Friday 3 September 2021

ரோஹிங்கியா முஸ்லிம்கள் - வாசிப்பனுபவம்

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

ஆசிரியர் : மருதன் 

கிண்டில் பதிப்பு 

விலை - 10  ரூபாய் ஐம்பது காசுகள் 

பக்கங்கள் 73


உலகில் வாழும் எல்லா உயிர்களும் இந்த மண்ணில் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்குச் சொந்தமான ஒரு இடம் இருக்கிறது அது போலவே மனிதர்களாகிய நமக்கும் ஒரு மண்ணின் அடையாளம் இருக்கிறது.

இந்த புத்தகம் அதுபோல அடையாளம் இல்லாமல் அழிக்கப்படும் ஒரு இனத்தின் நிலைப்பாடுகளையும் அவர்களுக்கு ஏற்படும் அல்லல்களையும் அவருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும் பற்றிப் பேசுகிறது.

ஓவர் இனம் அழிக்கப்படுகிறது. மதம் மற்றும்  மொழிக்கு அப்பாற்பட்டு மனிதம் என்ற ஒரே ஒரு நிலையினை மையமாக வைத்து எல்லா உயிர்களும் சமமானதே என்று நடத்தவேண்டும்.

பர்மாவின் வரலாற்றில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திலிருந்தே இந்த இனம் பர்மாவில் வசித்து வருகிறது.  காலம் கடந்து போகும் போது மனிதமும் மரணித்துப் போகிறது என்றே தான் சொல்லத் தோன்றுகிறது. 

சமூகம் என்பது ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்தது இல்லை ஆனால் அது ஒரு மனித குழுவினால் கட்டமைக்கப்படுகிறது. அதுபோலவே பர்மாவில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட இனக்குழுவில் பௌத்தர்கள் இந்த ஒரு இன குழுவினரை மட்டும் அழித்துக்கட்ட நினைக்கிறது. இது ஆரம்பமான நாட்களில் ஒவ்வொருவருக்கும் இவர்களைப் பற்றிய காழ்ப்புணர்ச்சிகள் புகுத்தப்படுகிறது அதன் வளர்ச்சியாகவே இவர்களுக்கும் ஏற்படும் வேற்றுமைகள் நாளடைவில் விரிசலாகி வன்முறையில் முடிகிறது.

ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவே இவர்களின் மீதான வெறுப்பினை மக்களிடையே புகுத்தினர்.

ஒரு நாட்டில் ஒருவன் பிறந்து வளர்ந்த பிறகு திடீரென ஒரு நாள் அந்த  மண்ணிலிருந்து அவனை துரத்தியடித்தால் அவன் எங்கே போவான், உலகின் எல்லா நாடுகளிலும் புகலிடம் தேடிப் போகமுடியுமா?. பிழைப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது ஒருவிதம் ஆனால் நீ இந்த மண்ணில் வாழ முடியாது வெளியேறு என்றால் அவன் எங்கே செல்வான்.

அப்படியாக அங்கிருந்து அண்டை நாடுகளுக்குப் புகலிடமாக ஏராளமான நபர்கள் சென்றனர்.    இந்த வகையில் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களும் துயரங்களும் எண்ணற்றவை. இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி போவதற்கு கள்ளத்தனமாகக் கப்பல்களில் பயணிக்கிறார்கள். அப்படி பயணிக்கும் போது அவர்களுக்கு  ஏற்படும் பசி பட்டினி, பாலியல் கொடுமைகள், அடித்துக் கொள்வது, சில படகுகள் விபத்துக்குள்ளாவது என பல்வேறு விதமான கடினமான சூழல்களைச் சந்தித்து வேறொரு நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாடுகள் அவர்களுக்கு அனுமதி தர மறுக்கிறது.

உலக நாடுகளில்  பெரும்பாலான நாடுகள் இத்தகைய வன்முறையினை கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் அவற்றுக்கெல்லாம் செவிகொடுக்காமல் அவர்களின் அதிகாரம் மேலோங்கிக் கொண்டேதான் இருக்கிறது.

இந்த இனத்திற்கு இழைக்கும் இந்த வன்மங்கள் ஒரு வகையில் ஒரு இனக் குழுவிற்கு முடிவுகட்ட வேண்டி அடியோடு அழிக்க எடுக்கும் நடவடிக்கையெல்லாம் ஒரு வகையில் அந்த இனத்திற்கு இழைக்கப்படும் சமூக அநீதி என்றே சொல்லவேண்டும்.

மொழி, மதம், இனம் என எல்லாவற்றுக்கு அப்பாற்பட்டு மனிதம் என்ற ஒரே ஒன்றின் அடிப்படியில் இவர்களும் சக மனிதர்கள் தானே? ஏன் இவர்கள் மட்டும் தனக்கென ஒரு நாட்டின் குடியுரிமை இல்லாமல் அலையவேண்டும் என்ற கேள்விகள் எழாமல் இல்லை.


தேவேந்திரன் ராமையன் 

03 செப்டெம்பர் 2021

 

                          

No comments:

Post a Comment