Friday 30 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 4 - வாசிப்பு அனுபவம்

நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 4

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50 

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு வெவ்வேறுவிதமான சூழல்களைச் சார்ந்த நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 4".

இதாலோ கால்வினோ (1923-1985):

இத்தாலியின் மகத்தான கலைஞன், இருபதாம் நூற்றாண்டில் இவரின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்  என இவருடைய எழுத்துக்கள் கற்பனையும் அற்புதமும் கலந்து இழையோடும் நவீன இலக்கியமாகத் திகழ்ந்தது. அந்த வரிசையில் இவரின் "ஆதாம், ஒரு பிற்பகல்"  பற்றிய பதிவுதான் இங்கே பார்க்கப்போகிறோம்.

"ஆதாம், ஒரு பிற்பகல்" - இந்த கதையில் வரும்  மிக அழகான உரையாடல்களை மிகவும்  நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். புதிய தோட்டக்காரனின் மகன் நீண்ட கூந்தலுடன் அந்த தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறான். அந்த வீட்டு வேலைக்கு வந்திருக்கும் பெண் மரியா-நுண்ஸியாதா, இவள் வீட்டின் அடுப்படியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

தோட்டத்துக்குப் புதிதாக வந்த பையனை முதலில் பெண் என்று நினைத்துவிட்டு பிறகுப் பையன் என்று தீர்மானித்துக்கொண்டு அவனை அழைக்கிறாள் அவள்.

இப்படியாக ஆரம்பமாகும் இவர்களின் சந்திப்பு, அவன் அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறான், நான் உனக்கு ஒரு அற்புதமான பரிசு தருகிறேன் வா என்று அவள் கை பிடித்து தோட்டத்துக்குள் அழைத்துச் செல்கிறான். அங்குச் சென்றவுடன் இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகச் செய்து கொள்கின்றனர். அவன் பெயர் "லீபெர்சோ" என்று தெரிந்துகொள்கிறாள். அவள் அவனின் பெயரைக் கேட்டவுடன் சிரிக்கிறாள். இவர்களின் உரையாடல்கள் மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது.

அவன், அவளுக்கு முதலில் தேரையினை கொடுக்கிறான் அவள் பயப்படுகிறாள், பிறகு பல வண்ண சில்வண்டுகளைக் கொடுக்கிறான் அவற்றையும் அவள் வேண்டாமென்கபல்லிகளைக் கொடுக்கிறான் அதுவும் அவளை வெறுப்பாகிறது இடை இடையே வீட்டிற்குப் போகவேண்டும் பாத்திரம் தேய்க்க வேண்டும் வேளையிருக்கிறது என்கிறாள் ஆனால் அவன் உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவளை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் இப்போது தவளை ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் தவளையினை தருகிறான் அதுவும் அவளைக் கவரவில்லை பிறகு பாம்பு என அவன் கொடுக்கும் எதுவம் அவளுக்குப் பிடித்தாக இல்லை இறுதியில் அவளின் வீடு எஜமானி கூப்பிட்டவுடன் அவள் தோட்டத்தை விட்டு வீட்டுக்குள் விரைகிறாள். வந்து தனது வேலையினை தொடர்கிறாள். இறுதியில் அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவன் கொடுத்த எல்லாவற்றையும் அவளின் சமையல் அறையில் வைத்துவிட்டுச் சென்றான். அவளுக்கு எல்லாமே இப்போது இருக்கிறது.

இந்த கதை ஆதாம் ஏவாள் இவர்களின் தொட்டது பிரவேசமாகத் தான் தோன்றுகிறது அந்த நிகழ்வுகளைப் புனைவாகக் கொண்ட ஒரு அழகிய இளஞ்ஜோடிகளின் அற்புதமான உரையாடல்கள்.

யுகியோ மிஷிமா (1925-1970):

நவீன ஜப்பானிய இலக்கியத்தின் மேதை, கலாச்சார ஆளுமையாளர், அரசியல், கலை, இலக்கியம் என வாழ்வில் பல்வேறு கட்டங்களில் தன்னை உட்படுத்திக்கொண்டவர் இவர். இவர் தனது உயிரினை அவரே மாய்த்துக்கொண்டார். அதுவும் அவரின் சினிமாவில் வரும் ஒரு காட்சியினை போலவே அவரின் உயிரினை மாய்த்துக்கொண்டார்.

இவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான "மூன்று மில்லியன் யென்". என்ற சிறுகதையினை பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.   

"மூன்று மில்லியன் யென்" -  1960 ல் வெளிவந்த இந்த கதை ஜப்பானில் போருக்குப் பிந்தைய, அமெரிக்கமயமாக்கப்பட்ட நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவ பண மதிப்புகளுக்கான சீரழிவைக் கருத்தில் கொண்டு வெளிவந்தது தான். 

போருக்கு பிந்தைய ஜப்பானில் வாழ்நிலைக்குத் தேவையான பொருளாதாரம் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதனால் புதிதாகத் திருமணமான "கென்ஷோ" மற்றும் அவனின் மனைவி "கியோகோ" இவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலத்திற்க்காக  இன்றிரவு ஒரு முதியவளைச் சந்திப்பதற்காகச் செல்கின்றனர்.

அந்த சந்திப்பு புதிதாக இருக்கும் "நியூ வோர்ல்டுவணிக வளாகத்திற்கு வருகிறார்கள். இங்கு இரவு ஒன்பது மணிக்குத்தான் அவளுடைய சந்திப்பு அதுவரையில் அந்த வளாகத்தில் இருக்கும் அனைத்து மாடுகளுக்கும் செல்கின்றனர். அங்கே இருக்கும் எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்கத்தான் ஆசை ஆனால் அவர்களின் திட்டம் இங்கே தடை விதிக்கிறது.

புதிதாகத் திருமணமான இவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறப்பதே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் என்றும் அதற்கு முன்னாள் சரிவர எல்லாவற்றையும் தங்களின் திட்டமிட்ட படி  நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை.  இதற்காக இவர்களின் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் நன்றாக இருவரும் சேர்ந்து தீர்மானித்து பிறகுதான் அவற்றைச் செய்கின்றனர்  ஏனெனில் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அதனால் தான் இந்த முடிவு.

நியூ  வேர்ல்ட் வணிக வளாகத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு  அனுபவத்தையும் மிகவும் அழகாகவும் கொஞ்சம் நகைச்சுவையுடனும் சீராகக் கொண்டுசெல்கிறார். ஒரு விளையாட்டில் "மூன்று மில்லியன் யென்கிராக்கர் பரிசாகக் கிடைக்கிறது. அதனைச் சுவைத்துக்கொண்டே அந்த வளாகத்தினை சுற்றி வருகிறார்கள்.

புதிய தம்பதிகளுக்கு இடையே இருக்கும் நெருக்கமும் உல்லாசமும் ஆங்காங்கே மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த நாள் முடிந்த நிலையில் அவர்களுக்காகக் காத்திருந்த முதியவளிடம் வந்தார்கள். 

இந்த இளம் தம்பதிகள் தங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வின் அங்கமாக இருக்கும் ரகசியத்தினை செல்வ சீமாட்டிகளுக்கு விற்றுவிடுகின்றனர். மிகவும் வளமான எதிர்காலத்தை வாங்க அவர்கள் தங்களுக்குச் சிறந்ததை விற்றுவிட்டனர், மேலும் மிஷிமா போருக்குப் பிந்தைய ஜப்பானைப் பற்றியும் சொல்ல முடியும் என்று தெளிவாக நம்பினார்.      


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 ஜூலை 2021


No comments:

Post a Comment