Saturday 31 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 5 - வாசிப்பனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 5

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50 

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  வெவ்வேறுவிதமான பின்னணி மற்றும் சூழல்களைச் சார்ந்த மூன்று நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 5".

டொனால்டு பார்தெல்மே (1931-1989):

அமெரிக்காவின் பின்-நவீனத்துவப் புனைவுலகின் முக்கிய பங்கு வகித்தவர். இவர் சிறுகதைகள், நாவல், பத்திரிக்கையாளர் எனத் தனது தடத்தினை பதித்தவர். இந்த தொகுப்பில் இவரின் இரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தை: 

இந்த கதை பெற்றோர்களுக்கு ஒரு பாடமாகவும் எப்படி குழந்தைகளை அணுக வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். தங்கள் குழந்தை செய்த முதல் தவற்றுக்காகத் தண்டனை கொடுக்கப்படுகிறது. 

குழந்தை, புத்தகத்தின் பக்கங்களைக் கிழிக்கிறது, அதற்காகத் தண்டனையாக நான்கு மணிநேரம் தனியறையில் தங்கவேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. ஆனால் இந்த தவறு மேன்மேலும் கூடிக்கொண்டே தான் போகிறது. குழந்தையினை திருத்துவதற்காகத் தண்டனை கொடுக்கிறோம் ஆனால் அந்த குழந்தை அந்த தண்டனையே எடுத்துக்கொண்டு தான் தனிமையில் இருப்பதற்காகவே மீண்டும் மீண்டும் அந்த தவற்றினை செய்யத் தொடங்குகிறது. 

குழந்தைகளுக்குக் கண்டிப்பு தேவைதான் ஆனால் அதுவே ராணுவ கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஒரு கட்டத்தில் தனது மகளின் போக்கினை உணர்ந்த அந்த தந்தை, தன் மகள் செய்வது ஒன்றும் பெரிய தவறில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவளோடு சேர்ந்து அவரும் சில பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குகிறார். அவளின் ஆனந்தமான வாழ்வுக்குள் அப்பாவும் நுழைகிறார்.


பள்ளிக்கூடம்:

இந்த கதை, பள்ளிக்கூடத்தில் சில்மிஷம் செய்யும் சுட்டி பசங்களைப் பற்றிய சுவாரஸ்யமான கதை. குழந்தைகளுக்குக் கல்வி மட்டும் சொல்லிக்கொடுப்பதல்ல பள்ளிக்கூடம். வாழ்க்கையையும் சொல்லிக்கொடுக்கும் இடம் தான் அது. அதற்காக மாணவ மாணவியர்கள் செய்யும் தவற்றுக்கு மரம் நடச் சொல்கின்றார்கள்.

ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுப்பது மற்றும் எவ்வாறு பெற்றோர்கள் மரணமடைந்து விடுவதும் அது சில விதமான துரதிர்ஷ்டம் தான். நம்மை விட்டுப் போனவர்களின் நிலையினை கேட்பதும் அதற்கு அவர்கள் இல்லாமல் போனது அவர்கள் இறந்து போயிருக்கலாம் வாழ்க்கையின் ஒரே அர்த்தம் இறப்பு தான் என்கிறார்கள் ஆனால் இறப்பு மட்டுமே அர்த்தம் கிடையாது. வாழ்வுக்கு வாழ்வு தான் அர்த்தம் தருகிறது என்கிறார். இயற்கை உயிரினங்கள் மடிந்து போனதும் இயற்கையால் நிகழும் பல்வேறு நிகழ்வுகளும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஜான் அப்டைக் (1932-2009): 

இயல்பான அன்றாட வாழ்வின் நிலைகளையும் அனுபவங்களையும் மிக நுட்பமாகக் கதைசொல்வதில் மிகவும் கை தேர்ந்தவர் இவர் . அமெரிக்க இலக்கியத்தில் கவிஞர், ஓவியர், சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் மற்றும் பத்திரிக்கை என பல்வேறு தளத்திலும் தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தினார்.

1983 ஆம் ஆண்டு "ஓ ஹென்ரி விருது" பரிசினை வென்ற "நகரம்" என்ற சிறு கதையினை பற்றித்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

நகரம்:  வியாபார சார்பாக வேறு  ஒரு நகரத்திற்குப் பயணிக்க வேண்டிய சூழலில், விமானத்தில் பயணிக்கிறார். அந்த பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை மிக நேர்த்தியாகவும் வியப்புடனும் சொல்லிச்செல்கிறார். 

மூன்று இருக்கைகள் இருக்கும் 747 விமானத்தில் நடு இருக்கையில் அமர்ந்து இருக்க நேரிட்டது மேலும் இரண்டு பக்கங்களும் தடிமனான இளைஞர்கள் அமர்ந்து இருப்பதால் ஏற்பட்ட நெரிசலும் வேதனையும் அந்த பயணம் முழுவதும் நீண்டுகொண்டே இருந்தது. இது மிகவும் அசௌரியமாகத்தான் இருந்தது. விமானத்திலிருந்து விடுதிக்குச் சென்ற அவருக்கு மேலும் வெறுப்பான அனுபவங்கள்தான் கிடைத்தது. 

அந்த விடுதியின் நிலைமையினை மிக அருமையாக வர்ணிக்கிறார். பிறகு அவர் சந்திக்க வேண்டிய சந்திப்புகள் எனத் திட்டமிட்டிருந்தார்.

அறையினுள் சென்ற கார்சனுக்கு, அறையின் சூழல் மேலும் அவருக்கு வெறுப்பூட்டியது. கூடவே வந்த அழையா விருந்தாளியான வலி அவரை பெரிதும் துன்பப்படுத்தியது.    

அலுவல் வேலையாக நகரத்திற்கு  வந்த கார்சனுக்கு, வரும் வழியில் ஏற்பட்ட வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் வருகிறது அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த நகரில் வந்து இறக்கிய முதல் அவர் திரும்பும் வரையில் பெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுகளையும் மிகவும் ரசித்துச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

இடையே, அவரின் பழைய மனைவி தொலைப்பேசி பண்ணி நெருடலாகப் பேசியதும், மெக்சிகோவில் இருக்கும் மகன் இவருடைய பணத்தில் பேசியதும், மகள் பேசாமலே இருந்தது என ஒவ்வொரு நிகழ்வினையும் கொஞ்சம் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை என மிகச் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார்.

எல்லாம் முடிந்து திரும்பும் வரை அந்த நகரத்தில் கார்சனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிக நுட்பமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் இந்த கதையின் வழியே.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

31 ஜூலை 2021 

No comments:

Post a Comment