Friday 17 September 2021

இந்திய நாத்திகமும் மார்க்க்சியத் தத்துவமும் - வாசிப்பனுபவம்

 இந்திய நாத்திகமும் மார்க்க்சீயத் தத்துவமும் 

ஆசிரியர் : நா. வானமாமலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 60


இந்த நூல் ஆத்திகத்தினையும் அதற்கு ஈடாக எவ்வாறு நாத்திகமும் மார்க்க சீயமும் தனது கருத்துக்களைப் பரப்புகிறது என்பது பற்றிய ஒரு  ஆய்வு நூலாகும். ஆசிரியர் நா.வானமாமலை அவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூலில் ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியத் தத்துவ சிந்தனை முழுவதும் கடவுள் கொள்கையை? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் முதல் கட்டுரையில் இந்தியாவில் பல்வேறுபட்ட மதகுருமார்கள் "இந்தியத் தத்துவம் ஆன்மீகமானது" அதன் உள்ளார்ந்த ஆன்மீக வலிமைதான், காலத்தை வென்று வரலாற்றில் தோன்றிய பல்வேறு ஆபத்துகளை எல்லாம் கடந்து இந்தியா இன்றளவும் நிலைத்து நிற்கிறது என்கிறார்கள். ராதாகிருஷ்ணன் அவர்கள் "இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் வாழ்க்கையின் மகத்தான உண்மையான கடவுளை அறிவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் அந்த கூற்றை ஆய்வு செய்த ஆசிரியர் இவரின் கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் ஒரு சிறுபான்மையினரின் கொள்கைகளே என்றும் சித்தனை உலகத்தில் மிகவும் சிறப்பான தருக்க வாதத்தில் "கடவுள் இன்மை"க் கொள்கையை இந்தியாய் தத்துவங்களில் பெரும்பாலானவை பேசுகின்றன என்கிறார்.

ஆத்திகர்களின் நோக்கமும் அதற்க்காக அவர்கள் கொண்டிருந்த  அறிவு எல்லாம் நாத்திகர்களின் கொள்கைகளைப் புரட்டுவதிலே குவிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் இவர்கள் "கம்யூனிசத்தினையும்" ஒரு மதம் என்று மக்களிடம் சொல்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கொள்கைக்கு எதிரான கொள்கையுடையவர் சொல்லுகிற சொற்களை தங்கள் கொள்கையிற்குச் சாதகமாகப் பொருள் மாற்றிக் கூறுவதும் இவர்களின் ஒரு விதமான புரட்டே என்கிறார்.

கடவுள் என்ற எண்ணம் மக்களிடையே தோன்றிய காலத்திலே நாத்திகமும் அதாவது கடவுள் மறுப்பு பற்றிய எண்ணமும் மக்களிடையே தோன்றியிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.    கண்ணாலே காணாததை நம்பாதே என்ற ஒரு புதிய குரலும் அப்போதே தோன்றியதுதான் இது அக்காலத்து நாத்திகம் என்கிறது.

இயற்கை வாதிகள் தங்கள் கூற்றுகளை, "பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளாலே நிகழ்கின்றன" என்றும் எவ்வாறு களிமண் சட்டியாக மாறுகிறது அதுபோலவேதான் ஒவ்வொரு உயிர் மற்றும் பொருள்களின் தன்மைகளை அதன் உள்ளிருக்கும் தன்மையே பொறுத்துத்தான் மாற்றம் கொள்கிறது என்று கூறுகின்றனர் என்கிறார்.

பண்டைய இந்திய நாத்திகம், கிரேக்க நாத்திகம்  மற்றும் தற்கால ஐரோப்பா நாத்திகம் என இவர்களின் நாத்திகத்தில்   கொண்டிருந்த  பல்வேறு  தத்துவ குறைபாடுகளை மார்க்சீயம்தான் களைந்து போட்டு  அதனை ஒரு முழுமையாக்கியிருக்கிறது என்கிறார்.    மனிதர்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து அவற்றைத் தானாகவே உற்பத்தி செய்யத் தொடங்கினர் அப்போது ஏற்பட்ட சில வளர்ச்சி மாற்றத்தில் சிலர் கடின வேளைகளில் செய்யாமல் தங்களை மதகுருவாகப் பாவித்து கீழ்த்தட்டு மேல்தட்டு என்ற பாகுபாட்டினை உண்டாக்கினார்கள். அதற்கு தங்களுக்குத் தேவைப்பட்ட ஒரு பலமாகவும் வழியாகவும் சிறந்த வலிமைமிக்க  சாதனமாகக் கடவுள் கொள்கையினை பின்பற்றினார்கள் அதுமட்டுமல்லாமல் சில வர்ண காரர்கள் வேலை செய்யக்கூடாது என்றும் அதற்காகச் சான்றுகளையும் உருவாக்கினார்கள் என்று குறிப்பிடுகிறார். பெரியார் ஏற்படுத்திய நாத்திகம் சிந்தனைகள் கடவுள் மறுப்பைப் பற்றி இல்லாமல் அதாவது மார்க்சியத்தினை போல அல்லாமல் வெறும் பார்ப்பன எதிர்ப்பை மட்டுமே பின்பற்றினார் அதுவே அவரின் கொள்கையின் மிகப் பெரிய குறைபாடாகத் தெரிகிறது என்று குறிப்பிடுகிறார்.        


நல்லதொரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்ட சிறப்பான புத்தகம். வாசித்து தெரிந்துகொள்ள வேண்டிய அதிக விவரங்கள் கொண்டிருக்கிறது இந்த புத்தகம்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

17 செப்டெம்பர் 2021  


 

No comments:

Post a Comment