Saturday 31 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 6 - வாசிப்பனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 5

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 49


ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு அருமையான ஜப்பானிய நவீனச் சிறுகதையினை பற்றியது தான் இந்த தொகுப்பு "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 6".

ஹாருகி முராகமி

உலகமெங்கும் பல லட்சக்கணக்கான வாசகர்களைத் தன்வசம் கொண்ட ஒரு சமகால ஜப்பானிய எழுத்தாளர். இவரின் முதல் நாவல் 1979 ல் வெளிவந்தது அது உலகமெங்கிலும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது அதன் பிறகு முராகமி  முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். அந்த வரிசையில் 2014 ல் வெளிவந்த "ஷெஹ்ரஜாத்என்ற கதையினை பற்றித் தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.

"ஷெஹ்ரஜாத்"

ஹாபரா, நான்கு மாதங்களுக்கு முன்பு டோக்கியோவிற்கு வடக்கே இருக்கும் ஒரு நகரத்திலிருந்து இந்த புதிய வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டான். அவனால் வெளியில் செல்லமுடியாத நிலையில் அவன் தனிமையில் இருக்கவேண்டியதாக இருந்தது அதற்காக அவனுக்கு ஒரு துணையாளராக ஒரு பெண் செவிலியர் நியமிக்கப்பட்டாள்.

அவளுக்கு அவன் பெயர் தெரியாது ஆனால் அவன் அவளுக்கு   "ஷெஹ்ரஜாத்"  வைத்துக்கொண்டான். அவள் வாரத்தில் சில நாட்கள் அவளுக்கு நியமிக்கப்பட்ட நேரத்தில் அவள் வருவாள். அவள் வரும்போது ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருள்கள், CD, புத்தகங்கள் மற்றும் அவனுக்குத் தேவையான பொருள்கள் என எல்லாவற்றையும் வாங்கி வருவாள். வீட்டிற்கு வந்த பிறகு வாங்கி வந்த பொருள்களைக் குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமாக அடிக்கி வைத்துவிட்டு பழையதும் காலாவதியானதுமான பொருள்களை அப்புறப்படுத்துவதும் என அவளின் பணிகளைச் சிறப்பாகச் செய்வாள்.

அவனுக்குத் தேவையான எல்லா சேவைகளையும் செய்வாள் பிறகு அவனால் வெளியில் செல்ல முடியாததால் அவன் ஒரு கூண்டுக் கிளிபோலவே இருக்கிறான். அவளுக்கு அவன் மீது இருக்கும் ஒரு வித ஈடுபாடு அவளை அவனுடன் கலவியில் ஈடுபடவைக்கிறது. இந்த நிகழ்வு ஒவ்வொருமுறையும் அவள் அவன் வீட்டிற்கு வரும் போது இல்லாமல் இருக்காது அது அவள் அவனுக்குச் செய்யும் ஒரு சேவையாகவே கருதினால். அவள் கலவிக்குப் பிறகு அவனுக்குக் கதை சொல்லுவாள்.

அவள் சொல்லும் கதையானது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்படியாக அவள் சொல்லும் கதைகளையும் அவள் வந்து போனதையும் அவன் அவனது நாட்குறிப்பில் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்கிறான். அவள் சொல்லும் கதைகள் உண்மையானதா அல்லது புனையப்பட்டது அல்லது இரண்டும் கலந்ததா என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதும் வருவதுண்டு ஆனால் அவன் அவளிடம் கேட்கவில்லை.  மாறாக அவன் அந்த கதையில் அவன் லயித்திருந்தான் அது அவனுக்குப் பெரிய ஆசுவாசமாக இருந்தது அதனால் அவள் வரும்போதெல்லாம் அவர்களின் கலவிக்குப் பிறகு அவன் அவளிடம் கதை சொல்லச் சொல்லிக் கேட்பான்.

அப்படியாக அவள் சொல்லிய கதைதான் அவனுக்கு மிகவும் பிரமிக்க வைத்தது. அவள் தனது படிப்பின் போது அவள் கூட படித்த ஒருவன் மீது அவள் கொண்டிருந்த ஒருவகையான ஈர்ப்பின் காரணமாக அவள் அவன் வீட்டிற்கு யாருமில்லாத நேரத்தில் புகுவதைக் கடைப்பிடித்து  வந்தால். அப்படியாக அவள் மூன்று முறை சென்றிருந்தாள், ஒவ்வொரு முறையும் அவளுக்குக் கிடைத்த கிளர்ச்சியின் வெளிப்பாடும், அந்த வயதில் அவன் மீது அவளுக்கு இருந்த எல்லையில்லா ஈர்ப்பும் அவளை அவனைத் தொடர வைத்தது. ஒவ்வொரு முறையும் அவள் அவனுடைய எதாவது ஒரு பொருளைத் திருடிவருவாள் அதற்கு ஈடாக அவளின் ஒரு பொருளை மறைத்து வடித்துவிட்டு வருவாள். அப்படியா மூன்று முறை வெற்றிகரமாகச் சென்றுவந்திருந்தாள் மூன்றாவது முறை அவனுடைய உடுத்திய சட்டையினை எடுத்துவந்துவிட்டாள். மீண்டும் அடுத்த முறை போகப்போகப் போனபோது அவளால் செல்ல முடியாமல் அந்த வீட்டில் புதிதாக ஒரு பூட்டு தொங்கியது. ஒருவேளை அந்த பூட்டு அவளின் இந்த கோமாளித்தனத்திற்கு ஒரு பூட்டாக மாறியது. 

இதுபோல அவள் இந்த கதையினை ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொண்டே இருப்பாள். இறுதியில் அவள் அடுத்த முறை சொல்கிறேன் என்று மீதம் வைத்திருந்த ஒரு கதையோடு அவள் வெளியேறுகிறாள். அவனுக்கு அவள் திரும்ப வருவாளா இந்த தொடர்பு நீடிக்குமா அல்லது துண்டித்துப்போகுமா என்ற கவலையுடன் தன் எண்ணங்களை நிதானித்து ஒரு நிலையில் நிறுத்தினான். பிறகு அவள் சொன்ன அந்த "லாம்பரேக்கள் எவ்வாறு பாறையின் அடியில் தாங்கிக்கொண்டு தனக்கு மேலே சிறிய மீன்கள் வருகிறதா என்று நோட்டமிடுகிறதோ அதைப் போலவே அவன் தன்னை நினைத்துக் காத்திருக்கிறான்.

இது ஒரு அருமையான கதை. இருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியின் சுகத்தினையும் அவள் அவன் மீது கொண்டுள்ள பற்றும் அவனுக்காக அவள் செய்யும் அந்த சேவைகளையும் மிகவும் அருமையாகச் சொல்லிச்செல்கிறார் முராகமி.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 
31 ஜூலை 2021

No comments:

Post a Comment