெண்மணி ஆவார்.

ஹிலாரி கிளின்டன் - அமெரிக்காவின் அரசியலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்த இவர் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே ஆனால் இவரின் பல்வேறு பரிமாணங்களை அவரின் வாழ்வில் நடந்த வெவ்வேறான சுவாரஸ்யமான விவரங்களைத் தெரிந்து கொள்ளமுடிகிறது. 

சோனியா காந்தி  - இவர் பிறந்தது என்னவோ இத்தாலி ஆனால் இன்று இவர் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு பெண்மணி என்று தான் சொல்லவேண்டும். இவரின் மீது எத்தனையோ வார்த்தை தாக்குதல்கள் நடந்தது  ஆனால் எதற்கும் மனம் தளராமல் தனக்குக் கிடைத்த அரியாசனத்தினை மிகவும் நேர்த்தியாக ஒருவரிடம் ஒப்படைத்து இருந்து கட்சியினை மட்டும் காத்துக்கொண்டு வந்தவர். இந்திய அரசியலிலிருந்து இவரின் பெயர் நீக்காத இடத்தில் இவர் அமர்ந்து விட்டார்.

ஸ்ரீ அன்னை  - பாண்டிச்சேரி என்றாலே நினைவுக்கு வருவது இவரது ஆசரமும்  மற்றும்  அங்கே அமைந்திருக்கும் தியான மண்டபம் தான். அரவிந்தர் அவர்கள் வ.உ. யின்   பாரதியாரும் நானும் என்ற புத்தகத்தில் அரவிந்தரைப் பற்றிய நிறைய விவரம் படித்திருக்கிறேன். ஆனால் அவருடன் சேர்ந்து இந்த ஆசிரமத்தில் இன்று ஸ்ரீ அன்னை அவர்களின் பெயரும் புகழும் ஒரு பெரிய இடத்தில் இருக்கிறது என்பதையும் எவ்வாறு ஸ்ரீ அன்னை இங்கு வந்து சேர்ந்தார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

சாரதா தேவி  - இவர் தனது கணவர் இவரை சிறுவயதிலே திருமணம் செய்தார். ஆனால் அவர் முழு நேரமும் ஆன்மீகத்தின் மீதே ஈடுபடுகொண்டிருந்தார்.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் மீது கொண்டுள்ள ஆன்மிகத்தின் மீது மிகுதியான ஈடுபாடு கொண்டு அவருடன் சேர்ந்து ஆன்மிக வாழ்வினை நடந்தவர்.     எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தந்து குழந்தைகளாக அனைவரையும் பாவித்து  அவர்கள்  நலமோடு வாழவேண்டும் என்று தனது வாழ்நாளை வாழ்ந்தவர்.

மடோனா - இயற்கையாகவே தான் கொண்டிருந்த அழகும், இளமை வயதில் அவள் கொண்டிருந்த பட்டு ஞானமும் அவள் தன் மீது கொண்டிருந்த அலாதி நம்பிக்கையும், தாயில்லாமல் வாழ்வதும் மட்டுமல்லாமல்   தனது உடன் பிறந்தோர்களைக் கவனிக்க வேண்டிய ஒரு பொறுப்பிலிருந்த இவள் எதோ ஒரு நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவின் ஒரு சேரிப் பகுதியில் வந்து அங்கிருந்து தனக்கு வாய்ப்பு தேடி அதன் வழியே வாழிவின் உச்சத்தினை தொட்டவர். ஆம் ஒருகாலத்தில் இவரின் பாடல்களைக் கேட்காதே காதே இருந்திருக்காது என்று தான் சொல்லவேண்டும்.

ஜோன் ஆஃப் ஆர்க - பிரான்சில் இருக்கும் ஒரு எல்லையோர சிறிய கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஏழை பெற்றோருக்குப் பிறந்து, சிறுவயதிலே தியானமும் இறையருளும் கொண்டிருந்தார். அப்போது நடைபெற்ற போரில் பிரான்ஸ் தோற்றுக்கொண்டே இருந்தது அதற்கு இவளிடம் இறையருள் கொடுத்தது. இதன்படி இவள் நடக்கும் போரில் கலந்துகொள்ள வேண்டி பல்வேறு முறை முக்கியமானவர்களைச் சந்தித்தாள் ஆனால் யாரும் இவளின் உருவத்தினை கண்டு  யாருமே அவளை பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அவள் தயங்கவேயில்லை இவளின் தீராத வேட்கையினை பார்த்த அதிகாரிகள் இறுதியில் இவளை நம்ப ஆரம்பத்தினது, அதன்படி அவளும் போர்தொடுத்து இறுதியில் எதிரியின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டாள். தனது பதின்பருவத்தில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்து இன்றளவும் அந்நாட்டின் காவல் தேவதையாக இருக்கிறாள்.

டயானா - உலகெங்கிலும் இருக்கும் இளவரசியில் டயானா ஒரு தனிப் பெயர் பெற்றிருந்தார். இவரின் இரக்கக் குணம் அவளின் பல்வேறு தொண்டன் செயல்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம் அதுவும்  விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்காகவே இவர் பல்வேறு விதமான உதவிகள் செய்தார். இவர் கிசு கிசு விற்கு பெயர்போனவர் ஆனால் அவர் எதற்குக் கண்டுகொள்ளாமல் தனக்கென ஒரு பாதையினை வகுத்துக்கொண்டு அதன் படியே நடந்தார் ஆனால் சமுதாயத்தின் நெருக்கடியும் தொடர்ந்து வந்த வதந்திகளும் அவரின் இறுதி நாட்களை நிச்சயப்படுத்திவிட்டன.  

அயன்ராண்ட் - ரஷ்யாவின் ஒரு பெரிய செல்வந்தருக்குப் பெண் குழந்தையாகப் பிறந்தார். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியில் ஒரே இரவில் அனைத்தையும் இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது அவரின் குடும்பம். தனது சிறுவயதிலே நான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணுகிறேன் என்று அவளின் பெற்றோர்களிடம் சொன்னதும் அவர்கள் மறுப்பு தெரிவிக்காமல் ஆதரவு கொடுத்தனர். மிகவும் கடினப்பட்டு அமெரிக்காவிற்குச் சென்றார் அங்குச் சென்றதும் அவர் தனது எழுத்துக்களைத் தொடர ஆரம்பித்தார். திரைப்படம், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் சில நாடகங்கள் என எல்லாவற்றிலும் பங்குபெற்றார் ஆனால் அவர் உலகளவில் பெயர்பெற்றது அவரின் ஒரு நாவல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அருந்ததி ராய் - கேரளத்தில் பிறந்த இவர் தனது முதல் நாவலிலே உலகப் புகழ் பெற்றார் என்பது ஒரு பெரிய சாதனையே. ஆனால் இவர் எழுத்துக்களைவிடத் தனது தாய் மேற்கொண்ட சமூக சேவையின் மீதே அதிக நாட்டம் கொண்டிருந்தார் அதன் படியே அவர் பல்வேறு சமூக தொண்டுகளைச் செய்தார். உலகம் முழுவதும் இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. எத்தனை புகழுக்கு சொந்தக்காரரானாலும் அவர் இன்றளவும் தனது சிறுவயது கேரளா பெண்ணாகவே தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார்.

கல்பனா சாவ்லா - இந்தியாவில் பிறந்து இந்தியர்களின் கனவினை நினைவாக்கிய ஒரு அறியப் பெண்மணி. இரண்டாவது முறை விண்வெளிக்குச் சென்று திரும்பிய கடைசி நேரத்தில், கோடான கோடி மக்கள் முகத்தினை காணக் காத்துக்கொண்டிருந்தனர் ஆனால் காலன் அவரை மண்ணில் கால்வைக்க விடாமல் கோடான கோடி மக்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு  விண்ணுலகிற்கே எடுத்துச் சென்றுவிட்டது.

சரோஜினி நாயுடு - இவர் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத காலத்தில், தனியாகச் சென்று தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார் மட்டுமல்லாமல் கவிதைகளை எழுதினார், அதே நேரத்தில்  காந்தி போகவேண்டி இருந்த தென்னாப்பிரிக்காவிற்கு அவர் சார்பாக இவர் சென்றார்.சென்றதுமட்டுமல்லாமல் அங்கு அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இன்றளவும் பேசப்படுகிறது. கலப்பு திருமணம் செய்து கொண்டவர் என பல்வேறு விதமாக தனக்கென ஒரு தனி இடத்தினை ஏற்படுத்திக்கொண்டவர்.

அமிர்தானந்தமயி - கேரளாவின் ஒரு கடலோர கிராமத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் சுதா ராணியாகப் பிறந்த இவர் தனது இளைய பருவத்திலிருந்தே இறையருள் பெற்றார். கிருஷ்ணன் மீது அதீத ஈடுபாடு கொண்டு இருந்த இவர் ஒரு காலத்தில் இவர் சக்தியின் சித்தி பெற்று அதன் பிறகு இவரின் உலகெங்கும் சென்று மக்கள் மீது அன்பு செலுத்துங்கள் என்ற ஒரே மந்திரம் மட்டும் தான் அவர் எப்போதும் கடைப்பிடித்தது.                      

அன்னை தெரஸா - யூகோஸ்லாவில் பிறந்து உலகெங்கும் அவர் ஒரு இந்தியர் என்றே அறியப்படுகிறார். ஏனெனில் அவர் தனது முழு வாழ்க்கையையும் இந்திய மக்களின் துயரங்களுக்காகவே ஈடுபடுத்திக்கொண்டார். கல்கத்தாவிலிருந்த எல்லா சேரிகளுக்கும் சென்று தனது ஊழியத்தினை செய்ய ஆரம்பித்தார் அதற்காகச் செவிலியர் வேலையினை கற்றுக்கொண்டார். கடைசி வரைக்கும் தான் எடுத்துக்கொண்ட இந்த பொறுப்பிலிருந்து பின்வாங்காமல் முன்னேறியவர். உலகளவில் தொண்டுகள் புரிந்த எத்தனையோ கிருத்துவ புனிதர்களில் இவர் மட்டும் தான் இறந்த மிகச் சில வருடங்களுக்குள்ளேயே இந்த புனிதர் பட்டம் கிடைத்தது அவரின் தொண்டுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றே சொல்லவேண்டும்.

இது போன்ற சாதனை படைத்த பெண்மணிகளைப் பற்றிய அருமையான தகவல்களைத் தெரிந்து கொண்டதை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 செப்டெம்பர் 2021

No comments:

Post a Comment